Thursday, December 17, 2009

பெற்​றோர்​கள் சற்று சிந்​திப்​பார்​களா?

தங்​கள் குழந்​தை​க​ளைப் பள்​ளி​க​ளில் சேர்ப்​ப​தோடு தங்​க​ளது கடமை முடிந்​து​ விட்​டது எனக் கரு​தா​மல் தங்​கள் பிள்​ளை​க​ளின் செயல்​பா​டு​க​ளைப் பெற்​றோர்​கள் கண்​கா​ணித்து வர​வேண்​டி​யது இன்​றைய காலத்​தின் கட்​டா​ய​மாக மாறி வரு​கி​றது.​

​ ​ தொடக்க நிலை​யைக் காட்​டி​லும் உயர் மற்​றும் மேல்​நிலை வகுப்​பு​க​ளில் பயி​லும் மாண​வர்​க​ளைக் கண்​டிப்​பா​கப் பெற்​றோர்​கள் கவ​னத்​து​டன் கையாள வேண்​டும்.​ ஏனெ​னில் வளர்​இ​ளம் பரு​வத்​தில் உள்ள இவர்​க​ளின் ஒவ்​வொரு செய​லுமே அவர்​க​ளுக்​குச் சரி​யா​கப் படும் என்​ப​தால் இந்​தப் பரு​வத்​தில் அவர்​கள் மீது கண்​டிப்​பாக ஒரு கண் வைக்க வேண்​டும் என்​பதை யாரா​லும் மறுக்க முடி​யாது.​

​ ​ முன்​பெல்​லாம் பள்​ளி​க​ளில் ஆசி​ரி​யர்​க​ளைப் பார்த்​தால் மாண​வர்​க​ளுக்​குப் பயம் கலந்த மரி​யாதை வரு​வது இயல்​பாக இருந்​தது.​ அன்​றைய கால​கட்​டத்​தில் மாண​வர்​க​ளாக இருந்​த​வர்​கள் தற்​பொ​ழுது உயர்ந்த நிலைக்கு வந்த பின்​னர் தங்​க​ளின் இந்த உய​ரிய நிலைக்​குக் கார​ணம் ஆசி​ரி​யர்​கள்​தான் என்​பதை உணர்ந்து அவர்​க​ளுக்கு பல்​வேறு உத​வி​க​ளைச் செய்து வரு​வ​தை​யும்,​​ வீடு கட்​டிக் கொடுத்​துக் கொண்​டா​டி​ய​தை​யும் இன்​றைய ஒவ்​வோர் ஆசி​ரி​ய​ரும் ஆச்​ச​ரி​யத்​து​டன் பார்க்​கின்​ற​னர்.​

​ ​ ​ இன்றோ பெரும்​பா​லான மாண​வர்​கள் பள்​ளி​க​ளில்​கூட ஆசி​ரி​யர்​களை மதிப்​ப​தில்லை என்று ஆசி​ரி​யர் வட்​டா​ரங்​கள் வருத்​தத்​து​டன் தெரி​விக்​கின்​றன.​ கார​ணம் சினி​மா​வி​லும்,​​ தொலைக்​காட்சி நாட​கங்​க​ளி​லும் காமெடி நடி​கரை ஆசி​ரி​ய​ரா​கவோ,​​ பேரா​சி​ரி​ய​ரா​கவோ காட்டி,​​ அவர்​க​ளைக் கொண்டு ஆசி​ரி​யர்​களை எவ்​வ​ளவு மோச​மா​கச் சித்​தி​ரிக்க வேண்​டுமோ அந்த அள​வுக்கு மோச​மா​கக் காட்​டு​கின்​ற​னர்.​

​ ​ இக்​காட்​சி​க​ளைப் பார்த்​து​விட்டு மறு​நாள் பள்​ளிக்கு வரும் மாண​வ​னுக்​குத் தாமும் அதே​போல் செய்​தால் என்ன என்று எண்​ணத் தோன்​று​கி​றது.​ ​ விளைவு...​ மதிக்​கத்​தக்​க​வர் அல்ல ஆசி​ரி​யர் என்ற எண்​ணம்​தான் அவ​னுள் வளர்​கி​றது.​

இது சாதா​ர​ணம்.​ இப்​படி உள்​ளூர் ஊட​கங்​க​ளும்,​​ வெளி​நாட்டு ஊட​கங்​க​ளும் போட்டி போட்​டுக் காட்​டும் காட்​சி​கள் மாண​வ​னின் மன​தில் நஞ்சை விதைக்​கின்​றன.​ ​ ஊட​கங்​கள் வரு​வ​தற்கு முந்​தைய கால​கட்​டத்​தில் ஒரே பள்​ளி​யில் பயி​லும் மாணவ,​​ மாண​வி​கள் ஒரு​வ​ருக்​கொ​ரு​வர் பேசு​வ​தைத் தாங்​க​ளா​கவே தவிர்த்து வந்​த​னர்.​ ஆனால் இன்றோ ஊட​கங்​கள் எப்​ப​டிச் சந்​திக்​க​லாம்..​ அதற்​கான வழி​மு​றை​கள் என்ன...​ மாட்​டிக் கொண்​டால் தப்​பிப்​ப​தற்​கான வழி​கள் என்ன என்று அத்​த​னை​யும் பட்​டி​யல் போட்​டுக் ​ காண்​பிக்​கின்​றன.​ இப்​ப​டிப் பழத்தை உரித்து வாயிலே கொடுத்​தால் பாவம் அவர்​கள் என்ன செய்​வார்​கள்.​

​ ​ இப்​படி ஊடக வெளிச்​சத்​தில் கரைந்து பள்​ளி​க​ளில் வைத்தே மது அருந்​திய மாண​வர்​க​ளை​யும்,​​ ​ இன மோதல்​க​ளில் ஈடு​பட்ட மாண​வர்​க​ளை​யும்,​​ ​ பெண் ஆசி​ரி​யை​க​ளைக் கேலி செய்த மாண​வர்​க​ளை​யும்,​​ சக மாண​வி​க​ளைக் கிண்​டல் செய்த மாண​வர்​க​ளை​யும்,​​ ​ தேவை​யற்ற புகைப்​ப​டம் எடுத்த மாண​வர்​க​ளை​யும்,​​ படிக்​கா​மல் சுற்​றித்​தி​ரி​யும் மாண​வர்​க​ளை​யும் ஆசி​ரி​யர்​கள் தண்​டிக்க முடி​யாத நிலையே இன்று நில​வு​கி​றது.​

​ ​ அத​னை​யும் மீறித் தண்​டனை கொடுத்​தால் கல்​வித்​துறை அதி​கா​ரி​க​ளின் விசா​ர​ணைக்கு அந்த ஆசி​ரி​யர் உள்​பட வேண்​டும்.​ ​ இத​னைக்​கூட பொறுத்​துக் கொள்​ள​லாம்.​ ஆனால் தண்​டனை கொடுக்​கப்​பட்ட மாண​வர்​க​ளின் பெற்​றோர்​கள்,​​ ஏதோ,​​ இவ​ரா​வது தங்​க​ளது மகன் மீது பற்​றுக் கொண்டு தீய வழி​யில் செல்​லா​மல் திருத்​தி​னாரே என்று மகிழ்ச்சி கொள்​வ​தில்லை.​ மாறாக என் மகனை நீங்​கள் ​(நீ)​ எவ்​வாறு கண்​டிக்​க​லாம் என ஆசி​ரி​யர்​களை நோக்கி அம்​பினை எய்​வ​து​தான் ஆசி​ரி​யர்​க​ளால் ஏற்​றுக் கொள்ள முடி​யா​மல் இருப்​ப​தாக ஆசி​ரி​யர்​கள் தெரி​விக்​கின்​ற​னர்.​

​ ​ எனவே நடக்​கும் நிகழ்​வு​களை அமை​தி​யாக இருந்து கொண்டு வேடிக்கை பார்ப்​பதை தவிர ஆசி​ரி​யர்​க​ளுக்கு வேறு ஒன்​றும் செய்ய முடி​ய​வில்லை.​

நல்ல மதிப்​பெண் எடுக்க வேண்​டும் என்​ப​தற்​குக்​கூட மாண​வர்​களை ஆசி​ரி​யர்​கள் கண்​டிக்க முடி​ய​வில்லை.​ கார​ணம் இன்​றைய மாண​வர்​கள் எளி​தில் உணர்ச்​சி​வ​சப்​ப​டக்​கூ​டி​ய​வர்​க​ளாக இருக்​கின்​ற​னர்.

​ இவ்​வி​ஷ​யத்​தில் மாண​வர்​களை விட மாண​வி​க​ளைக் கண்​டிப்​ப​தில் ஆசி​ரி​யர்​க​ளுக்​குப் பெரும் அவ​தி​யுள்​ளது.​ இப்​ப​டிப் பள்​ளி​க​ளில் மனம் போன போக்​கில் நடந்து வரும் மாண​வர்​க​ளைக் கண்​டிப்​ப​தில் ஆசி​ரி​யர்​க​ளுக்கு இருக்​கும் நடை​மு​றைச் ​ சிக்​கல்​களை நாளி​தழ்​கள் மற்​றும் செய்தி ஊட​கங்​க​ளின் ​ மூலம் நன்கு தெரிந்து கொள்​ளும் மாண​வர்​கள்,​​ அதைத் தங்​க​ளுக்​குச் சாத​க​மாக்கி முடிந்​த​வரை தப்​பித்து வரு​கின்​ற​னர்.​

​ ​ மெட்​ரிக் பள்​ளி​க​ளில் ஏரா​ள​மான பணம் கொடுத்​துத் தங்​க​ளது பிள்​ளை​க​ளைச் சேர்க்​கும் பெற்​றோர்​கள்,​​ தொடர்ந்து பள்​ளி​க​ளின் ஆசி​ரி​யர்​க​ளோடு தொடர்​பு​கொண்டு விசா​ரித்து வரு​வ​தால் அங்கு மாண​வர்​கள் செய்​யும் தவறு குறைக்​கப்​ப​டு​கி​றது.​

ஆனால்,​​ அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​க​ளில் தங்​க​ளது பிள்​ளை​க​ளைச் சேர்க்​கும் பெற்​றோர்​க​ளில் பலர் சேர்க்க வரு​வ​தோடு தமது கடமை முடிந்​து​விட்​ட​தா​கக் கருதி பின்​னர் மாற்​றுச்​சான்​றி​தழ் வாங்​கு​வ​தற்​குத்​தான் வரு​கின்​ற​னர்.​

​ தங்​க​ளது மகன் அல்​லது மகள் பள்​ளிக்கு ஒழுங்​கா​கச் செல்​கி​றார்​களா?​ இல்​லையா?​ என்​பது கூட பல பெற்​றோர்​க​ளுக்​குத் தெரி​வ​தில்லை.​ இன்​னும் சொல்​லப்​போ​னால் சில​ருக்​குத் தங்​கள் பிள்​ளை​கள் எந்த வகுப்​பில் படிக்​கி​றார்​கள் என்​ப​து​கூ​டத் தெரி​வ​தில்லை என்​ப​து​தான் உச்​ச​கட்ட வேதனை.​

​ ​ இன்​றைய கால​நிலை மாற்​ற​மும்,​​ ஊட​கங்​க​ளின் போக்​கும் எந்த அள​வுக்கு மாண​வர்​க​ளின் நல​னைப் பாதித்து வரு​கின்​றன என்​பதைப் பெற்​றோர்​கள் உணர்ந்து,​​ அவர்​க​ளைத் தொடர்ந்து கண்​கா​ணிக்க வேண்​டும்.​ தொடர்ந்து பள்​ளி​க​ளின் ஆசி​ரி​யர்​கள்,​​ சக மாண​வர்​க​ளின் பெற்​றோர்​க​ளு​டன் தொடர்​பு​கொண்டு தனது பிள்​ளை​யின் நிலை என்ன என்​பதை அறிந்து கொள்ள முற்​பட வேண்​டும்.​

​ ​ எழுத்​த​றி​வித்​த​வனை இறை​வ​னா​கக்​கூட கருத வேண்​டாம்.​ மனி​த​னா​கக் கரு​தித் தங்​க​ளது பிள்​ளை​க​ளின் எதிர்​கால ​ வாழ்க்​கைக்​கா​கத்​தான் ஆசி​ரி​யர் செயல்​ப​டு​கி​றார் என்ற எண்​ணத்​து​டன் ஒவ்​வொரு பெற்​றோ​ரும் செயல்​பட்​டால் எதிர்​கால இந்​தி​யா​வின் நம்​பிக்கை நட்​சத்​தி​ர​மாக ஒவ்​வொ​ரு​வ​ரின் மக​னும்,​​ மக​ளும் உயர்​வார்​கள்.​ பெற்​றோர்​கள் சற்று சிந்​திப்​பார்​களா?

Sunday, November 29, 2009

நீலகிரி மரணத்தின் "ஓலகிரி" ஆகாமல் மாற வழி

அதீத ஆபத்தையும், இழப்பையும் உண்டாக்கியுள்ள, உண்டாக்கி வரும் நிலச்சரிவுகள் எப்படி ஏற்படுகின்றன? என்ற கேள்விக்கு பல விதமான உணர்ச்சிகரமான விடைகள் மிகுந்த ஆத்திரத் துடன் நமக்குக் கிடைத்தாலும், விஞ்ஞானப் பூர்வமான, உணர்வுப் பூர்வமான விடை என்ன? என்பதையும் நாம் அவசியம் பார்க்க வேண்டும்.

பொதுவாக எந்த மலைப் பிரதேசத்திலும், மலைப்பகுதியின் பரந்த மையப் பகுதிகளில் சரிவு நிகழ்வதே கிடையாது. அதே சமயம் மலையின் சரிவுப் பகுதிகளில் தான் இது அதிகம் நிகழ்கிறது. இதற் கான காரணங்கள் தான் என்னென்ன?முதலாவதாக மலைகளில் மட்டுமே இந்தச் சரிவுகள் நிகழ்வதிலிருந்து நமக்கு ஒரு உண்மை புலப்படும். அதாவது பாறைகளால் உருவாகியுள்ள மலைப் பகுதிகளின் மேல், குறிப்பிட்ட உயரத்தில், ஒரு அடி முதல் 20, 40 அடிகள் வரை என்று மண் மேவியுள்ளது. இது பல நூறு வருடங்களாக இறுகிப் படிந்துள்ளது.இந்நிலையில் மழைக் காலம் துவங்கி மழை விட்டு விட்டோ, தொடர்ந்தோ பெய் யும் போது மழை நீர் உட் புகுந்து, உட்புகுந்து மண் பகுதியை ஆக்கிரமிக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு தான் மிக முக்கிய நிகழ்வு.இந்த மழைநீர் சிறிது ஆழம் சென்ற பிறகு தொடர் மழை இல்லை என்றால் மீண்டும் அந்த மண் பகுதி காய்ந்து இயல்பு நிலைக்கு வந்துவிடும்.பிறகு சிறிது காலம் கழித்து மழை என்றாலும் கவலை இல்லை.

அப்படி இல்லாமல் தொடர் மழை அதுவும் கனமழை அதுவும், வெயிலே காணாத நிலை என்றால் நிச்சயம் நிலச்சரிவுக்குக் கொண் டாட்டம் தான். எப்படி?15 முதல் 20 அடி உயரத்திலான மண்பகுதிக்குள் மழை நீர் அந்த இடத்தின் மூலமோ பக்கத்து இடங்களின் மூலமோ அடைந்து இந்த அளவு மண் முழுவதுமே ஈரமாக்கப்படும் போது முற்றிலும் இதன் அடிப்பகுதியில் தாங்கும் பாறையின் தொடர்பை இழந்து விடுகிறது. உடனடியாக மரம், செடி, வீடுகளுடன் சரிவை அடைகிறது. இது தவிர்க்க இயலாத ஒன்று.காரணம் மரம், செடி, வளர்க்கும் போதோ, வீடுகள் கட்டும் போதோ அந்த இடத்தின் மண் ஆதிக்க உயரம் என்ன என்பதை யாரும் அறிய முற்படுவதே இல்லை.அவசரம், மேலும் அறியாமை, குருட்டு நம்பிக்கை இதற்கான காரணங்கள். ஆக மழை தொடர்ந்து தாக்கும் போது ஈரமான முழுப் பகுதியும் பாறைகளுடனான தொடர்பை இழந்துவிடுகிறது. சரிகிறது.

