Tuesday, July 14, 2009

வாமனன் = காலடிக்குள் பூமி சிக்கவில்லை | திரைவிமர்சனம்

மாடல் லஷ்மிராய் நீச்சல் உடையில் வலம் வருவதை படம் பிடித்துக் கொண்டிருக்கும் கேமரா பொருந்திய ஹெலிகாப்டர் பழுதடைவதால் தனது கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மாட்டிக் கொள்கிறது. அதன் அருகே முதல்வராக பதவியேற்கவிருக்கும் டெல்லிகணேஷை சம்பத் கொலை செய்கிறார். இந்த காட்சி கேமராவில் பதவி செய்யப்படுகிறது. அந்த வீடியோ டேப் லஷ்மிராய் மற்றும் அவருடைய நண்பரிடம் அறிந்த சம்பத்தின் ஆட்களும், போலீசும் துரத்துகின்றன.


லஷ்மிராயும், அவரது நண்பரும் கொலை செய்யப்படுகின்றனர். இதற்கிடையில் பெரிய நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வரும் ஜெய், இந்த கொலை வழக்கில் மாட்டிக் கொள்கிறார். போலீஸ் ஜெய்-ஐ துரத்த ஓடி..... ஓடி........ ஓய்ந்து போன நிலையில், தம்மை இக்கொலை வழக்கில் திட்டமிட்டு சிக்கவைத்துள்ளார்கள் என்பதை அறிந்து, அவற்றிலிருந்து எப்படி விடுபடுகிறார் என்பது தான் கதை.


கதை ஆரம்பிதிலிருந்தே லஷ்மிராயை சுற்றித்தான் நடக்கிறது. ஜெய் பாட்டின் மூலம் அறிமுகமாகி சுற்றிக் கொண்டிருக்கிறார். ஜெய்-ஐ கதைக்குள் கொண்டுவர இயக்குனர் பயன்படுத்தி ரகுமான் கதாபாத்திரம் படத்திற்கு ப்ளஸ்ஸாக இருந்தாலும், தாமதமாக செய்ததினால் அதை பொறுத்துக் கொள்ளும் மனநிலையில் மக்கள் இல்லை. அதுவரை ஆர்டியன்ஸை காமெடி காட்சிகளில் கவர் பண்ணலாம் என்று நினைத்த இயக்குனருக்கு தோல்வி தான். சந்தானம் ஜெய் முதல் பாதியில் காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்கள். அதனுடைய பயன் சந்தானம் ஊர்வசியுடன் சேர்ந்து சமையல் செய்யும் காட்சியில் மட்டும் தான் கிடைக்கிறது. ஜெய் தனது இரண்டு படங்களிலும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியவர். இப்படத்தில் தனக்கென்று ஒரு ஸ்டைலை கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார். ஆனால் பாவம் நடிகர் விஜய்-யையே அவரது நடிப்பு ஞாபகப்படுத்துகிறது.


லஷ்மிராய் முதல் காட்சியிலேயே பிகினி நீச்சல் உடையில் தோன்றி ஆர்டியன்ஸை நிமிரச் செய்ய வைக்கிறார். தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துவிட்டு இறந்துவிடுகிறார். புதுமுகம் ப்ரியா, தனக்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை, ஜெய்க்கும் தனக்கும் தான் சம்பந்தம் என்பது போல இரண்டு பாடல்கள் ஜெய்யுடன் நடப்பது என சில காட்சிகளில் தோன்றுகிறார்.


ஊர்வசி எப்பவும் போல வெகுளித்தனமான அம்மாவாக வந்து வெறுப்பேற்றுகிறார். சந்தானம் தலைவாசல் விஜய், ரோகினி என நடிகர் பட்டாளம் ஒருபுறம் இருக்க, ரகுமானின் என்ட்ரி படத்தில் கொஞ்சம் விறுவிறுப்பை சேர்க்கிறது. ரகுமான் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


யுவன்சங்கர் ராஜா அண்மையில் வெளிவந்த தமது படங்களைக் காட்டிலும், பரவாயில்லை என்னும் அளவிற்கு இப்படத்தில் மெட்டுக்கள் போட்டிருக்கிறார். பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது தெரிகிறது. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு பலம். டாப் ஆங்கில் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் உழைப்பு தெரிகிறது.


இயக்குனர் அகமது, வாமனனை படத்தின் இடைவேளைக்கு பின்புதான் காண்பிக்கிறார். அதுவரை காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். பீகார் கடத்தில் கும்பலை மாட்டிவிட்டு, ஜெய் தப்பிப்பது நாயகிக்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்கும் மணல் ஓவியம் போன்றவை இயக்குனரின் அனுபவத்தை காட்டுகிறது. ரகுமானின் கதாபாத்திரத்தில் உள்ள விறுவிறுப்பு போன்றவை படத்தின் காட்சிகளில் இல்லாமல் போயிற்று. ஜெய் தாம் நடிக்கும் படங்களிலேயே வாமனன் தான் 100 நாட்களை தாண்டும் என்ற நம்பிக்கை வைத்திருந்தார். வாமனன் அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது.

5 பேரு சொன்னாங்க:

said...

நல்ல வேளை நானும் சிக்கவில்லை!!!

said...

great escape!

said...

முத்திரை திரைப்படத்தின் கதையும் இதேதான்..!

ஒரே ஆங்கிலப் படத்தில் இருந்து சுட்டுவிட்டார்களோ..!

said...

இருக்கலாம் உண்மைத்தமிழரே!

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்