Sunday, July 26, 2009

என் விடுகதைக்கு விடையை சொன்னா....

1. காலில்லாத பந்தலைக் காணக் காண விநோதம். அது என்ன?

2. கரையும் உப்பு அல்ல; தண்ணீரில் குளிப்பான் மனிதனும் அல்ல. அது என்ன?

3. கண் உண்டு பார்க்காது; கால் உண்டு நடக்காது. அது என்ன?

4. இரைச்சலோடு செல்லும் விமானம் அல்ல; இடியோசை தரும் வானமும் அல்ல. அது என்ன?

5. இதயம் போல் துடிப்பிருக்கும்; இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?

6. இனிப்புக்கு எதிரி; இதழுக்கு உவமை. அது என்ன?

7. அறைகள் அறநூறு; அத்தனையும் ஓர் அளவு. அது என்ன?

8. அகன்ற வாய் உடையவன்; திறந்த வாய் மூடாதவன். அது என்ன?

9. அடித்தால் விலகாது; அணைத்தால் நிற்காது. அது என்ன?

10. அந்தரத்திலே பறக்கும் பறவையும் அல்ல; அழகான வாலுண்டு குரங்கும் அல்ல. அது என்ன?

11. அம்பலத்தில் ஆடும் அழகு தேவதைக்கு அங்கம் முழுவதும் தங்கக் கண்ணாடி. அது என்ன?

12. அன்றாடம் வீதியில் மலரும்; அனைவரையும் கவரும். அது என்ன?

13. காய்க்கும் பூக்கும் கலகலக்கும்; ஆனால், காக்காய் உட்கார இடமில்லை. அது என்ன?

14. சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது. அது என்ன?

15. செங்கல் கட்டடம்; அதற்குள் பொன் கட்டடம்; அதற்குள்ளே வெள்ளிக் கட்டடம்; அதற்குள் திருக்குளம். அது என்ன?

12 பேரு சொன்னாங்க:

Anonymous said...

10. பட்டம்

said...

5. கடிகாரம்

said...

இருவரும் சரியாய் சொன்னீர்கள்! மற்றது?

said...

14.Red Chily

said...

Good Renga :-)

said...

2. CROW

said...

No Rajesh, its soap!

said...

1.வானம்
6.கோவைப்பழம் ?
9.தண்ணீர்

said...

கலக்கிடீங்க பாலா, மூன்றும் சரி!

said...

8.andaaaa

said...

andaaaaaa!!!!!!!!!!!1

said...

8.andaaaa