நிலைமை இப்படி இருக்க, தற்போதைய சரிவுகளின் தீவிரத்திற்கான மற்ற காரணங் களோ மிக மிக பயமூட்டுவதும், சிந்திக்க வைப்பதுமானது. அது என்ன?அதுதான் 2004க்குப் பிறகான, அதாவது சுனாமி தாக்குதலுக்குப் பிறகான புவிநிலை. அப்போது கடலுக்கடியில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப் பும் அதனால் வெளியான 1400 கி.மீ., நீள 200 கி.மீ., அகல 5000 அடி உயர தீவு வடிவான லாவா, கேம்மா, வெளிப்பட் டால் உருவான கடலடித் தீவின் போது தென் ஆசியப் பகுதி முழுவதும் ஏற்பட்ட நிலத்தடி அதிர்வு மறுக்க முடியாத மாபெரும் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது என்பது உண்மையே.கடந்த பல மாதங்கள் முன், கூட இதே நீலகிரி பகுதியில் வெப்ப வாயும், புகையும், சத்தமும் கூடிய வெடிப்பு ஏற்பட்டு பலமுறை கிலி உண்டாக்கியது நினைவுக்கு வரலாம்.

இதே போல் பல இடங்களிலும் கூட, இன்றைய தேதி வரையிலும் கூடத் தொடரும் நிலநடுக்கம் என்ற செயலால் பூமியின் மேற்பரப்பு முழுவதுமே நடுக்கத்துக்கும் சிறு சிறு அசைவுக்கும் ஆட்பட்டே வருகிறது என்பதே உண்மை. இவ்வகை நடுக்கம் என்பது பாறை மீது படிந்திருக்கும் மண்பகுதியை தளர்த்தவும், மழை நீர் உட்புக எளிமைப் படுத்தவும் உதவுகிறது என்பதும் பேருண்மை.

ஆக இவற்றுடன் மலைப் பகுதிகளில் முக்கியமாக பாறைகளுக்கு வெடி வைத் தல், மழை நேரங்களில் அதிக பாரத்துடனான வாகன ஓட்டம், கட்டுமானப் பொருட் களுடனான சவாரி என்பவையும் சரிவுக்கு சலாம் போடுகின்றன.அதிர்வால் ஏற்பட்ட பாறைச் சரிவை நீக்க மீண்டும் வெடிகளையே வெடிக்கின்றனர் என்பது வேடிக்கை தான்.இந்நிலையில் மழைச் சரிவுகளில் மரங்கள் வளர்ப்பது என்பது நல்லது என்ற கூற்றை விட உயரம் குறைந்த பயிர் களை வளர்ப்பதே சாலச்சிறந் தது.ஏனென்றால் மழைக்காலங் களில் மிகவும் ஆபத்தைச் சந்திக்கப் போகும் சரிவுப் பகுதிகளில் மழை நீருடன் கனமான மரங்களும் சேரும்போது மண்பகுதி அடியோடு, மிகுந்த, பாதிப்போடு, வேகத் தோடு சரியும் என்பதுடன் இதன் விழும் தொலைவும் கூடும் என்பதே நிஜம். அங்கும் புதியசரிவை கனமான பெரிய மரங்கள் உண்டாக்கும்.

தீர்வுகள் தான் என்ன?மலைப்பகுதிகளின் சரிவுப் பகுதிகளில் மழைநீர் நிற்கும் நேரத்தையும் மிகவும் குறைப்பது. அதற்கான சரியான வடிகால் பகுதிகளை அமைப்பது. இதன் மூலம் குறுகிய அளவிலான ஆழத்தை நீர் அடையும் போதே, நிலம் காக்கப்படும்.குறிப்பாக மழைப்பாதைகளின் மேற்புறங்களில் கசிவுநீர் செங்குத்தாக விழாமல் பக்கவாட்டுப்பகுதிகளில் கடத்தி விழ வைப்பது.எந்த வகையிலும் மழைநீரை அதிகம் உட்புறம் எடுத்துச் செல்லும் படியான வகையிலும், ஈரத்தை நிறுத்தி வைக்கும் வகையிலும் இல்லாமல் இருக்க மரம், தாவரம் சாலைச் சரிவுகளில் வளர்ப்பதை தடுப்பது. பாறை மீது மண் இல்லாத நிலை ஏற்படும் வரை சரிவும் நீடிக்கும். அதிக பாரம் ஏற்றிய வாகனங்களை அனுமதிக்கக் கூடாது. கட்டுப்பாடு தேவை ரயில் பாதையை தடை செய்து விஞ்ச் அமைப்பது. தனித்த பாறைகளை அகற்றுவது. சாலைகளை அதிக கனத்துடன் அமைக்காதிருப்பது. மினி பஸ் விடுவது.

மழை சீசன்களில் வாகனத்தைக் குறைப்பது. இடிதாங்கிகளை அமைப்பது, 50 சதுர கி.மீ., கட்டடப்பகுதி என்றால் பெரும்பாலான பகுதி கட்டட அடியில் ஈரத்தை தொடர்ந்து காத்து வருவது ஆபத்தை உண்டாக்கிறது. இதன் மூலம் அதிக வெயிலில் மண் இறுகி மீண்டும் கூடுதல் பலம் பெறும் வாய்ப்பு தடையாகிறது. அடைமழையின் போது மண்ணின் தளர்வு நிலை தடுக்கப்பட வேண்டும். எனவே கட்டுமானத்துக்குத் தடை அவசியம். மலைப்பகுதிகளில் வெடி வெடிப்பதை தடுப்பதன் மூலம் காய்ந்த மண் பகுதியின் இறுக்கம் பாதுகாக்கப்படும். இல்லையேல் தளர்ந்து விடும்.இப்பகுதிகளில் கட்டடம் கட்டும் முன்பாக கட்டடத் திற்கான மொத்தப்பரப்பின் அடித்தளத்திற்காக மண் ஆழத்தையுமே பார்ப்பது என்பது இயலாத காரியம் எனவே சாய்வுப் பகுதிகளை கட்டடம் கட்டும் பகுதியாக அனுமதிக்காமல் இருப்பது.

டன் பாறையை உடைத்தும், அடித்தளமிடல் வேண்டும். தொடர்ந்து வந்த பாதிப்புகளால் சுற்றுலா பயணிகளின் வரவு மிக குறையும் போது பேராசையால் முதலீடு செய்த பல நிறுவனங்களுக்கு தொடர்ந்து நட்டமும், ஈ ஓட்டும் நிலையும் தான் ஏற்படும்.முதலீடு விரையமாகும். பெரிய கட்டடங்களின் முதலீட்டுக்கும், பாதுகாப்புக்கும் உறுதியே கூற முடியாது.உறுதியான கட்டடங்களுக்கும், மரங்களுக்கும், மேலிருந்து சரியும் கட்டடம் மற்றும் மரங்கள் இழப்பை ஏற்படுத்துகின்றன.ஓட்டல் பிற தங்குமிட கழிவு நீர் வடிகாலை கசியாத குழாய் மூலம் தூரத்தில் வெளியேற்றுவது அவசியம்.இனி, சிந்தித்து செயல்படுவதின் மூலமே நீலகிரி, "மரணத்தின் ஓலகிரி" ஆகாமல் தடுக்கப்படும்.

Tuesday, November 17, 2009

இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படுவது ஏன்?

ஆஸ்திரேலியாவில் இரண்டரை லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். இந்திய சமூகத்தினர் அங்கு நல்ல பணிகளில் இருந்து வருகிறார்கள். ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்கள், படித்து முடித்த பிறகு, அங்கேயே நல்ல வேலைகளைப் பெற்று நிரந்தரக் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். அண்மையில் இந்திய மாணவர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவங்களை வைத்து, அந்த நாட்டை மதிப்பிட்டு விடக்கூடாது.

இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்குப் படிக்க வருகிறார்கள். இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து படிக்கும் மாணவர்களை, உயர்கல்விக்காகப் படிக்க வருபவர்கள், தொழிற் கல்விக்காக படிக்க வருபவர்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். உயர்கல்விக்காகப் படிக்க வரும் மாணவர்கள் தாக்கப்படுவது என்பது மிகவும் குறைவு. தொழிற் கல்விக்காக படிக்க வரும் மாணவர்கள்தான் இதுபோன்ற தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள்.

இந்திய மாணவர்களில் ஒருபிரிவினர், இளநிலைப் பட்டங்களைப் படித்து விட்டு, உயர்கல்விக்காக ஆஸ்திரேலியா வருகிறார்கள். மற்றொரு பிரிவினர் பிளஸ் 2 படிப்பை முடித்து விட்டு, கேட்டரிங் டெக்னாலஜி, ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மெண்ட், ஹேர் டிரஸ்ஸிங் போன்ற தொழிற் கல்வி படிக்க வருபவர்கள். இவர்கள் பெரும்பாலும் இந்தியாவில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆங்கிலத்தில் சரிவர பேச முடியாத நிலையில் இருக்கிறார்கள். பிளஸ் 2 முடித்து விட்டு, ஆங்கிலம் நன்கு பேச முடியாத மாணவர்களுக்கு தகுந்த பகுதி நேர வேலை கிடைப்பது மிக அரிதாக உள்ளது. வட மாநிலங்களில் இருக்கும் சில ஏஜண்டுகளும் அந்த மாணவர்களுக்கு சரியான தகவல்களைக் கூறுவதில்லை. நீங்கள் ஆஸ்திரேலியா போய்விட்டால், படித்துக் கொண்டே அங்கு வேலை செய்து கொள்ளலாம் என்று மாணவர்களுக்கு அவர்கள் நம்பிக்கையூட்டி விடுகிறார்கள். அவர்களை நம்பி ஆஸ்திரேலியாவுக்குப் படிக்க வந்துவிட்டு அந்த மாணவர்கள் சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். கட்டாயமாக வேலைக்குச் சென்றால்தான் படிப்பைத் தொடர முடியும் என்ற நிலையில், ஆஸ்திரேலியாவில் அவர்களுக்கு உரிய பகுதி நேர வேலை கிடைப்பதில்லை. ஆங்கில அறிவு இருந்தால் மட்டுமே, பகல் நேரங்களில் வேலைவாய்ப்பு எளிதாகக் கிடைக்கும்.

ஆங்கில அறிவு போதுமான அளவுக்கு இல்லாத நிலையில், மணிக்கு 2 டாலர்கள், 3 டாலர்கள் என்ற சம்பளத்தில், தங்கியிருக்கும் இடத்திற்கு வெகுதொலைவில் இரவு நேரத்தில் பணி செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். ஆஸ்திரேலியாவில் தனியாகச் செல்வது உகந்தது அல்ல என்ற பகுதிகளின் வழியாக, இந்த மாணவர்கள் பணி முடிந்த பிறகு இரவு நேரத்தில் கடந்து வரவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த பகுதிகளில் போதைப் பொருட்களை உட்கொள்பவர்கள், அதிகமாக மது அருந்தியவர்களினால் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இவர்கள், இரவு நேரங்களில் இந்தப் பகுதிகளின் வழியாக நடந்து செல்லும்போது, போதை பழக்கத்துக்கு ஆளானவர்கள் இவர்களை மிரட்டி பணம் கேட்கிறார்கள். பணம் இருந்தால் பிடுங்கிக் கொள்கிறார்கள். போதையில் இருக்கிற அவர்கள், எதிரே வருபவர்கள் யார், எந்த நாட்டினர் என்பது பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளக்கூடிய மனநிலையில் இருப்பதில்லை. அடித்து அவர்களிடம் பணத்தைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பாலும் பகல் நேரத்தில் நடப்பதில்லை.இரவு நேரங்களில் மட்டுமே நடக்கின்றன. எனவே, தொழிற் கல்வி படிப்புகளில் சேர்ந்து படிக்கச் செல்லும் மாணவர்கள், முன்னதாகவே முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு, ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் சேருவது நல்லது.

ஆஸ்திரேலிய கல்வித்துறையின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத கல்வி நிறுவனங்கள் மூடப்படுகின்றன. அண்மையில், நான்கு கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால், 300 இந்திய மாணவர்கள் உட்பட, இரண்டு ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர் என்ற செய்தி வெளியானது. விளம்பரங்களைப் பார்த்தும் ஏஜண்டுகள் மூலமும், அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களில் சில நேரங்களில் மாணவர்கள் சேர்ந்து விடுகிறார்கள். அதுபோன்ற கல்வி நிலையங்கள் மூடப்பட்டு விடுகின்றன. அதுபோன்ற சூழ்நிலைகளில், ஆஸ்திரேலிய அரசு தலையிட்டு, அந்த மாணவர்களை வேறு கல்வி நிலையங்களுக்கு மாற்றுகிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் இயங்கும் கல்வி நிறுவனங்களைத் தொடர்ந்து தணிக்கை செய்யும் பணியில் ஆஸ்திரேலிய அரசு ஈடுபட்டு வருகிறது. விதிமுறைகளை மீறி செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து வருகிறது.

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் படிக்க வரும் மாணவர்களுக்கான விதிமுறைகளை இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது. http://www.hcindiaau.org/students_guidelines.html ஆஸ்திரேலியாவில் படிக்கும் மாணவர்கள், ஏதாவது பிரச்சினைகளை எதிர் கொண்டால், இந்திய தூதரக அலுவலகத்துடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் சிட்னி, மெல்போர்ன், கான்பெரா, பெர்க் ஆகிய நகரங்களில் 24 மணி நேர தொலைபேசி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் இருப்பவர்கள் கான்பெராவில் உள்ள அலுவலகத்துடன் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம். இந்திய மாணவர்கள் செய்யும் புகார்களின் அடிப்படையில், ஆஸ்திரேலிய அரசும் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்குப் படிக்க செல்லும் இந்திய மாணவர்களுக்கு வெளிநாட்டுப் படிப்புக்கு ஏற்ற வகையில், ஆங்கில மொழி அறிவு தேவை. தொழில் படிப்புகளில் சேரும் பிளஸ் 2 மாணவர்கள், தங்களது படிப்பின் ஒரு பகுதியாக, தொழில் நிறுவனங்களில் செய்யும் பயிற்சிப் பணிக் காலம் எவ்வளவு என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அந்த காலகட்டப் பணிகளுக்கு ஊதியம் இல்லாமலும் இருக்கலாம். அங்கு படிக்க வரும் மாணவர்கள், வாரத்திற்கு 20 மணி நேரம் பகுதி நேர வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் மூலம் நாம் எவ்வளவு வருவாய் ஈட்ட முயலும் என்பதையும், எந்த அளவுக்கு பொருளாதார வசதி இருக்கிறது என்பதையும், மாணவர்கள் உணர்ந்து கொண்டு அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

பொதுவாக ஒரு செமஸ்டருக்கு மூன்று ஆயிரத்திலிருந்து 14 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் வரை படிப்புக் கட்டணம் இருக்கும். அங்கு தங்கும் இடம், உணவு உள்ளிட்ட செலவுகளுக்கு மாதம் ஆயிரம் டாலர் அளவுக்கு பணம் தேவைப்படும். பகுதி நேர வேலையின் மூலம் இந்தப் பணத்தைச் சம்பாதிக்கக்கூடிய மாணவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நல்ல ஆங்கில அறிவு இல்லாவிட்டால், பகுதி நேர வேலைக்கு நல்ல பணிகள் கிடைக்காது. எனவே, ஊதியமும் அந்த அளவுக்கு ஈட்டமுடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவில் நமக்கான உரிமை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் சேரும் கல்வி நிறுவனங்கள் குறித்த விதிமுறைகளை ஆஸ்திரேலிய தூதரகங்கள் மூலம், முன்னதாகவே தெரிந்து கொண்டால் பல பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.

