Wednesday, January 21, 2015

சிதம்பர ரகசியம் - நம் முன்னோர்களின் அதிசயம்

கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜர் க்கு மட்டுமே வெளிச்சம் - இருப...்பினும் இப்படியும் நம் முன்னோர்களால் செய்ய முடிந்ததா ?
 
 
 
எப்படி இதை செய்தார்கள் - என்பதே பெரும் ரகசியம் தான் ....
இணையத்தில் இதை படித்து விட்டு என்னை தொற்றி கொண்ட வியப்பு இன்னும் விலகவில்லை முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது..
அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்க ு பின் இருக்கும் சில அற்புதங்கள் சிலவற்றை நாம் அறிவோம் ..
பல வற்றை அறிய விஞானம் - ஆராய்ச்சி இருந்தும் அதன் முக்கியத்துவம் புரியாததால் சீண்டுவார் இல்லாமல் இருக்கின்றன ...
அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்...
அறிவியல் ,பொறியியல்,புவி யியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்....
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).
(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது,
இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவிய ியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது , இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்" மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள் ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

பெண்கள்....

பெண்கள்.... அர்த்தநாரீஸ்வர சிவனின் பாதி... காளி ரூபமாய் கற்களில் மீதி... கடவுளான பெண்ணுக்கே அவ்வளவுதான் மதிப்பு என்றால் தினம், தினம் குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும், தங்களுடைய வாழ்க்கைக்காகவும் போராடும் சாதாரண பெண்களின் நிலைமை இன்னும் மோசம்தான். 2014 இல் உலகம் அழியும் என்ற செய்தி கேட்டு பயந்து, பதறியவர்களுக்கு அன்று தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்...

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் பிறப்பிற்கும் காரணமான பெண்களின் அழிவுதான் அது என்பது. காலம்காலமாக ஆண்களின் மார்புப் பதக்கமாக மட்டுமே பெண்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கும் மோசமான ஆண் வர்க்கத்தின் பொறாமை மற்றும் சதை தின்னும் நர ஆசைக்கு பலியான பரிதாப பெண்கள்தான் நிர்பயா முதல், உமா மகேஸ்வரி முதல், இன்றைய வேலூர் சிறுமி வரை. "உன்னை நீ என்னிடம் இருந்து காப்பற்றிக் கொள்ள வேண்டுமானால் ஆடைகளால் உன் அவயங்களை மறைத்துக் கொள், பாலியல் இச்சையைத் தூண்டாதே, இரவில் நடக்காதே" என்று பெண்களுக்கு மட்டுமே அறிவுரைகள் வழங்கத் தயாராக இருக்கும் நாம் ஆண்களுக்கு "பெண்ணை இச்சையுடன் பார்க்காதே... மனைவியைத் தவிர அனைவரும் சகோதரிகள்...

சதை தின்பதற்கு அலையாதே" என்ற அறிவுரைகளை வழங்கத் தயாராக இல்லை. இதில் விதிவிலக்காக 10 சதவீத ஆண்கள் நல்லவர்களாக இருந்தாலும், 90 சதவீதம் பேர் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணகர்த்தாக்களாகத்தான் உள்ளனர். எதற்கெடுத்தாலும் கையில் தயாராக பதிலையும், வாயில் வர்ணம் பூசிய வார்த்தைகளையும், எதிரெதிர் வார்த்தை தாக்குதல்களையும் நிகழ்த்தத் துணிந்தவர்களும் கூட இதனை மறுக்க முடியாது. மறுத்தால் கண்டிப்பாக அவர்களும் இந்த கூட்டத்தில் ஒருவர்தான் என்பதுதான் நம்மால் மறுக்க முடியாத உண்மை. வாச்சாத்தி வன்கொடுமை, டெல்லி நிர்பயா, பத்திரிக்கை பெண், பொறியாளர் உமா மகேஸ்வரி, பெங்களூர் பள்ளி மாணவி, எல்கேஜி குழந்தை, 80 வயது மூதாட்டி, உபேர் டாக்சி பெண் பயணி, வேலூர் மாணவி என்று குழந்தை தொடங்கி எந்த வயது பெண்களுக்கும் இங்கு பாதுகாப்பில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. பெண்ணியம் பேசும் அமைப்புகளும் கூட இவ்விஷயத்தில் முழுமையாக போராடுவதற்கு தயாராக இல்லை.

வீட்டில் பெற்ற தந்தையைக் கூட நம்ப முடியாமல், அண்ணனை மதிக்க முடியாமல், தம்பியிடம் அன்பு பாரட்ட முடியாமல் இன்று வேறொரு வகையில் பெண்கள் ஒடுக்கப்படுகின்றார்கள் என்பதுதான் காலத்தின் கசப்பான உண்மை. "ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் போது, ஒரு சந்ததியே அங்கு அடியோடு வேரறுக்கப்படுகின்றது" என்பது சாட்டையடி நெருப்பாக என்று ஆண்களின் மனதில் பதிகின்றதோ அன்றுதான் பெண்களுக்கு முழுச்சுதந்திரம் கிடைக்கும். ஒரே ஒரு நிமிடம் கண் மூடி யோசித்துப் பார்த்தால் எல்லா ஆண்களுக்கும் புரியும்.... நாம் உலகிற்கு வர உதவிய ஒரு புனிதமான கருவறை வழியை, கேவலம் ஒரு நிமிட இச்சைக்காக கல்லறை சமாதியாக நமக்கு நாமே மாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்ற விஷயம். பெண்களுக்கு.... "

உன்னைக் காப்பாற்றிக்கொள்ள நீயே ஆயுதம் எடுக்க வேண்டிய நேரம் இது. ஏனெனில், உன்னைக் காப்பாற்ற உன் குடும்பமோ, கல்வி நிறுவனமோ, அரசோ, பக்கத்து வீட்டு மனிதர்களோ, மதமோ, இனமோ, சட்டங்களோ தயாராக இல்லை". கடைசியாக.... பெண்களை ஆடை உரித்துப் பார்க்கத் துடிக்கும் ஆண்களும், போகும் வழியெல்லாம் பின் தொடரும் காமம் நிறைந்த கண்களின் நிழல்களும், கேளிக்கை என்ற பெயரில் பெண்ணை நுகர்வுப் பொருளாக பயன்படுத்துபவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றே ஒன்று .... "ஒரு பெண்ணை தவறான இச்சையோடு பார்ப்பவன் தன்னுடைய தாயையே தரக்குறைவாய் பார்ப்பவனுக்கு சமமாவான்" என்பதுதான்... பெண் இனத்தின் அழிவு ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்குத் தானே தோண்டிக்கொள்ளும் சவக்குழி... சதைத் திமிர் பிடித்த ஜென்மங்கள் திருந்துவார்களா இனியேனும்?