Wednesday, November 11, 2009

பூங்காக்களில் காதல் லீலை : பாழாகும் சமூக ஒழுங்கு

கோவை மாநகராட்சி வ.உ.சி., பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலையில் ஆண், பெண் ஜோடிகள் பொது இட மென்றும் பாராமல் ஒழுங்கீனமான செயலில் ஈடுபடுகின்றனர். சமூக ஒழுங்கை சீர்குலையச் செய்யும் இவர் களை, மாநகராட்சி நிர்வாகமும், போலீசும் வேடிக்கை பார்ப்பது மக்களை முகம் சுழிக்க வைக்கிறது.

கோவை நகரவாசிகள், பள்ளி மாணவ, மாணவியரின் பிரதான பொழுது போக்கும் இடம் வ.உ.சி., பூங்கா மற்றும் மிருகக் காட்சி சாலை. பூங்கா மாலை 4.00 மணிக்கு திறக்கப்படுகிறது. மிருகக் காட்சி சாலை, செவ்வாய் தவிர பிற நாட்களில் காலை 10.00 முதல் மாலை 7.00 மணி வரை செயல்படுகிறது. மிருகக் காட்சிசாலையை பார்வையிட நகர் பகுதி பள்ளிகளில் இருந்து மட்டுமின்றி, புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரும் அதிகம் வருகின்றனர்.

ஒழுங்கீன செயல்கள்: வ.உ. சி., பூங்கா மாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டதும் ஆண், பெண் ஜோடிகள் நுழைந்து ஆங்காங்கு ஆக்கிரமித்துக் கொள் கின்றனர். புல்வெளியில், புதர் மறைவில், மரத்தின் பின்னால் என பல இடங்களிலும் தனியாக அமர்ந்து சேஷ்டையில் ஈடுபடுகின்றனர். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தும், மடியில் படுத்தபடியும் காதல் விளையாட்டு புரிகின்றனர். இவர்களில் பலரும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பதால், பூங்காவுக்கு வருவோரை பற்றிய எவ்வித கவலையும் கொள்வதில்லை. சமீபத்தில், இது போன்ற ஜோடிகளின் அத்துமீறல் அதிகரித்ததை தொடர்ந்து, ரேஸ் கோர்ஸ் போலீசுக்கு அதிகளவில் புகார்கள் சென்றன. மாலை நேரத்தில் திடீர் ரெய்டு நடத்திய போலீசார், பூங்காவில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டிருந்த ஜோடிகளை பிடித்து கடும் எச்சரிக்கைக்கு பின் அனுப்பினர். ஓரிரு நாட்கள் போலீஸ் கண்காணிப்பும் தொடர்ந்த காரணத்தால், ஜோடிகளின் சில்மிஷ வேலைகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. பின்னாளில் போலீசாரின் கண்காணிப்பு படிப்படியாக குறைந்து, தற்போது அத்துமீறல்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. இதை வேடிக்கை பார்த்து ரசிக்கவும், மொபைல் போன் கேமராவில் படம் பிடிக்கவும் சில வாலிபர்கள் சுற்றித்திரிகின்றனர்; சில ஜோடிகளை படம் பிடித்து மொபைல் போனில் பதிவு செய்யப்பட்ட போட்டோவை காண் பித்து மிரட்டி பணம் பறித்த சம்பவங்களும் நடந் துள்ளன. எனினும் ஆண், பெண் ஜோடிகள் வருவது குறைந்தபாடில்லை.

மாணவர்கள் "கட்': வ.உ.சி., பூங்காவில் காதல் ஜோடிகளின் சில்மிஷ செயல்கள் ஒரு புறம் அதிகரித்திருக்க, மறுபுறம் பள்ளி மாணவர்கள் வகுப்பை "கட்' அடித்துவிட்டு, பூங்கா மற்றும் வ.உ.சி.,மைதானத்தில் சுற்றித்திரிவதும் அதிகம் நடக்கிறது. புத்தக மூட்டைகளை மைதானத்தின் ஓரத்தில் வைத்துவிட்டு, அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடுகின்றனர். மாலை நேரத்தில் பள்ளி வகுப்பு முடிந்து செல்வதை போல, வீட்டுக்கு கிளம்பிச் செல்கின்றனர். இந்த மாணவர்களில் சிலர் புகை பிடிக்கும் செயலிலும் ஈடுபடுகின்றனர்.

கஞ்சா ஆசாமிகள்: கஞ்சா விற்கும் நபர்கள், பாலியல் தொழிலுக்கு ஆள் பிடிக்கும் புரோக்கர் நடமாட்டமும் வ.உ.சி., பூங்கா மற்றும் மைதானம் பகுதியில் அதிகரித் துள்ளது. கையில் "பேக்'குடன் சுற்றித் திரியும் நபர்கள் கஞ்சா பொட்டலங்களை திறந்தவெளியில் சர்வ சாதாரணமாக விற்கின்றனர். இதை வாங்கவும் "வாடிக்கையாளர்கள்' வருகின்றனர். இவர்கள், பள்ளி மாணவர்களிடம் பேச்சுக் கொடுப்பதால், மாணவர்களையும் கஞ்சா புகைக்கும் பழக்கம் தொற்றிக் கொள்ளும் அபாயமிருக்கிறது. இது போன்ற சட்டவிரோத செயல்களை தடுக்கவும், பொதுமக்கள் வந்து செல்லும் வ.உ.சி., பார்க்கில் ஆண், பெண் ஜோடிகளின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டு வரவும் மாநகர போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

Wednesday, November 4, 2009

செல்பேசி தொழில்நுட்ப வளர்ச்சி - பாதிப்பும் அச்சுறுத்தலும்

தகவல் தொடர்புக்கான கண்டுபிடிப்புகளில் பெரிய சாதனையாகக் கருதப்படும் தொலைபேசியின் வழித்தோன்றலான செல்பேசி இன்று அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. நம்மில் கணிசமானோரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்பேசிகள் உண்டு. கையடக்க செல்பேசிகளை விதவிதமான வடிவங்களில், நவீன வசதிகளுடன் அறிமுகம் செய்வதில் தனியார் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதன் விளைவாக டார்ச் லைட்டில் தொடங்கி கேமரா, விடியோ என்று ஒவ்வொரு நாளும் புதுப்புது வசதிகள் செல்பேசிகளில் கூடிக் கொண்டே போகின்றன. இந்நிலையில், சீன நாட்டுத் தயாரிப்பு செல்பேசிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "வாய்ஸ் சேஞ்சர்' என்ற வசதி பலரின் தூக்கத்தைக் கெடுப்பதாக மாறியிருக்கிறது. சில முக்கிய நிறுவனங்களின் தயாரிப்புகளிலும் இந்த வசதி தற்போது வரத் தொடங்கிவிட்டது.

அதாவது, இந்த வசதியுள்ள செல்பேசிகளில், "வாய்ஸ் சேஞ்சர்" பகுதியில் முதியவர், நடுத்தர வயது ஆண், இளைஞர், குழந்தை, இளம்பெண், நடுத்தர வயது பெண், மூதாட்டி என்று 7 வகையான குரல் பிரிவுகள் இருக்கும். இதில், ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு நாம் பேச விரும்பும் நபரைத் தொடர்பு கொண்டால், எதிர் முனையில் இருப்பவருக்கு நம்முடைய குரல் நம் குரலாக ஒலிக்காது; மாறாக, நாம் தேர்ந்தெடுத்த முதியவர் குரலோ பெண் குரலோ ஒலிக்கும் மிகவும் தத்ரூபமாக.

பொழுதுபோக்குக்காக நண்பர்களுடன் அரட்டையடிப்பதற்காக இந்தத் தொழில்நுட்ப வசதியை செல்பேசி நிறுவனங்கள் வழங்கினாலும், சிலர் தவறான வழியில் இந்த வசதியைப் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. உதாரணமாக, நாம் இளம்பெண் குரலைத் தேர்ந்தெடுத்துப் பேசினால், எதிர்முனையில் இருப்பவர் தன்னிடம் பேசுவது இளம்பெண் என்றுதான் நினைத்துக் கொள்வார்.

இந்த வசதியை தவறாகப் பயன்படுத்துவதால், ஏற்படும் விளைவு எத்தனை மோசமானதாக இருக்கும் என்பதற்கு அண்மையில் மதுரையில் நிகழ்ந்த பொறியாளர் முத்துவிஜயன் கொலைச் சம்பவம் ஓர் உதாரணம். மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த முத்துவிஜயனிடம் செல்பேசியில் பேசிய ஒருவர் தனது பெயர் பிரியா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கியுள்ளார். முத்துவிஜயனும் அவரை நம்ப, நாளடைவில் இருவரும் அடிக்கடி பேசத் தொடங்கியிருக்கின்றனர். அனைத்து விஷயங்களைப் பற்றியும் மனம்விட்டு பேசியுள்ளனர். பிரியா தனக்குப் பணம் தேவைப்படும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, முத்துவிஜயனிடம் இருந்து பணம் பெற்றிருக்கிறார்.

ஒரு நாள் முத்துவிஜயனுக்கு உண்மை தெரிய வந்தது; ப்ரியா என்ற பெயரில் "வாய்ஸ் சேஞ்சர்” வசதியைப் பயன்படுத்தி தன்னிடம் பேசியது ஓர் ஆண் என்று. இருவருக்கும் இடையே பிரச்னை வெடித்தது. முத்துவிஜயன் கொல்லப்பட்டார். பெரும் சிரமத்துக்குப் பிறகு எதிரிகளை போலீஸôர் கைது செய்தனர்.

முத்துவிஜயன் ஓர் உதாரணம்தான். வெளியே தெரியாமல் எத்தனையோ "வாய்ஸ் சேஞ்சர்' மோசடிகள் பல இடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவமானத்துக்குப் பயந்து இந்த மோசடிகள் அவரவருக்குள்ளேயே புதைந்து கிடக்கின்றன. பொதுவாக, தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை பலர் தனக்குள்கூட சொல்லிக்கொள்ள விரும்புவதில்லை. ஆதலால், இத்தகைய பிரச்னைகள் சமயத்தில் ஒருவரின் மனநலனையே பாதிக்கக்கூடும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.

ஆனால், உளவியல் அடிப்படையிலும், குற்றச் செயல்கள் அடிப்படையிலும் மிக மோசமான பாதிப்புகளை உருவாக்கும் இத்தகைய தொழில்நுட்ப வசதியைக் கட்டுப்படுத்த நம்முடைய சட்டத்தில் இடமில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். இதுகுறித்து காவல் துறையினர் கூறியது, "செல்பேசியில் குரலை மாற்றிப் பேசி மோசடியில் ஈடுபடும் நபர்கள் பற்றி புகார்கள் வந்தால் மட்டுமே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். மற்றபடி தொழில்நுட்ப வளர்ச்சியைக் கட்டுப்படுத்த எங்களுக்கு அதிகாரமில்லை" என்கின்றனர்.

பிரச்னைக்குரிய இத்தகைய தொழில்நுட்ப வசதிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம். அதேபோல, தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தும் நிறுவனங்களுக்கும், இதுபோன்ற வசதிகளைக் கொண்ட செல்பேசிகள் வைத்திருப்பவர்களுக்கும் சுயகட்டுப்பாடு அவசியம்!

Sunday, October 25, 2009

சூர்யாவுக்கு டாப்பூ, விஜய்க்கு ஆப்பூ - கலைஞர் குடும்ப சதி!!

புதிய "வேட்டைக்காரன்" படத்தை பாரம்பரியம் மிக்க ஏவி.எம். நிறுவனம் சார்பாக ஏவி.எம்.பாலசுப்ரமணியனும் பி.குருநாத்தும் தயாரிக்க, நடிகர் விஜய் நடித்திருக்கிறார்.
அவரோடு, தெலுங்கின் முன்னணி நடிகை அனுஷ்கா கை கோர்த்திருக்கிறார் கதாநாயகியாக! வியாபார ரீதியான இயக்குநர் தரணியின் உதவியாளர் பாபு சிவன் இயக்க விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.

ஆக, ஒரு கமர்ஷியல் திரைப்பட கூட்டணியின் பின்புலத்தோடு கடந்த ஆண்டு இறுதியில் "வேட்டைக்காரன்" வெற்றிக் கனவோடு பயணிக்கத் தொடங்கினான். கடந்த இரண்டு வருடங்களாக, அவ்வப்போது தனது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தி, மன்றத்துக்கென தனிக்கொடி, இயக்கம், இலச்சினை (ப்ர்ஞ்ர்) உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் விஜய்யின் இந்தப் பயணத்தை அரசியலில் வெற்றிக் கூட்டணி அமைத்து வருபவர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர்.

சுமார் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடுவதாக எதிர்பாராத அறிவிப்பு வந்தது. பொதுவாக, எந்த நிறுவனம் தயாரித்த படமாக இருந்தாலும் அதை தங்களது விளம்பர சக்தியைக் காட்டி மிகக் குறைந்த விலைக்கு வாங்குவதே சன் பிக்சர்ஸின் வழக்கம் எனக் கூறப்படுவதுண்டு. அப்படிப்பட்ட படங்கள் ரசிகர்களின் மனதில் இடம்பெறாவிட்டாலும் கூட சன் டி.வி.யின் "டாப் டென்" பட வரிசையில் முதலிடம் பெற்றுவிடும்.

படத்தைத் தயாரித்து வியாபாரம் செய்ய முடியாமலோ அல்லது பணம் குறைந்தால் கூட பரவாயில்லை; நல்ல விளம்பரம் கிடைக்கும்; அதை வைத்து அடுத்த படத்தில் காலூன்றிவிடலாம் என நினைப்போர் தங்களது படங்களை "சன்" வசம் தருவதாகவும் பேச்சு உண்டு. விளம்பரங்களில் ஏவி.எம்.மின் "வேட்டைக்காரன்", இளைய தளபதியின் "வேட்டைக்காரன்" என்றெல்லாம் பயன்படுத்த முடியாது; சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் "வேட்டைக்காரன்" என்றுதான் வரும். அதனால் வேட்டைக்காரனாக இருந்துகொண்டு சன் பிக்சர்ஸ் கூண்டில் அடைபடுவதை விஜய் தரப்பும் தயாரிப்பு தரப்பும் ஆரம்பத்தில் விரும்பவில்லை என்றே அவர்களது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சன் பிக்சர்ஸ் வசம் படம் போய்விட்டால் தங்களுக்கு சென்னை ஏரியா விநியோக உரிமை கிடைக்காது என்பதும் விஜய் வட்டாரத்தில் மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஆனாலும் என்ன காரணத்தாலோ, வேறு வழியில்லாமல் வேட்டைக்காரனே வலையில் சிக்கிக்கொண்டான். படம் சன் பிக்சர்ஸ் வசம் மாறியது, விஜய் தரப்பே எதிர்பார்க்காத... குறிப்பாக, அறியாத ஒன்று எனவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதற்கிடையில் சில நல விரும்பிகள் மூலம் தில்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியையும் சந்தித்துவிட்டு வந்தார். உடனே காங்கிரஸில் சேரப் போகிறார்; இளைஞரணித் தலைவர் ஆகப்போகிறார் போன்ற ரீதியில் தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் செய்தியாளர்களை திடீரென அழைத்து "எனக்கு எல்லாமே சினிமாதான்; "வேட்டைக்காரன்" படம்தான் என் தற்போதைய இலக்கு. இப்போதைக்கு அரசியலில் ஈடுபட மாட்டேன்" என திடீரெனப் பின்வாங்கினார் நடிகர் விஜய்.

அவராகப் பின்வாங்கவில்லை; சில சக்திகளும் சூழ்நிலைகளும்தான் அவரை அப்படிப் பேசச் செய்தன என்று கூறியவர்களும் உண்டு. விஜய்யும் அவரது குடும்பத்தினரும் எதிர்பார்த்தது போல, தில்லி காங்கிரஸ் வட்டாரங்களில் அவருக்கு வரவேற்பு இருக்கவில்லை என்று தெரிகிறது. தனது தந்தைக்கு மத்திய அமைச்சர் பதவி, தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அல்லது தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பதவி, தனது ரசிகர் மன்றத்தினருக்கு வட்ட, மாவட்ட, மாநில அளவில் கட்சிப் பதவிகள் என்றெல்லாம் கனவுகள் கண்ட நடிகர் விஜய், காங்கிரஸ் மேலிடத்தின் "ஆகட்டும் பார்க்கலாம்" நமுட்டுச் சிரிப்பைப் பார்த்ததும் தகர்ந்தன. அதிகபட்சம் நடிகர் விஜய் மாநிலங்களவை உறுப்பினராக்கப் படலாம் என்பதுதான் காங்கிரஸ் தரப்பில் வாக்குறுதியாக இருந்ததாம்.

அது ஒரு புறம் இருக்க, "இளைய தளபதி"யின் அரசியல் ஆசையும், காங்கிரஸில் இணைந்து கட்சியை பலப்படுத்தும் முயற்சியும் ஆளும் திமுக தரப்பை எரிச்சலூட்டியதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? அதையடுத்து உருவான அரசியல் திட்டமே "உறவாடிக் கெடு" ப்ராஜெக்ட். அதன் முன்னோட்டம்தான் "வேட்டைக்காரன்" படம் கைப்பற்றப்பட்டதன் பின்னணி என்கிறார்கள்.

தீபாவளிக்கு வர வேண்டிய படம் வெளிவரவில்லை. இதற்கு துணை முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த "ஆதவன்" படம்தான் காரணம். கலைஞர் தொலைக்காட்சி தொடங்கக் காரணமாக இருந்த காரணிகளைக் காலமும் பணமும் மாற்றிவிட்ட சூழ்நிலை நிலவுவதால் வேட்டைக்காரனும் ஆதவனும் ஓரிடத்துப் பிள்ளைகளாகிவிட்டனர். அதனால் தீபாவளிக்கு "ஆதவன்" அதன் பிறகு "வேட்டைக்காரன்" என முடிவு செய்யப்பட்டது. விஜய்யின் முந்தைய பட வெளியீடுகளின்போது இருந்த அவருடைய தலையீடு முதல்முறையாகத் தகர்ந்தது. "வேட்டைக்காரன்" வெளிவராமல் தள்ளிப் போவதால், அடுத்த படத்தின் தயாரிப்பும், ரிலீசும் தள்ளிப் போகும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இப்படி தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என்று "வேட்டைக்காரன்" தள்ளித் தள்ளிப் போகிறதே என்கிற கவலையில் "விஜய்" வட்டாரம் நிலைகுலைந்து போயிருக்கிறதே... சினிமாவைப் பொருத்தவரை ஆறிய கஞ்சி பழங்கஞ்சி தானுங்களே..!

Wednesday, October 21, 2009

சோனியா சாதித்த போஃபர்ஸ் - இந்தியா எங்கே போகிறது?

1985-ல் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு, பிரிட்டன், ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகிய மூன்றில் எந்த நாட்டு பீரங்கிகளை வாங்குவது என்பது தெரியாமல் குழப்பத்தில் இருந்தது. இந்நிலையில் சுவீடனைச் சேர்ந்த போஃபர்ஸ் நிறுவனம் இரண்டு தரகர்கள் மூலம் பேரத்தை முடிக்கத் திட்டமிட்டது. ஆனால், அதன் முயற்சி உடனடியாகப் பலிக்கவில்லை. ஆனால், அந்த ஆண்டின் பிற்பகுதியில் லண்டனைச் சேர்ந்த ஏஇ சர்வீசஸ் (ஏஇஎஸ்) என்ற நிறுவனம் போஃபர்ஸ் நிறுவனத்தை அணுகி ஆயுதப் பேரத்தைச் சுமுகமாக முடித்துத் தருவதாக உறுதியளித்தது.

அதாவது, 1986-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் ஆயுத பேரத்தை முடித்துக் கொடுத்தால் 3 சதவிகித கமிஷன் தர வேண்டும் என்றும் அப்படியில்லை எனில் எதுவும் தர வேண்டாம் என்று, ஏஇஎஸ் நிறுவனம் கூறியது. இதை போஃபர்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இது தொடர்பாக இரு நிறுவனத்துக்கும் இடையே 1985-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி உடன்பாடு ஏற்பட்டது. ஏஇஎஸ் நிறுவனத்தின் பின்னணியில் ஓர் ஆணோ அல்லது பெண்ணோ செயல்படுகிறார்கள். அவர்களால் ராஜீவ் காந்தி அரசிடமிருந்து ஆயுத விற்பனைக்கான கான்ட்ராக்டைப் பெற்றுத் தர முடியும் என்பது உறுதியாகத் தெரிந்ததால்தான் போஃபர்ஸ் நிறுவனம் அதனுடன் உடன்பாடு செய்துகொண்டது.

சொல்லிவைத்தபடியே ஏஇஎஸ் நிறுவனம் கெடு தேதிக்கு 7 நாள்கள் முன்னதாக, அதாவது மார்ச் 22-ம் தேதி ஆயுத விற்பனை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் பெற்றுவிட்டது. அடுத்த 6 மாதத்துக்குள் அந்த நிறுவனம் முதல்கட்டமாக 7.3 மில்லியன் டாலரைக் கமிஷனாகப் பெற்றது. இந்தப் பேரத்துக்காக அந்த நிறுவனத்துக்குக் கிடைக்க வேண்டிய தொகை 36.5 மில்லியன் டாலர். கமிஷன் பணம் இத்தாலிய வர்த்தகரான குவாத்ரோச்சிக்குச் சென்றதும், பேரத்தின் பின்னணியில் அவர் செயல்பட்டதும் பின்னர் தெரியவந்தது.

போஃபர்ஸ் நிறுவனம் 1986-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி, ஜூரிச்சிலுள்ள நார்டுபினான்ஸ் வங்கியில், ஏஇஎஸ் நிறுவனக் கணக்கில் (வங்கிக் கணக்கு எண்: 18051-53) 7.3 மில்லியன் டாலரைச் செலுத்தியது. இதற்கு இரண்டு வாரங்கள் கழித்து, அதாவது செப்டம்பர் 16-ம் தேதி ஏஇஎஸ் நிறுவனம் அதிலிருந்து 7 மில்லியன் டாலரை எடுத்து குவாத்ரோச்சி மற்றும் மரியா இருவரின் கட்டுப்பாட்டில் உள்ள கால்பர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் கணக்கில் சேர்த்தது.

1988-ல் போஃபர்ஸ் ஊழல் விவகாரம் விசுவரூபம் எடுத்ததும் குவாத்ரோச்சியும், மரியாவும் அந்தப் பணத்தை வட்டியுடன் எடுத்து வேறு இடங்களில் மறைத்து வைத்தனர். 1988-ம் ஆண்டு ஜூலை 25-ல் 7.9 மில்லியன் டாலரை கால்பர் நிறுவனத்திலிருந்து எடுத்து ஜெனீவாவில் உள்ள வெடல்ஸன் ஓவர்சீஸ் எஸ்ஏ என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தனர். 1990 மே 21-ம் தேதி 9.2 மில்லியன் டாலரை அங்கிருந்து எடுத்து சானல் தீவுகளில் உள்ள ஐஐடிசிஎல் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தனர். பின்னர் அதே ஆண்டு ஜூன் 5-ம் தேதி 2.4 மில்லியன் டாலரை ஸ்விஸ் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்து கார்ஃபின்கோ என்ற வங்கியில் ரோபஸ்டா என்ற ரகசியக் கணக்கில் போட்டனர். ஜூன் 12-ம் தேதி 5.3 மில்லியன் டாலர் ஆஸ்திரியாவில் உள்ள வங்கியில் "அராபிகா', "ரொபஸ்டா', "லக்ஸர்' என்ற ரகசிய கணக்கில் போடப்பட்டது.

பின்னர் 2003 ஜூனில் இன்டர்போல் அமைப்பு குவாத்ரோச்சி, மரியா இருவருக்கும் லண்டனில் உள்ள ஸ்விஸ் வங்கிக் கிளையில் இரண்டு கணக்குகள் மூலம் முறையே 3 மில்லியன் டாலர், 1 மில்லியன் டாலர் இருப்பதைக் கண்டுபிடித்தது. சிபிஐ வேண்டுகோளின் பெயரில் இவ்விரு கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டன. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த குடும்பத்தினரைச் சுற்றிச்சுற்றி வந்த போஃபர்ஸ் ஊழல் வழக்கு தொடர்பான உண்மைகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் சிக்னலுக்காகக் காத்திருக்கிறது மத்திய அரசு.

போஃபர்ஸ் ஊழல் விவகாரத்தில் இத்தாலிய வர்த்தகரான குவாத்ரோச்சி மீதான வழக்கை விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளதாக கடந்த செப்டம்பர் 29-ம் தேதி மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிவிட்டால் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் மூலம் இந்தியப் பணத்தை கொள்ளையடித்த ஒரு கும்பலின் கதை எளிதில் முடிந்துவிடும். அரசுத் தரப்பினரே குற்றவாளிகளுடன் சேர்ந்துகொண்டு இந்த ஊழல் விவகாரத்தை மூடி மறைக்க நினைக்கும்போது உச்ச நீதிமன்றம் உள்பட எந்த நீதிமன்றம்தான் நீதியை நிலைநாட்ட முடியும்?

உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுவிட்டால் ஊழல் பேர்வழிகள் உச்ச நீதிமன்றமே எங்களுக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது; இது எங்களுக்குக் கிடைத்த வெற்றி; பொய் வழக்குப் போட்டு அரசியல் ரீதியில் எங்களைப் பழிவாங்க நினைத்தவர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள் என்று பேசக்கூடும். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது போஃபர்ஸ் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை வெளிப்படையாகவே பாதுகாத்து வந்தார். ஆனால், 1991-ம் ஆண்டு பிரதமராக வந்த பி.வி. நரசிம்மராவ், ஒருபுறம் குவாத்ரோச்சியைப் பிடிக்க வேண்டும் என்ற சிபிஐயின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்ததுடன் மறுபுறம் குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பியோடவும் உதவினார்.

பின்னர் 1999-ல் குவாத்ரோச்சிக்கு நெருக்கமானவரான சோனியா காந்தி அரசியலில் நுழைந்தார். தனது நாட்டைச் சேர்ந்தவரான குவாத்ரோச்சி நேர்மையானவர் என்று சான்றிதழ் அளித்தார். பின்னர் பத்திரிகையாளர்கள் சோனியா காந்தியைச் சந்தித்தபோது, போஃபர்ஸ் ஊழல் வழக்கில் குவாத்ரோச்சியின் பெயர் அடிபடுகிறதே என்று கேட்டதற்கு, "அவரைச் சந்தேகத்துக்குரிய நபராகத்தான் சிபிஐ கருதுகிறதே தவிர, அவருக்கு இதில் நேரடித் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை' என்று கூறினார்.

மேலும் குவாத்ரோச்சி குற்றவாளி என்பதற்கான ஆதாரங்களை ஆளுங்கட்சியினர்தான் (தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு) அளிக்க வேண்டும் என்றார் சோனியா. போஃபர்ஸ் விவகாரத்தில் குவாத்ரோச்சி பணம் பெற்ற விவகாரம் ஆதாரங்களுடன் இருந்தபோதிலும் வழக்கு பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முதன்முறையாகப் பதவியேற்றதும் செய்த முதல்வேலை முடக்கி வைக்கப்பட்ட இந்த வங்கிக் கணக்கை விடுவித்ததுதான். அடுத்த கட்டமாக ஆர்ஜென்டினாவில் பிடித்து வைக்கப்பட்ட குவாத்ரோச்சி தப்பிக்க வழிசெய்தது.

இப்போது இரண்டாவது முறையாகப் பதவியேற்றுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு போஃபர்ஸ் ஊழல் வழக்கை முழுமையாகக் குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதுவும் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன். குவாத்ரோச்சியைப் பாதுகாக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம் அல்ல; இந்த விவகாரத்தின் மூலம் சோனியாவுக்கு எந்தத் தொந்தரவும் வந்துவிடக்கூடாது என்கிற எண்ணம்தான் முக்கிய காரணம்.

1993-ல் குவாத்ரோச்சியின் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனையின்போது சோனியா, மரியா, குவாத்ரோச்சி ஆகிய மூவரும் நெருங்கிய குடும்ப நண்பர்கள் எனத் தெரியவந்தது. அவர்கள் அனைவரும் விடுமுறையை ஒன்றாகக் கழித்ததும், ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்டதும், ஒன்றாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டதும், ஒருவரின் குழந்தைகள் மற்றொருவர் அரவணைப்பில் இருந்து வந்ததும் தெரியவந்தது.

இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் மேலும் சிக்கல் ஏற்படுமே என்பது தெரிந்துதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்த வழக்கைக் கைவிட முடிவு செய்தது.

சுவீடனில் போஃபர்ஸ் வழக்கை விசாரித்த சுவீடன் நாட்டுப் புலனாய்வு அதிகாரியான ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம், இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக சோனியா காந்தியிடம் விசாரிக்க வேண்டும், அவருக்கும் குவாத்ரோச்சிக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஏற்கெனவே இந்திய அரசிடம் தெரிவித்திருந்தார். ஆனால், அதுகுறித்து மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்த வழக்கை மூடிமறைப்பதிலேயே ஆர்வம் காட்டி வருகிறது.

இப்போது உள்ள இளந்தலைமுறையினர் போஃபர்ஸ் ஊழல் விவகாரம் வெளியானபோது குழந்தைகளாக இருந்திருப்பார்கள். எனவே அவர்களுக்கு போஃபர்ஸ் ஊழல் 320 மில்லியன் டாலர் தொடர்புடையது என்பது தெரியாது. ஏஇஎஸ் நிறுவனத்துக்கான கமிஷன் 36.5 மில்லியன் டாலர் தொகையும் இதில் அடங்கும். இந்த ஊழல் விவகாரம் வெளியானபோது 20 சதவிகிதத் தொகையே அதாவது 64 மில்லியன் டாலரே வழங்கப்பட்டிருந்தது. ஆயுத ஒப்பந்தத்துக்கான மொத்தத் தொகையில் அப்போது இந்திய அரசு 20 சதவிகிதம் மட்டுமே கொடுத்திருந்ததால் அப்போது வழங்கப்பட்ட கமிஷன் தொகையும் 20 சதவிகிதம்தான். இந்த ஊழல் விவகாரம் வெளியானதால் இந்திய அரசு பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டது. இதையடுத்து கமிஷன் பணமும் கொடுக்கப்படவில்லை.

இப்போது குவாத்ரோச்சி மீதான வழக்கை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் போஃபர்ஸ் நிறுவனத்துக்குச் சேரவேண்டிய 227 மில்லியன் டாலரும், குவாத்ரோச்சிக்கு கமிஷன் பாக்கி 29 மில்லியன் டாலரும் கிடைக்க வழியேற்பட்டுள்ளது.
அதாவது குவாத்ரோச்சிக்கு 29 மில்லியன் டாலர் கமிஷனாகக் கிடைக்கும் என்றால் இந்திய ரூபாயில் அவருக்குக் கிடைக்க இருப்பது ரூ. 140 கோடி. இந்த ஊழல் விவகாரத்தில் கிடைக்கும் மொத்த லஞ்சப் பணத்தை ரூபாயில் கணக்கிட்டால் அது ரூ.600 கோடியைத் தாண்டிவிடும். இதற்காக 20 ஆண்டுகள் காத்திருந்ததில் நஷ்டம் ஒன்றும் இல்லையே?

Thursday, October 8, 2009

சாம்பியன்ஸ் கோப்பையும், காக்கா கதையும்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு சாம்பியன்ஸ் கோப்பை கிடைக்காமல் போனது பற்றி இப்போது தெருமுனைகளிலும், பஸ் ஸ்டாப்களிலும் பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது.

ஏன் தோற்றீர்கள் என தோனியிடம் கேட்டால், தம்மையும் பிரெட் லீயையும் போல பவுலர்கள் யாருமில்லாததுதான் காரணம் என்பார். நமது பந்துவீச்சாளர்களின் பேச்சைப் பார்த்தால், "எப்படிப் போட்டாலும் அடிக்கறாங்கப்பா' என எதிரணியினர் மீது பழிபோடத் தயாராக இருப்பது தெரிகிறது

சிலர் தென்னாப்பிரிக்க பிட்சை காரணம் சொல்வார்கள். வேறு சிலர் டக்வொர்த் லீவிûஸ வம்புக்கு இழுப்பார்கள். இன்னும் சிலர் பந்து, பேட், ஸ்டம்ப் கேமரா, ஷூ, எதிரணியினர் ஹேர்ஸ்டைல், அம்பயரின் தொப்பி, சைடு ஸ்கிரீன், சனிப்பெயர்ச்சி, சீயர் லீடர்ஸ் இல்லாதது என எதையாவது சொல்லி ரசிகர்களை இம்சிப்பார்கள்.

ஆனால், ரசிகர்கள் இப்போது பாகிஸ்தான் வீரர்கள் மீதுதான் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள்தானே இந்திய அணியை ஜெயித்தும் கெடுத்தார்கள்; ஆஸ்திரேலியாவிடம் தோற்றும் கெடுத்தார்கள்.

இந்திய அணி தோற்றுப் போனதற்கு வேறு சில காரணங்களும் இருக்கக்கூடும். சமீபகாலமாக இந்திய அணிக்குச் சிறந்த கேப்டன்கள் கிடைக்கவில்லை. கவாஸ்கர், கபில்தேவ், ஸ்ரீகாந்த், அசாருதீன், டெண்டுல்கர், கங்குலி, திராவிட் என யாருமே வெற்றிகரமாக இருந்ததில்லை. இந்திய அணிக்குக் கேப்டனாகிவிட்டால், அவர் சிறந்த கேப்டனாக இருக்கவே முடியாது என்கிற சூழ்நிலை உருவாகிவிட்டது. அப்படியிருக்கையில் சில வெற்றிகளைப் பெற்றதுமே தமது தலைமையால்தான் அணி ஜெயிக்கிறது என்று தோனி எண்ணிக்கொண்டார். அதனால்தானோ என்னவோ, யுவராஜ், சேவக் ஆகியோருடன் முட்டிக் கொண்டார்.

ஆல் ரவுண்டராக ஆட வேண்டும் என்கிற தோனியின் எண்ணம் நியாயமானதுதான். ஆனால், ஆல் இன் ஆல் ரவுண்டராக வரலாற்றில் இடம்பிடிக்கப் போராடும் அவரது நிலையை நினைத்தால் ஆப்பசைத்த குரங்கின் கதைதான் நினைவுக்கு வருகிறது. ஒருவர் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் ஜொலிக்கலாம். அல்லது பவுலராகவும் பேட்ஸ்மேனாகவும் சிறப்பாகச் செயல்படலாம். கீப்பராகவும் பவுலராகவும் செயல்படுவேன் என அடம்பிடித்தால் எப்படி? வேறு யாராவது கேப்டனாக இருந்தால் இந்த மாதிரியான வாய்ப்பெல்லாம் இவருக்குத் தருவார்களா?

அடுத்தது, ராகுல் திராவிட் வருகையினால் ஏற்பட்ட அசாதாரணமான நிலை. அவரது ஆட்டம் அணிக்குப் பலமா அல்லது பலவீனமா என்பதை திருவுளச் சீட்டு மூலமாகத்தான் அறிய வேண்டும். அந்த அளவுக்கு நன்மையும் செய்கிறார், இம்சையும் செய்கிறார். ரசிகர்கள், எதிரணியினர், அம்பயர் என அனைவரின் பொறுமையையும் அவர் சோதிப்பார். ஆவேசம் வந்தாலன்றி பந்தை செல்லமாகத் தட்டி மட்டுமே பழக்கப்பட்டவர். கிரீஸýக்குள் பந்து கிடந்தாலும் ரன் எடுப்பது போல பாவ்லா காட்டியே கடுப்பேற்றுவார். இதனால், அவரோ அல்லது உடன் ஆடுபவரோ அவுட் ஆகி வெளியேறுவதுதான் மிச்சம். அவரது வருகை அணியின் ரன் சேர்க்கும் முறையை மாற்றிவிட்டது என்பது மட்டும் தெளிவு.

சேவாக்கும் யுவராஜும் தற்செயலாக சாம்பியன்ஸ் கோப்பையில் ஆடவில்லையா, அல்லது தோனி புகழைக் கொஞ்சம் தட்ட வேண்டும் என்று திட்டமிட்டே புறக்கணித்தார்களா எனத் தெரியவில்லை. எப்படியோ தாங்கள் இருவரும் அணியில் இருந்தால்தான் பலம் என்பதை தோனிக்குப் புரிய வைத்துவிட்டார்கள். இதற்காக ஒரு கோப்பையை இழக்க வேண்டுமா?

அடுத்தது, ஐபிஎல் அணியில் எல்லோரும் டி20 ஆட்டங்கள் நிறைய ஆடிவிட்டதால், பழக்கத்தை மாற்ற முடியாமல் தடுமாறுகிறார்கள். 5 ஓவர் தொடர்ந்து வேகப்பந்து வீசுவதும், 10 ஓவர்களுக்கு மேல் பேட் செய்வதும், 50 ஓவர்கள் ஃபீல்டிங் செய்வதும்கூட வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கும். இதுவும் அணியின் மோசமான ஃபார்முக்கு காரணம்.

அதற்காக இந்திய அணி, எப்போது நல்ல ஃபார்மில் இருந்தது எனக் கேட்கக்கூடாது. நம் அணி அவ்வப்போது சாம்பியனாகும், பிறகு நோஞ்சான்களிடம் கூடத் தோற்கும். இது நீண்டகால உண்மை. அதை மறந்துவிட்டு, கோப்பையை ஜெயிப்பார்கள் என்று கனாக் காண்பது அறியாமை.

காரணம் எதுவாக இருந்தாலும், இந்திய அணியின் தோல்வி வேறொரு திருப்பத்துக்கான அறிகுறியாக இருக்கலாம் என்றே தெரிகிறது. அசாருதீன் கேப்டனாக இருந்தபோது, அவரிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பதவி பறிக்கப்பட்டு டெண்டுல்கரிடம் வழங்கப்பட்டது. பின்னர் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு கங்குலியிடமும், பின்னர் திராவிட்டிடம் வழங்கப்பட்டது. கடந்த உலகக் கோப்பையில் தோற்றதும் தோனிக்கு கிரீடம் சூட்டப்பட்டது. இப்படி காகம் வடை திருடிய கதைபோல் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பதவி போய்கொண்டிருக்கிறது.

இது எல்லா அணிகளுக்கும் பொதுவானதுதான் என்றாலும், கேப்டன்கள் அனைவரும் பதவிக்கு வந்ததும் ஃபார்மை பறிகொடுப்பதும், பதவிபோன பிறகு நன்றாக ஆடி தொடர்ந்து அணியில் நீடித்திருப்பதும் இந்திய அணியின் பிரத்யேக அடையாளம். சமீபகால கேப்டன்களில் டெண்டுல்கர் தவிர வேறு யாருக்கும் பதவி போன பிறகு உரிய மரியாதை தரப்படவில்லை.

இப்போதைய நிலையில், காகத்தின் வாயிலிருக்கும் வடையைப் பறிப்பதற்குரிய இன்னொரு தருணம் வந்துவிட்டதாகவே தெரிகிறது. வடையைத் தக்கவைத்துக் கொள்வது காகத்தின் சாமர்த்தியம்.

Thanks: Dinamani

Wednesday, October 7, 2009

தமிழ்மொழியை கொண்டாடினர் அன்று! இன்று?

மொழிகளிலே, தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடினார், பல மொழி கற்ற பாரதியார். அதற்கு முன்பே, அந்தச் சிறப்பை பறை சாற்றினார், ஓர் ஆங்கிலேயப் பாதிரியார். தமிழ் உயர்தனிச் செம்மொழி என்பதை, பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே உலகறியச் செய்தார், இங்கிலாந்து நாட்டில் பிறந்த அவர். பல மொழி கற்றவர்களால் தான், ஒரு மொழியின் உயர்வையும், தனிச் சிறப்பையும் எடுத்துரைக்க முடியும். ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட அவர், லத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு மொழிகளும் கற்றவர். எனினும், தமிழ் மீது அவருக்கு தணியாத காதல். 66 ஆண்டு, தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்காக, வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர். தமிழ் இலக்கியங்களை, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்காக, சொந்த சேமிப்பு அனைத்தையும் செலவிட்டார்.

"தேமதுரத் தமிழோசை, உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்று பாரதியார் பாடுவதற்கு முன்பே, அந்தப் பணியைச் செய்தார் அவர். யார் அவர் என்ற கேள்விக்கு விடை தேவையா? டாக்டர். ஜி.யூ.போப். எந்தத் தமிழனும் சொல்லாத ஒன்றைச் சொல்லி, அதை நிறைவேறச் செய்தவர் அவர். "நான் காலமானதும், தமிழ் மாணவனின் கல்லறை இது என்று எழுதி வைக்கப்பட வேண்டும்!' என்றார்.
"ஒரு தமிழ் மாணவன் இங்கே உறங்குகிறான்...' என்று, நினைவுச் சின்னத்தில் வரையப்பட வேண்டும் என்று விரும்பினார்.
ஆக்ஸ்போர்டில், அந்த நினைவுச் சின்னத்தைக் கண்டு நெகிழும் அரிய வாய்ப்பு கிடைத்தது. தென்னிந்தியாவின் எஸ்.எம்.ஜார்ஜ் உக்லோ போப், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தேவாலய கல்லூரியின் தமிழ், தெலுங்கு விரிவுரையாளர்.
பிறப்பு: ஏப்ரல் 24, 1820. மறைவு: பிப்ரவரி 11, 1908. வாழ்நாள் முழுவதும், அவர் ஆற்றிய கீழ்த்திசை இலக்கிய, தத்துவ ஆய்வுப் பணிகளின் நினைவாக, அவருடைய குடும்பத்தினரும், தென்னக தமிழ் நண்பர்களும் நாட்டி வைத்த நினைவுச் சின்னம்.

தமிழ் மாணவர் எனும் பெருமிதத்துடன், இறுதி வரை தொண்டாற்றி மறைந்த ஜி.யூ.போப்பின் கல்லறையை, ஆங்கில வாசகங்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. அமைதி தவழும் அந்த இடத்தில் மரியாதை செலுத்திய நேரத்தில், மாணவப் பருவத்திலும், அதற்குப் பிறகும், அவரைப் பற்றி படித்தறிந்தவை நினைவில் திரை விரித்தன.
தஞ்சையில் ஜி.யூ.போப்பை அறியாத தமிழ் மாணவர்கள் அன்று இருந்ததில்லை; அறியாத தலைமுறையினருக்கு, அவரைப் பற்றிய அறிமுகம் அவசியம் தான். ஜான் போப் - கேத்தரின் உக்லோ தம்பதியரின் இரண்டாம் மகனாக, 1820ல் பிறந்தார் ஜார்ஜ் உக்லோ போப். கிறிஸ்தவ சமயப் பணிபுரிய, 19 வயதில் சென்னைக்குப் பயணமானார். தமிழும், சமஸ்கிருதமும் கற்கத் துவங்கினார். இங்கிலாந்து திருச்சபையில் இணைந்து பாதிரியார் ஆன அவர், தஞ்சாவூரில், 1845ல் பணியைத் துவங்கினார்.

தமிழக மக்களிடம், சமய போதனை செய்வதற்கு, தமிழ்ப் பயிற்சி தேவை என்பதை உணர்ந்தார்.உரையாடுவதற்காக தமிழ் கற்கத் துவங்கியவர், அது ஒரு இலக்கியக் கடல் என்பதை உணர்ந்தார். தமிழ் இலக்கியங்களில் ஊறித் திளைக்கத் துவங்கினார். தஞ்சையில், ஒரு தொடக்கப் பள்ளியை சீரமைத்தார். உயர்நிலைப் பள்ளியாக மேம்படுத்தி, அதன் முதல்வர் பொறுப்பையும் ஏற்றார். 1884ல், கல்லூரியாக அதை மாற்றி, சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்த்தார். இடைப்பட்ட காலத்தில், ஊட்டியில் ஆங்கிலப் பள்ளியையும், பெங்களூரூவில் ஒரு பள்ளியையும் நிறுவினார்.
ஜி.யூ.போப், தன் 62ம் வயதில், உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், இங்கிலாந்துக்குத் திரும்பினார். மான்செஸ்டரிலும், ஆக்ஸ்போர்டிலும், கல்விப் பணி தொடர்ந்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், 1890 வரை, தமிழ், தெலுங்கு மொழி விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
அந்த காலக் கட்டத்தில் தான், 1886ல், சிலருடன் சேர்ந்து, திருக்குறளை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அந்த நூலுக்கு அவர் வழங்கிய முன்னுரை, திருக்குறள் விளக்கவுரைகள், வியப்பில் ஆழ்த்துகின்றன.
அடுத்து, நாலடியார் ஆங்கில மொழிபெயர்ப்பை, 1893ல் வெளியிட்டார். திருவாசகத்துக்கு உருகியவர் போப். மாணிக்க வாசகர் மீது, அவருக்கு அதிக மதிப்பு. திருவாசக மொழி பெயர்ப்பும், ஆய்வும், அவருக்கு சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன.
ஜி.யூ.போப், அந்த ஆய்வை 1903ல் வெளியிட்ட போது, "ராயல் ஏஷியாடிக் சொசைட்டி' எனும் அரச ஆசியக் கழகம், அவருடைய கீழ்த்திசை மொழி அறிவாற்றலைப் பாராட்டி, தங்கப் பதக்கம் வழங்கிச் சிறப்பித்தது.

பிப்., 11, 1908ல், தன் 88வது வயதில் இறப்பெய்தினார் போப். ஆக்ஸ்போர்டு நகரில், அவர் உலா வந்த இடங்களைக் காணவும், அவரைப் பற்றிய அரிய தகவல்களைக் கேட்டு அறியவும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நகரின் தமிழ்ச் சங்கம், பல குறிப்புகளைத் தந்தது. அவரைப் போன்ற கடின உழைப்பாளியைக் காண்பது அரிது. முழு நேர போதனையுடன், தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம், பிரிட்டிஷ் அரும்பொருளக நூலகத்திற்காக, தமிழ் இலக்கியங்களின் அட்டவணைப் பட்டியலைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். கல்வி நிதி திரட்டி உதவுவதற்காக, ஆக்ஸ்போர்டில் சொற் பொழிவுகளை நடத்தி வந்தார்...
போப்பின் பேத்தி டோரத்தி போப் அவரைப்பற்றி விவரிக்கிறார்...
கிறிஸ்துவத்தைச் சார்ந்த அவர், சைவம், வைணவம், புத்தம், சமணம், யூதம், இஸ்லாம் அனைத்தையும் ஆய்ந்து தெளிந்தவர். எண்பது வயதை எட்டிய பிறகு, திருவாசகத்தை மொழி பெயர்க்கத் துவங்கி, ஆய்வுக் கட்டுரை வரைந்தார்.
போப், தமிழ் ஆய்வுப் பணிகளைப் பார்த்த பிறகு, படித்தறிந்த பிறகு தமிழக அறிஞர்கள் புத்தெழுச்சி பெற்று, ஆய்வுப் பணிகளில் இறங்கினர் என்று திராவிட மொழி அறிஞர் கால்டுவெல் கூறுகிறார்.

சைவ சித்தாந்த ஆய்வில், போப் துறைபோனவர் என எழுதுகிறார் ஆங்கில அறிஞர் பிரேசர். ஆசிரியர், சமய போதகர், ஆய்வாளர் என பல துறை ஈடுபாடுடையவர் ஜி.யூ.போப். ஆங்கிலம் பேசும் உலகில், குறிப்பாக, ஐரோப்பாவில், தமிழ் மொழியையும், பண்பாட்டையும் பரப்பிய முன்னோடி அறிஞர் அவர்.

Sunday, October 4, 2009

பாலியல் தொழில்! இந்தியாவில் பெண்கள், சிறுமிகளை கடத்தும் அவலம்!!

பாலியல் தொழிலுக்காகப் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்படுவது குறித்து தேசிய பெண்கள் ஆணையம் சமீபத்தில் நாடு முழுவதும் ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்தச் சமூக அவலநிலையானது தென் மற்றும் கிழக்கு மாநிலங்களில்தான் அதிகமாக அரங்கேறுகிறது. கேரளம், ஆந்திரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் பாலியல் தொழிலுக்காகப் பெண்களையும், சிறுமிகளையும் கடத்தும் நிலை தொடர்கிறது.

இதையடுத்து தமிழகத்தில்தான் பெண்களும், சிறுமிகளும் அதிகம் கடத்தப்படுகின்றனர். இங்கு 93.33 சதவீத மாவட்டப் பகுதிகளில் இருந்து பெண்களையும் சிறுமிகளையும் சப்தமில்லாமல் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர்.
இதைத்தொடர்ந்து ஒரிசாவில் 86.66 சதவீத மாவட்டப் பகுதிகளிலும், பிகாரில் 86.48 சதவீத மாவட்டப் பகுதிகளிலும் பெண்களையும், சிறுமிகளையும் கடத்தும் அவலம் நீடிக்கிறது.

இதுதவிர்த்து, பிற மாநிலங்களிலும் குறிப்பிட்ட சதவீதத்திலான பெண்களும், சிறுமிகளும் பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படும் கொடுமை நடந்தேறுகிறது.இந்தியா முழுவதும் 28 லட்சம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழில் ஈடுபடும் பெண்களில் 2.4 சதவீதம் பேர் 15-35 வயதுக்கு இடைப்பட்டவர்கள். 43 சதவீதம் பேர் சிறுமிகள்.

இந்தத் தொழிலில் குறிப்பிட்ட சதவீதத்தினர் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டு ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றால், மற்றொரு குறிப்பிட்ட சதவீதத்தினர் தங்களது குடும்ப நபர்களாலேயே வலுக்கட்டாயமாக இத்தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள்.அந்தவகையில், 22 சதவீதப் பெண்கள் தங்களது குடும்பத்தாரின் வற்புறுத்தலின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 8 சதவீதம் பெண்கள் தங்களது கணவரின் நெருக்குதலின் பேரிலும் 18 சதவீதம் பேர் தங்களது நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரின் சூழ்ச்சி வலையிலும் சிக்கி இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலும் பின்தங்கிய பகுதியில்தான் பாலியல் தொழில் அதிகம் நடக்கிறது. வறுமையும், ஏழ்மையும்தான் அப்பாவிப் பெண்களை இத்தொழிலுக்கு இட்டுச் செல்லும் முக்கியக் காரணிகளாக உள்ளன.பின்தங்கிய வேலைவாய்ப்பற்றப் பகுதியில்தான் பெண்களுக்கு எதிராகப் பிற அநீதிகளும் அதிகம் அரங்கேறுகின்றன. பெண்களுக்கு எதிரான அநீதிக்கு பாலினப் பாகுபாடும் முக்கியக் காரணமாக உள்ளது.

பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையைத் தடுக்க சட்டங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் சரியாக அமல்படுத்தப்படுவதில்லை. இதுவும் பெண்களுக்கு எதிராக துணிச்சலாக அநீதி இழைக்கப்படுவதற்கு காரணம்.தீர்வு என்ன?பெண்கள் இதுபோன்று பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு பொருளாதாரச் சூழ்நிலைதான் முக்கியக் காரணம். இதனால் அவர்களை முதலில் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாக்க வேண்டும்.

அதேபோல, பெண்களுக்கு எதிரான அநீதியைத் தடுக்க நடைமுறையில் உள்ள சட்டத்தைத் திறன்படச் செயல்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிராக அநீதி இழைப்பவர்களுக்கு கடுமையானத் தண்டனை வழங்கத் தயங்கக்கூடாது.இதையெல்லாம்விட பெண்கள் என்பவர்கள் சமுதாயத்தில் மதிக்கப்படக்கூடியவர்கள் என்ற மனநிலையை அனைவர் மத்தியிலும் உருவாக்க முயலவேண்டும்.

இவ்வாறு செய்தாலே பெண்களுக்கு எதிராக நடக்கும் 99 சதவீதக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று தேசிய பெண்கள் ஆணையத்தின் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எனினும் பெண்களுக்கு எதிரான அநீதியை மட்டும் இன்னும் தடுத்து நிறுத்த முடியவில்லை. வியாபாரப் பொருள்களாய் பெண்கள் கருதப்படும் அவலநிலை இன்றும் நீடிக்கிறது. இந்த நிலை என்று மாறும்?

Friday, October 2, 2009

ஒரே வீட்டில் 90 பேர் கூட்டு குடும்ப வாழ்க்கை நடத்தும் அதிசயம்!!

சிவகாசி தாலுகா, மேட்டுப்பட்டி அருகே உள்ள கிராமம் பூசாரிபட்டி. ராஜகம்பளத்தார் என்னும் ஒரே சமுதாயத்தை பல குடும்பங்கள் இருந்தாலும், பெருமாள்சாமி (65)யின் சகோதர, சகோதரிகள் என 15 குடும்பங்களை சேர்ந்த 90 பேர் ஒரே குடும்பமாக பல ஆண்டுகளாக கூட்டுக்குடித்தனமாக வாழ்க்கை நடத்துகின்றனர்.

கிராமத்திலேயே பெருமாள் சாமிதான் முதல் பட்டதாரி. இவர் கூட்டு குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும் என்ற சூழ்நிலையால் 1974ல் ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து குடும்ப பொறுப்பை ஏற்றார். கூட்டு குடும்பத்திற்கு இவர்தான் தலைவர். இவர்களின் மூதாதையர் காலத்தில் இருந்தே இன்று வரை ஒரே குடும்பமாக வசிக்கின்றனர். இவர்களின் ஒரு ஆண்டு தேவைக்கான நெல், நவதானியங்கள், காய்கறிகளை சொந்த நிலங்களில் சாகுபடி செய்து சேமித்து கொள்கின்றனர். கடைகளில் விலை கொடுத்து வாங்கும் பொருட்கள் என்றால் உப்பு, சீனி, டீ, காபி தூள்தான். ஆண்டுக்கு 500 மூடை நெல், 500 மூடை தானியங்கள் விளைவிக்கின்றனர்.

தினமும் மூன்று வேளை உணவுக்காக 1 மூடைக்கு குறைவில்லாமல் அரிசி, தானியங்கள் செலவிடப்படுகிறது. தீபாவளி, பொங்கல், ஆடி விசேஷ நாட்களில் 5,6 ஆடு வெட்டி அசைவ உணவு சாப்பிடுகின்றனர். அனைவரும் தினமும் காலை ஐந்தரை மணிக்கு எழுந்து அன்றாட பணிகளை துவக்கி விட வேண்டும் என்பது கட்டாயம். காலையில் கூல் குடித்து வேலைக்கு சென்று விடுவார்கள். ஆணும்,பெண்ணும் நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தும் அளவிற்கு கடின உழைப்பாளிகள். மதிய உணவினை அவர்கள் வேலை செய்யும் இடத்திற்கே சென்று வழங்க அதற்கென தனியாக ஆட்கள் உள்ளனர். மாலை ஆறரை மணிக்கு எல்லோரும் வீடு திரும்பி விட வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு ஒவ்வொருவருக்கும் பணி ஒதுக்கப்பட்டு விடும்.

சமையலுக்கு பெண்களும், தோட்டத்தில் களை எடுத்தல், உழவு, தண்ணீர் பாய்ச்சுதல், உரமிடுதல் வேலைகளை ஆண், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு விடும். சொந்தமாக நடத்தம் 2 பட்டாசு ஆலைகளில் குடும்ப ஆண்கள் 30 பேர் வேலை செய்கின்றனர். குடும்ப நிர்வாகம், வரவு, செலவு என ஒவ்வொரு வரும் ஒரு பொறுப்பு ஏற்றுக்கொள்கின்றனர். படிக்கும் வயது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி அவர்கள் விரும்பிய வரை பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று படிக்கலாம். குறைந்த பட்சம் 8ம் வகுப்பு,10ம் வகுப்பு, பிளஸ்2 வரை படித்துள்ளனர். அதன்பின் சொந்த வேலைகளை கவனிக்க வந்துவிடுவார்கள். படிப்பில் ஆர்வம் உள்ளோர் தொடரலாம்.

பெருமாள்சாமியின் மகன் பி.இ., முடித்து லண்டனில் வேலை செய்து, பெங்களூரூவில் உள்ளார். முத்துக்குமார் பி.சி.ஏ., படிக்கிறார். மற்றொரு பெண் பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.இவர்கள் வெளியில் திருமணம் செய்வது இல்லை. உறவினர்களுக்குள்ளே திருமணம் செய்கின்றனர். வீட்டின் மூத்தவர் இன்னாருக்கு இன்னார் என மணமக்களை நிச்சயிப்பார் இதில் மறுப்பே இருக்காது. படித்து வெளியிடங்களில் வேலை பார்த்தாலம் இங்குள்ளவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என எழுதப்படாத சட்டம். பெண்களுக்கு 18 வயதில் திருமணம் செய்கின்றனர். நான்கு ஆண்டுக்கு ஒரு முறை 9ஜோடி, 11 ஜோடிகளுக்கு மொத்தமாக திருமணம் நடத்துகின்றனர்.

இக்குடும்பத்திற்கு 100 ஏக்கர் நிலங்கள் இருந்தாலும் அந்தந்த குடும்ப தலைவர்கள் பெயரில் சொத்து பத்திரம் இருக்கும். ஆனால் எல்லாம் பொதுவுடமை சொத்து. பண்டிகை நாட்களில் புது துணிகள் மொத்தமாக ரூ.1 லட்சத்திற்கு எடுத்து வருகின்றனர். வீட்டில் உள்ள மூத்த பெண், பெண்களுக்கு புடவைகளை எதை கொடுக்கிறாறோ அதை மறுக்காமல் ஏற்றுக்கொள்கின்றனர்.உறவு திருமணங்களால் குறைபாடுடைய குழந்தை பிறக்கும் என்பது அறிவியல் ரீதியான உண்மை. ஆனால் உறவு திருமணங்களால் ஆண்டவன் கிருபையால் எவ்வித குறைபாடும் இன்றி நலமாக உள்ளதாக பெருமைப்படுகின்றனர்.

பெருமாள்சாமி கூறுகையில், ஆண்டாண்டு காலமாக கூட்டு குடும்பமாக வசிக்கின்றோம். இதே போல் ஒற்றுமையுடன் அதிகம் பேருடன் வசிக்க வேண்டும் என ஆசை. எல்லோரும் கடினமாக உழைப்பதாலும், பாராம்பரிய உணவு பழக்கவழக்கத்தால் எவ்வித குறைபாடு இன்றி சுகமாக வாழ்கின்றோம் என தெரிவித்தார்.

Tuesday, September 22, 2009

பி.எஸ்.எல்.வி., : இந்திய விஞ்ஞானிகள் மீண்டும் சாதனை

"ஓசியன்சாட் -2' செயற்கைக்கோள் மற்றும் ஆறு சிறிய செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் மீண்டும் சாதனை படைத்துள்ளனர்.

"பி.எஸ்.எல்.வி., சி-14' ராக்கெட் பகல் 11.55 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இதில், "ஓசியன்சாட் -2' செயற்கைக்கோளும், ஆறு சிறிய செயற்கைக்கோள்களும் இடம்பெற்றுள்ளன. மீன் பிடிப்பதற்கு வாய்ப்புள்ள பகுதிகள், வானிலை நிலவரம், கடலோர பகுதிகள் ஆய்வு போன்றவற்றுக்கு, "ஓசியன்சாட் -2' செயற்கைக்கோள் பெரிதும் உதவியாக இருக்கும். இது 970 கிலோ எடை கொண்டது. "ஓசியன்சாட் -2' செயற்கைக்கோளின் ஆயுள் காலம் ஐந்து ஆண்டுகள். ஆறு சிறிய செயற்கைக்கோள்களில், நான்கு ஜெர்மனி நாட்டுக்குரியவை, ஒன்று சுவிட்சர்லாந்து, மற்றொன்று துருக்கி நாடுகளுக்குரியவை. இந்த குறு செயற்கைக்கோள்கள் இரண்டு முதல் எட்டு கிலோ வரை எடை கொண்டவை.

இதற்கான இறுதி 51 மணி நேர, "கவுன்ட் டவுன்' கடந்த திங்கள்கிழமை காலை 9 மணிக்கு துவங்கியது. சரியாக 11.55 மணிக்கு ராக்கெட் விண்ணுக்கு புறப்பட்டது. அனைத்து செயல்பாடுகளும் சரியாக உள்ளதாகவும், ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது என்றும், "இஸ்ரோ' விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ராக்கெட் விண்ணில் பாய்ந்ததும் விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Thursday, September 17, 2009

ஈரம் | திரைவிமர்சனம் = பெர்ஃபக்ட் த்‌ரில்லர்

முதல் காட்சியிலேயே படத்தின் ஹீரோயின் இறந்து போகிறார். அது கொலையா? தற்கொலையா? தற்கொலை என்று போலீஸ் முடிவுகட்டும்போது அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆதி, அது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கிறார். அந்த மரணத்தின் மீது அவருக்கு ஈடுபாடு தோன்ற காரணம், கொலை செய்யப்பட்டது அவரது முன்னாள் காதலி. விசாரணை எந்த முன்னேற்றமும் இல்லாமல் நகரும்போது, மேலும் சில கொலைகள் அதே அபார்ட்மெண்டில் நடக்கிறது. இந்த கொலைகளுக்கு யார் காரணம்? தும்பை பிடித்துப் போனால் அதன் மறு நுனியில் கிடைப்பதோ நம்ப முடியாத ஆச்ச‌ரியம்.

பழி வாங்கும் ஆவி கதை. இந்த கால்வ‌ரி கதை அறிமுக இயக்குனர் அறிவழகனின் கச்சிதமான திரைக்கதையி‌ல் கலைடாஸ்கோப்பில் போட்ட வளையல் துண்டுபோல் நமக்கு காட்டுவது பல வர்ண ஜாலம்.

படத்தின் நிஜ ஹீரோ, அறிவழகனின் திரைக்கதை. அடுத்தடுத்து கொலை நடப்பதை திகிலுடன் சித்த‌ரிக்கும் போதே, ஆதி சிந்துமேனன் காதலும் உடன் பயணிக்கிறது. இடைவேளைக்குப்பின் ஆதியின் விசாரணையுடன் சிந்துமேனனின் கொலைக்கான காரணமும் சொல்லப்படுகிறது. விசாரணை, காதல், கொலைக்கான காரணம்... படத்தின் முக்கியமான இந்த மூன்று அம்சங்களையும் எந்த உறுத்தலுமில்லாமல் புத்திசாலித்தனமாக இணைத்திருக்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங், கலை நான்கும் அபஸ்வரம் இல்லாமல் இணைந்திருப்பது படத்தின் ம‌ற்றொரு அம்சம். ஹாரர் படத்திற்கேற்ற க்ரே நிற க்ரேடிங், படம் நெடுக வரும் மழைக் காட்சிகள், சில் அவுட்டில் தெ‌ரியும் உருவங்கள் என தனியான அனுபவத்தை தருகிறது மனோ‌ஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு. அதிக பாடல்கள் இல்லாதது ஈரத்தின் ஸ்பெஷல். ஹாரர் படம் என்பதற்காக கண்டபடி இசைக்கருவிகளை ஒலிக்கவிடாததற்காக இசையமைப்பாளர் தமனை பாராட்டலாம்.

நறுக்கி வைத்த மாதி‌ரியான காட்சிகளின் வழி கதை சொல்லப்படுகிறது. லா‌ஜிக் மீறக் கூடாது என்பதற்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர். ஆவி பற்றி ஆதி மேற்கொள்ளும் தேடல், ஆவி கதைக்கான நியாயத்தை உருவாக்குகிறது. அதே நேரம் சந்தேக கணவனாக வரும் நந்தா கதாபாத்திரத்தின் செகண்ட்ஹேண்ட் போபியா ஓவர் டோஸ்.

படத்தில் அனைத்து நடிகர்களையும் அண்டர்ப்ளே செய்ய வைத்திருக்கிறார் இயக்குனர். நந்தாகூட கத்தி ஆர்ப்பாட்டம் செய்யாமல் தனது வில்லத்தனத்தை வெளிப்படுத்துகிறார். சிந்துமேனன் காதலியாகவும், மனைவியாகவும் இருவேறு ப‌ரிமாணங்களை காட்டுகிறார். கணவன் சந்தேகப்படும்போது வாடிப் போகும் அவரது முகம் ப‌ரிதாபத்தை அள்ளுகிறது.

மிடுக்கான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் மிளிர்கிறார் ஆதி. கல்லூரி காலத்திலும் அதே மிடுக்குடன் இருப்பது மட்டும் சின்ன நெருடல். வீட்டைவிட்டு ஓடிவர முடியாது என்று சிந்துமேனன் சொல்லும்போது ஆதி சொல்லும் அடாவடி பதில் கதைக்கு திருப்புமுனையாக அமைந்தாலும், அவரது கதாபாத்திரத்தின் தன்மையை பாதிக்கிறது.

அபார்ட்மெண்டில் இயல்பாக நடக்கும் செக்ஸ் குற்றங்கள் எப்படி ஒன்றிணைந்து பெரும் க்ரைமாக மாறுகிறது என்பது சற்றே திடுக்கிட வைக்கிறது. அசம்பாவிதம் நிகழும்போது காட்டப்படும் சிவப்பு நிறமும், ஆவியின் மீடியமான தண்ணீரும் ஆதியை போலவே நம்மையும் பதற்றப்படுத்துவது இயக்குன‌ரின் வெற்றி.

கச்சிதமான திரைக்கதையும், காட்சியமைப்பும் இருந்தால் எந்த கதையையும் ரசிக்க வைக்கலாம் என்பதற்கு ஈரம் சிறந்த எடுத்துக்காட்டு. சின்னச் சின்ன நெருடல்களை களைந்தால், ஈரம் நம் சட்டைக்குள்ளும் ஏசி தியேட்டரில்!

Friday, September 11, 2009

படிச்சா படிங்க, படிக்காட்டி போங்க :-)

வழக்கம்போல பிரபல பதிவர் என சொல்லிக்கொள்ளும் உங்களில் பலர் இதை படிக்காமலே விடலாம்...ஒன்றுமில்லாத பதிவிற்கு போய் ஓட்டும் பின்னூட்டமும் போடலாம், இருந்தாலும் நான் என் எழுத்தை நிறுத்தப்போவதில்லை. சரி சரி மேட்டருக்கு வருவோம்! கடந்த இரண்டு மூன்று நாளாய் புவிவெப்பமடைதல் விஷயமாய் தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் ஓரிரு மணிகள் மின்விளக்கை நிறுத்தி விழிப்புணர்வை ஏற்படுதிதி முடித்துவிட்டார்கள். பிளாஸ்டிக் குப்பைகளைத் தடை செய்ய வேண்டும், மின்சார நுகர்வைக் குறைக்க வேண்டும், பழைய காகிதங்களையும் துணிகளையும் மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும், கரிமக் குப்பைகளை உரமாக்க வேண்டும், குளியல் மற்றும் பாத்திரங்களைக் கழுவும் நீரைத் தோட்டங்களில் பாய்ச்சி, கறிகாய்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் தாராளமாக அள்ளி வீசப்பட்டுள்ளன.

நோக்கியா நிறுவனம் பழைய செல்பேசிகளையும் இதர மின்னணுச் சாதனங்களையும் சேகரித்துச் சமையல் பாத்திரங்களாகவும் பூங்கா பெஞ்சுகளாகவும் மறுசுழற்சி செய்து வழங்கப் போவதாகச் சொல்கிறது. அத்துடன் தன்னிடம் தரப்படும் ஒவ்வொரு செல்பேசிக்கும் ஒரு மரக்கன்றை நடப்போவதாகவும் அறிவித்திருக்கிறது. நல்ல நோக்கம், நல்ல முயற்சி.

மனிதக் காரியங்களால் வளிமண்டலத்தில் கலக்கும் கரியமில வாயுவின் அளவை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பது கட்டாயம் என்று விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் எச்சரிக்கிறார். தமிழகத்தின் நீண்ட கடற்கரையே ஒரு சாபமாக மாறிவிடலாம் என அவர் கூறுகிறார்.

வளிமண்டல வெப்பநிலை ஒரு செல்சியஸ் டிகிரி உயர்ந்தாலும் ஹெக்டேருக்கு முக்கால் டன் என்ற அளவில் நெல் உற்பத்தி குறையும். கடல் மட்டம் உயர்ந்து கடற்கரையோர வயல்கள் மூழ்கினால் நெல் உற்பத்தி வெகுவாகக் குறையும்.இமயமலைப் பனியாறுகள் உருகி நேபாளத்தில் வெப்ப அபாயத்தை உண்டாக்கி வருகின்றன. அடுத்த 50 ஆண்டுகளில் மாலத்தீவு கடலில் மூழ்கிவிடும் அபாயத்தில் உள்ளது.

அங்குள்ள மக்கள் வேறு நாடுகளுக்குக் குடிபெயர்ந்து செல்லத் திட்டமிடுகிறார்கள். சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு நவீன உலகின் விவசாயப் பண்ணைகள், தொழிற்சாலைகள், வாகனங்கள் எனப் பலவகையான காரணிகள் உள்ளன. இதெல்லாம் சரிதான். அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று அங்கலாய்ப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி.

அமெரிக்க அரசின் ஆற்றல்துறை அமைச்சர் ஸ்டீவன் சூ வீடுகளின் கூரைகள், மொட்டை மாடிகள், சாலைகள், வாகனங்களின் மேற்பரப்புகள் என வெயில்படுகிற எல்லாப் பரப்புகளிலும் வெள்ளையடித்துவிட வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார். அவர் நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி. அவர் சொன்னால் அர்த்தமிருக்கும்.

வெள்ளை நிறப்பரப்புகள் தம் மீது விழும் வெப்பத்தில் எண்பது விழுக்காடு வரை பிரதிபலித்து வானுக்குத் திருப்பி அனுப்பிவிடும். மொட்டை மாடியில் வெள்ளையடிப்பதால் வீட்டுக்குள் இறங்கும் வெப்பம் குறைந்து மின் விசிறிகள், குளிர் சாதனங்கள் போன்றவற்றின் தேவை குறையும். கார்களின் மேற்பரப்பு வெள்ளையாக இருந்தால், உள்ளே சூடு குறைந்து ஏசி போடாமல் சமாளிக்க முடியும்.

இவ்விதமாக வெள்ளையடிப்பது, உலகிலுள்ள அத்தனை கார்களும் பதினோரு ஆண்டுகளுக்கு ஓடாமலிருந்தால் ஏற்படக்கூடிய வெப்ப உமிழ்வு குறைவின் நல்விளைவை ஏற்படுத்தும் என்று கலிபோர்னியாவிலுள்ள தேசிய ஆய்வகத்தைச் சேர்ந்த ஆர்ட் ரோசன்பெல்ட், ஹஷிம் அக்பரி, சுரபி மேனன் ஆகிய விஞ்ஞானிகளின் ஆய்வுகள் காட்டுகின்றன.

நூறு சதுர அடி பரப்புள்ள வெள்ளைக் கூரை, ஒரு டன் கரியமில வாயுவால் ஏற்படக்கூடிய பசுங்குடில் விளைவை ஈடு செய்யும் என அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன்மூலம் அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்குப் பத்து லட்சம் டாலர் வரை மின்சாரச் செலவைக் குறைக்க முடியும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. கலிபோர்னியா மாநில அரசு அங்குள்ள வர்த்தக நிறுவனங்களில் வெயில்படும் பரப்புகள் யாவும் வெள்ளை நிறம் பூசப்பட வேண்டுமென சட்டமியற்றியுள்ளது.

விரைவில் அந்தச் சட்டம் தனியார் வீடுகள் மற்றும் பண்ணைகளுக்கும் நீட்டிக்கப்படவுள்ளது.
இங்கிலாந்திலும் அதே போன்றதொரு சட்டம் வரப்போகிறது. நாமும் அதை மேற்கொள்ளலாம். அமெரிக்கா, ரஷியா ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பசுங்குடில் வாயுக்களை வெளியிடும் நாடாக இந்தியா உள்ளது.அவற்றில் 68 சதவிகிதம் நிலக்கரியை எரிப்பதால் உருவாகின்றன.

மரம் நடுவது, மழை நீர் சேமிப்பு, மின்சார உபயோகத்தைக் குறைப்பது, நடை அல்லது சைக்கிள் மூலம் பயணிப்பது போன்றவற்றுடன் நம் வீட்டு மொட்டை மாடிகளில் வெள்ளைச் சாயம் பூசுவதன் மூலம் நம்மாலான அளவில் வளிமண்டலம் சூடாவதைக் குறைக்கும் பங்களிப்பைச் செய்யலாம்.

Thursday, September 10, 2009

பள்ளியில் மின்கசிவு புரளி - 5 மாணவிகள் பலி!

டில்லியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மின்சார கசிவு ஏற்பட்டதாக வந்த புரளியையடுத்து பள்ளியிலிருந்து வெளியேறிய மாணவ மாணவிகள், நெரிசலில் சிக்கி 5 மாணவிகள் பலியாயினர். 30 பேர் படுகாயமுற்றனர். மாணவிகள் இறந்த சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசாருக்கும், பெற்றோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மின்சாரக்கசிவு ஏற்பட்டதாக தகவல் : டில்லியில் பெய்த பலத்த மழையால் நகர் முழுவதும் மேக மூட்டங்கள் காணப்பட்டது. கஜூரிகாஸ் என்ற பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வழக்கம் போல் அவரவர் பாடங்களை கவனித்து கொண்டிருந்தனர். சில வகுப்புகளில் தேர்வு துவங்கிய நிலையில் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர் . இந்நி‌லையில் பள்ளியை சூழ்ந்து இருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்திருப்பதாகவும், இது பள்ளி கட்டடத்தில் பாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்றும் வதந்தி பரவியது.

30 பேர் காயம் : 5 பேர் கவலைக்கிடம் : இதனையடுத்து மாணவ, மாணவிகள் அனைவரும் பள்ளியை ‌விட்டு வெளியேறுமாறு பள்ளி நிர்வாகம் அறிவித்தது. அப்போது ஏற்பட்ட நெரிசிலில் சிக்கி 5 மாணவர்கள் பலியாயினர். படுகாயமுற்ற 30 மாணவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்கள் 14 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். அவர்களில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

போலீசார் மீது கல்வீச்சு : பள்ளியில் மாணவிகள் இறந்த செய்தி நகர் முழுவதும் பரவியது. இதனை கேள்விப்பட்ட பெற்றோர்கள் அவசர, அவசரமாக பள்ளி முன் வந்து குவிந்தனர். தங்களது குழந்தைகளை அழைத்து கொண்டு புறப்பட்டனர். கூடி நின்ற பெற்றோர்கள் எதிர்ப்பு கோஷங்கள‌ை எழுப்பினர். இதனையடுத்து போலீசாருக்கும், பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாருக்கும், பெற்றோர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் மீது கல் வீசப்பட்டது. பின்னர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். குழந்தைகள‌ை இழந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகம் முன்பு கதறி அழுதபடி நின்றனர். பள்ளி வளாகம் மற்றும் ஆஸ்பத்திரிகளில் பெரும் சோகம் உருவாகியுள்ளது.

முதல்வர் ஷீலா தீட்ஷித் விரைந்தார் : டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் சம்பவ இடத்தை பார்வையிட்டு, ஆஸ்பத்திரி சென்று காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய முதல்வர், நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக தலா ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும் என்றார். சம்பவம் குறித்து உயர் மட்ட குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Monday, September 7, 2009

தேசிய விருது: பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகர்

2007 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ் நடிகர் பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகர் விருதைத் தட்டிச் சென்றுள்ளார். காஞ்சிவரம் படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.


பிரகாஷ்ராஜ் இருவர் படத்தில் நடித்ததற்காக 1998 ஆம் ஆண்டில் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார். கிரீஷ் கஸரவல்லியின் கன்னடப் படமான குலாபி டாக்கீஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக உமாஸ்ரீ சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார்.


'காஞ்சிவரம்' 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான விருதையும் வென்றுள்ளது.


சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது மராத்தி திரைப்படம் திங்யா படத்தில் நடித்த சரத் கோயகருக்குச் சென்றுள்ளது.


ஃபெரோஸ் அப்பாஸ் கானின் காந்தி மை ஃபாதர் படத்தில் நடித்ததற்காக தர்ஷன் ஜாரிவாலாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.


தாரே ஜமீன் பார் படத்தில் மேரீ மா பாடலைப் பாடிய ஷங்கர் மகாதேவனுக்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது கிடைத்துள்ளது.


சாய் பாரஞ்ச்பே தலைமையிலான திரைப்பட விருதுகள் தேர்வுக்குழுவில் அசோக் விஸ்வநாதன் மற்றும் நமீதா கோகலே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.


விருதுப் பட்டியல் கடந்த வாரமே இறுதி செய்யப்பட்டாலும் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவு காரணமாக பட்டியலை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.

Monday, August 31, 2009

ரஜினிகாந்த் கட்சி துவக்குவார் - ரசிகர்கள் மீண்டும் பரபரப்பு

தமிழக திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த், தற்போது நடித்து வரும், "எந்திரன்' படத்துக்குப் பின் கண்டிப்பாக அரசியல் கட்சி துவக்குவார் என, அவரது ரசிகர் கள் மத்தியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 1996ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது, தி.மு.க., - த.மா.கா., கூட்டணி ஆட்சியைப் பிடிக்க நடிகர் ரஜினிகாந்த், அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த அ.தி.மு.க.,வுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்ததே காரணம்.அப்போதே ரஜினி அரசியலுக்கு வருவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. அவரது ரசிகர்களும் அதையே விரும்பினர். ஆனால், ரஜினி அரசியலுக்கு வரவில்லை.தமிழகத்தில் அடுத்தடுத்து நடிகர்கள் அரசியலுக்கு வந்து புதிய கட்சி துவக்கி வருகின்றனர். தங்களுக்கு இருந்த ரசிகர் மன்றங் களை ஒருங்கிணைத்து தே.மு.தி.க.,வை விஜயகாந்தும், அ.இ.ச.ம.க., கட்சியை சரத்குமாரும் துவக்கினர்.அதேபோல், நடிகர் டி.ராஜேந்தரும் லட்சிய தி.மு.க.,வை நடத்தி வருகிறார். நடிகர் விஜய்யும் விரைவில் புதிய கட்சியை துவக்குவார் என்று கூறப்படுகிறது.ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து, தன் நலம்விரும்பிகளிடம் ஆலோசனை செய்துள்ளதாகவும், அவர் தற்போது நடித்து வரும் எந்திரன் படம் ரிலீசுக்குப் பின் மன்றங்களை ஒருங்கிணைத்து அரசியல் கட்சி துவக்குவார் என்றும் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்றத்தில் மாவட்ட பொறுப்பில் இருக்கும் சிலர் கூறியதாவது:தலைவர் ரஜினி அரசியலுக்கு வரும் முடிவை எடுத்து விட்டார். தற்போது அவர் நடித்து வரும் எந்திரனுக்கு பிறகு, கண்டிப்பாக மன்றங்களை ஒருங்கிணைத்து, அரசியல் கட்சி துவக்கவுள்ளார் என்பது அவரது நடவடிக்கையில் இருந்து தெரிகிறது. கடந்த 1996ம் ஆண்டுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட எந்த மன்றத்துக்கும் இதுவரை பதிவு எண் கொடுக்கப்படவில்லை. தற்போது, அந்த ஆண்டுக்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட மன்றங்களுக்கு பதிவு எண் கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவராகவும் தன்னை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் மூடில் இருப்பதால் தான், மக்கள் மத்தியில் செல்வாக்கின் உண்மை நிலையை அறிய, ரசிகர் மன்ற விழாக்களுக்கும், ரசிகர்களின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் தன் நலனில் அதிக அக்கறையுள்ள அண்ணன் சத்திய நாராயணராவை அனுப்பி வருகிறார். அவருடன் ரஜினிக்கு மருமகன் உறவுமுறையில் உள்ள சந்திரகாந்த் என்பவரும் தற்போது பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மக்களின் நாடித்துடிப்பை பார்த்து வருகின்றனர்.எந்திரன் படம் இன்னும் எட்டு மாதங்களில் முடியும் என தெரிகிறது. ஆகையால், அடுத் தாண்டு கண்டிப்பாக ரஜினி அரசியலில் காலடி எடுத்து வைப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

முடிவு எப்போது? சத்திய நாராயணராவ் பேட்டி:""எந்திரன் படம் முடிந்த பிறகு அரசியல் கட்சி துவங்குவது பற்றி ரஜினி நல்ல முடிவை அறிவிப்பார்,'' என்று அவரது அண்ணன் சத்தியநாராயணராவ் தெரிவித்தார்.திருச்சியில் நடந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வீட்டுத் திருமணங்களில் கலந்து கொள்ள நடிகர் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணராவ், இவரது மருமகனும், கர்நாடக மாநில ரஜினி மன்ற தலைவருமான சந்திரகாந்த் ஆகியோர் நேற்று காலை திருச்சி வந்தனர்.சிதம்பரம் நகர ரசிகர் மன்ற நிர்வாகிகள், நடிகர் ரஜினி குறித்து தயாரித்த, "மக்கள் மனம் கவர்ந்த மன்னன்' "சிடி' வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சத்தியநாராயணராவ், நிருபர்களிடம் கூறியதாவது:ரசிகர் மன்ற நிர்வாகிகளின் அழைப்புக்கு இணங்கி திருமண விழாக்களில் கலந்து கொள்ள திருச்சி வந்துள்ளேன். அரசியல் கட்சி துவங்குவது சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் ஏதும் நடத்தவில்லை. ரஜினி தற்போது எந்திரன் படப்பிடிப்பில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். அந்தப் படம் முடிந்ததும் அரசியல் கட்சி துவக்குவது குறித்து சரியான நேரத்தில், சரியான முடிவை அறிவிப்பார்.இவ்வாறு சத்தியநாராயணராவ் கூறினார்.

Saturday, August 29, 2009

விஜயகாந்த் + காங்கிரஸ் + விஜய் = தமிழகத்தில் ஆட்சி?

"திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை அமைக்க வேண்டும்' என, மாஜி மத்திய அமைச்சர் இளங்கோவன் அடிக்கடி வேண்டுகோள் விடுத்து வருகிறார். புதிய இளைஞர்களை கட்சியில் சேர்த்து, தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுலுக்கும் லட்சியமாக உள்ளது.

அதனால், தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், மாஜி இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோரை அழைத்து அவர்களின் கருத்துக்களை ராகுல் கேட்டறிந்து வருகிறார். தமிழக மக்களின் ஒட்டு மொத்த ஓட்டுகளை கவரும் வகையில் சினிமா பிரபலங்களை காங்கிரஸ் கூட்டணியில் இணைத்து வலுசேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ரகசிய திட்டத்தை தீட்டி, மாஜி மத்திய அமைச்சர் ஒருவர் ராகுலுக்கு இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளார்.அவரது திட்டத்தின் முதல் கட்டமாக புதுச்சேரியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், கடந்த 23ம் தேதி நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், முதல்வர் வைத்திலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். "அரசியலில் நுழைய விருப்பம். வர வேண்டிய நேரத்தில் சரியாக வருவேன்' என தனது ரசிகர்களுக்கு அரசியல் ஆசையை தூண்டி பேசினார் நடிகர் விஜய்.இந்த விழாவில் புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் பேசும் போது, "மாணவ, மாணவிகளுக்கு விஜய் அதிகமான அறிவுரைகளை கூறியுள்ளார். அவற்றை முறையாக பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார்.

"காங்கிரசுடன் கூட்டணி வைக்கத் தயார்' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் பேசியுள்ளது, தமிழக காங்கிரசாருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
காங்கிரசை பலப்படுத்தி, தனித்து போட்டியிடும் வகையில், மாற்றியமைக்க ராகுல் ஒருபுறம் முயற்சி எடுத்து வரும் நிலையில், தற்போதுள்ள தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு இன்னொருபுறம் அச்சாரம் போடப்பட்டு வருகிறது."கூட்டணி தர்மத்திற்காக தி.மு.க., வை அனுசரிக்கிறோம், தமிழகத்தில் ஓராண்டுக்கு முன் 2010ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடத்த தி.மு.க., முடிவு செய்துள்ளது. பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என தி.மு.க., நினைக்கிறது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது தொடர்ந்து நமக்கு சரிவு தான் ஏற்படும்' என்று வேலூர் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் ஞானசேகரன் பரபரப்பாக பேசினார்.

தமிழகத்தில் காங்கிரசை பலப்படுத்த ராகுல் எடுத்துவரும் முயற்சியின் ஒருபகுதியாகவே ஞானசேகரன் இப்படி பேசியதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி தொடருமா? என்ற கேள்வியை ஞானசேகரன் எழுப்பியுள்ளார்.டில்லியிலும் காங்கிரஸ் - தி.மு.க., தலைவர்கள் இடையே சுமூக உறவு இல்லை என கூறப்படுகிறது. இப்படி பல்வேறு திரைமறைவு அரசியலுக்கு மத்தியில், தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள ராகுல் திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி வளர்ச்சி மற்றும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நடிகர் விஜயுடன் புது கூட்டணி அமைப்பது காங்கிரசுக்கு தமிழகத்தில் வெற்றியை தேடித் தரும் என்ற கருத்தை மாஜி மத்திய அமைச்சரின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.ராகுல் திட்டம் மற்றும் காங்கிரசாரின் விருப்பங்கள் எந்த அளவுக்கு பலனை அளிக்கப் போகின்றன என்பது விரைவில் தெரியவரும்.

சிறைகளில் தமிழ் இளைஞர்கள்? - சட்ட அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழும், சந்தேகத்தின் பேரிலும் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுவிப்பது தொடர்பாக ஒரு விசாரணைத் திட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்க சட்ட அமைச்சகத்திற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே கொலைத் தொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை வருடமாக காவலில் வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்புப் பகுதியைச் சேர்ந்த ஜே.ஏ. பிரான்சிஸ் என்பவர் தொடர்ந்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்த சிறிலங்க உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டம், சந்தேகத்தின் பேரில் கைது என்று சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பின், அவர்கள் மீது வழக்குத் தொடரவோ, சாட்சிகள் இல்லாத பட்சத்தில் அவர்களை விடுதலை செய்யவோ ஒரு அவசர வேலைத் திட்டத்தை நீதியமைச்சகத்தின் செயலருடன் சேர்ந்து தயாரித்து நடைமுறைப்படுத்துமாறு சட்ட அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரான்சிஸ் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அசோக என்.டி. சில்வா, “பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக விசாரணைகள் எதுவுமின்றிச் சிறைப்படுத்தியிருப்பது நீதியற்றச் செயல்” என்று கூறியுள்ளார்.

சிறிலங்க அரசின் இப்படிப்பட்ட கைதுகள், சிறைப்படுத்தல்கள் காரணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், அதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை நீதிபதி அசோக டி.என்.சில்வா கூறியுள்ளார்.

கொழும்புவில் உள்ள சிறைகளில் மட்டும் இப்படி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் 90 பேர் தங்களை விடுவிக்கக் கோரி சமீபத்தில் கால வரையற்ற பட்டினிப் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, August 28, 2009

ஜாமீனில் எடுக்காத அண்ணனை அடித்து கொலை செய்த தம்பி

திருட்டு வழக்கில் சிறையிலிருந்த போது, ஜாமீனில் எடுக்காத அண்ணனை அடித்து கொலை செய்த தம்பி, கிராம நிர்வாக அலுவலரிடம் சரணந்து தற்போது மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடலூர் மஞ்சக்குப்பம் நோதாஜி ரோட்டைச்சேர்ந்தவர் ஏழுமலை(57). இவரது மகன்கள் கோவிந்தசாமி(24), சம்பத்(22). இருவரும் புதுச்சேரி காட்டுக்குப்பத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.ஆட்டோ திருடிய வழக்கில் கடந்த 30ம் தேதி சம்பத் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபோது, அண்ணன் கோவிந்தசாமி ஒருமுறை கூட பார்க்கவில்லை. ஜாமீனில் எடுக்கவும் முயற்சிக்கவில்லை. தான் பதுங்கியிருந்த இடத்தை போலீசிற்கு காட்டிக் கொடுத்தது கோவிந்தசாமி தான் என்பது தெரியவந்ததால், சம்பத் ஆத்திரமடைந்தார்.

இந்நிலையில், நண்பர்களின் உதவியால் கடந்த 22ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த சம்பத் வீட்டிற்கு சென்று கோவிந்தசாமியிடம் தகராறு செய்தார். "நீ எனக்கு தம்பியே இல்லை' என கோவிந்தசாமி கூறியுள்ளார். ஆத்திரமடைந்த சம்பத் நேற்று முன்தினம் கன்னியக்கோவிலுக்கு சென்று குடித்துவிட்டு நள்ளிரவு வீட்டிற்கு வந்தார். கதவு பூட்டியிருந்ததால் பின் பக்கமாக சுவர் ஏறி குதித்து, வீட்டிற்குள் சென்று, தூங்கிக் கொண்டிருந்த கோவிந்தசாமியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தார்.

புதுநகர் போலீசார் தேடி வந்த நிலையில், மஞ்சக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் தினகரன் முன் நேற்று காலை சரணடைந்தார். புதுநகர் போலீசில் சம்பத் ஒப்படைக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

விஜயகா‌ந்‌தி‌‌ற்கு ‌சி.‌பி.‌சி.ஐ.டி சம்மன்!!

செ‌ன்னை பனையூ‌ரி‌ல் ச‌மீப‌த்‌தி‌ல் நடைபெ‌ற்ற இர‌ட்டை கொலை வழ‌க்‌கி‌ல் தன‌க்கு தெ‌ரி‌ந்த ‌விவர‌‌ங்களை நே‌ரி‌ல் வ‌ந்து தெ‌ரி‌வி‌க்குமாறு தே.மு.‌தி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌தி‌‌ற்கு ‌சி.பி.சி.ஐ.டி காவ‌ல்துறை‌யின‌ர் தா‌க்‌கீது அனு‌ப்‌பியு‌ள்ளன‌ர்.

பனையூ‌‌ர் த‌ம்‌ப‌தி‌யின‌ர் கொலையில் உண்மையான விசாரணை நடைபெறாது என்றும், வழக்கு விசாரணை நிலையிலேயே குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள் என்றும் ‌விஜயகா‌ந்‌த் கு‌ற்ற‌ம்சா‌ற்‌‌றி‌யிரு‌ந்தா‌ர்.

மேலு‌ம் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டிருந்தாலும் அதையும் மக்கள் நம்பத்தயாராக இல்லை எ‌ன்று‌ம் கூ‌றி‌யிரு‌ந்த‌ா‌ர்.

இந்த வழக்கில் காவல்துறை சுதந்திரமாக செயல்படவிடப்படுமா? புலன்விசாரணை நியாயமாக நடைபெறுமா? உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களா? அவர்கள் ஆளுங்கட்சியில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களோடு சம்பந்தப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுமா?

முறையாக குற்றம்சா‌ற்ற‌ப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்களா? அவர்களுக்கு தக்க ஆதாரங்கள் மூலம் காவல்துறை தண்டனையை பெற்றுத்தர முன்வருமா? எ‌ன்று‌ம் அடு‌க்கடு‌க்காக கேள்விகளை எழு‌ப்‌பி‌‌யிரு‌ந்தா‌ர் ‌விஜயகா‌ந்‌‌த்.

இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி காவ‌ல்துறை‌யின‌‌ர், இது தொடர்பாக விஜயகாந்துக்கு தா‌க்‌கீது அனுப்பியுள்ளனர். இந்த கொலை தொடர்பாக தெரிந்த தகவல்களை நேரில் வந்து தெரிவிக்குமாறு அந்த சம்மனில் கூறியிருப்பதாக தெரிகிறது.

சி.பி.சி.ஐ.டி காவ‌ல்துறை‌யின‌ரிடமிருந்து சம்மன் வந்திருப்பதையடுத்து, விஜயகாந்த் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட மூத்த தலைவர்களோடு ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த தா‌க்‌கீதுக்கு பதிலளிப்பது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Thursday, August 27, 2009

நடிகர் விஜய் ராஜ்யசபா எம்.பி ஆகிறார்!

வெகு விரைவில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார் நடிகர் விஜய். இவருக்கு ராஜ்யசபாவில் எம்.பி பதவியும், அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவியும் வழங்கப்பட இருப்பதாக இன்றய இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. வரும் 2011 தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் விஜய் முக்கிய பாத்திரம் வகிப்பார் என்றும், ராகுல்காந்தியின் தமிழக சட்டசபை ஆட்சியை பிடிக்கும் கனவை நிறைவேற்ற பாடுபடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. திமுக ஆதரவாளராக இருந்த விஜய்யின் தந்தை சந்திரசேகர் இப்போது அரசியலில் புதிய அடி வைக்க இந்த வியூகத்தை பயன்படுத்தியுள்ளார். ஏற்கெனவே ஸ்டாலின் மகனின் திரைப்படத்தில் நடிப்பதற்கான சம்பள விவகாரத்தில் கருணாநிதி குடும்பத்திற்கும், விஜய் குடும்பத்திற்கும் முறுகல் ஏற்பட்டதாக செய்திகள் பரவியிருந்தன. இந்த நிலையில் விஜய் எடுத்துவைத்துள்ள அடி அவரைப் பொறுத்தவரை இலாபகரமானதாகவே இருக்கும். மு.கருணாநிதி குடும்பத்திற்கு மதிப்புக் கொடுக்க வேண்டிய நிலை அவருக்கு இல்லை.

ஏற்கெனவே அவர் நடித்த கடைசி மூன்று படங்களும் பலத்த அடி வாங்கியுள்ளன. தற்போது வரும் சிறிய பட்ஜட் படங்கள் பெரிய நடிகர் படங்களின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. கந்தசாமி படத்தை ஒரு கோடி பத்து இலட்சத்திற்கு வாங்கிய முதலீட்டாளர் தற்போது 40 இலட்சம் நஷ்டம் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் பல கோடிகளை இலகுவாகப் புரட்டும் அரசியல் தளத்திற்குள் விஜய் நுழைவது புத்தி சாதுர்யமானது என்று கருதப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் செல்லாக்காசாக இருக்கும் காங்கிரசை விஜய்யுடன் ரஜனி, அஜித் இணைந்து சென்றாலும் வெற்றிபெற வைப்பது கடினமாகவே இருக்கும். இருப்பினும் பேரம் படியாவிட்டால் விஜய் பல்டியடிக்கவும் இடமுண்டு.

Tuesday, August 25, 2009

இந்தியாவில் மதச் சிறுபான்மையினர் உரிமைகாக்க அமெரிக்காவின் ஆர்வம்!!!

சமீபத்தில் சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷன் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆண்டுக்கான (2009) கண்காணிப்புப் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள மதச் சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டதாகவும் அது குற்றஞ்சாட்டியுள்ளது.

அதுமட்டுமல்ல; மதச் சுதந்திரத்தைப் பற்றி அதிகாரிகள், மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் விவாதிக்க இந்தியா வர இருப்பதாகவும் அதற்கு அனுமதி வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கேட்டுள்ளது. ஆனால், நல்லவேளையாக இந்திய அரசு அதற்கு விசா அளிக்க முன்வரவில்லை.

2007 டிசம்பரில் ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைக் கலவரம் வெடித்தது. இதில் 40 பேர் பலியாயினர்; 60 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்தனர். ஆனால், மாநில அரசு அதைத் தடுக்கவோ கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவோ போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறது அக்கமிஷன்.

இதேபோல 2002-ல் குஜராத்தில் ஹிந்து-முஸ்லிம் கலவரம் வெடித்தது. ஏராளமானோர் இதில் கொல்லப்பட்டனர். ஆனால், வன்முறைக்குக் காரணமானவர்களைக் கைது செய்து தண்டனையளிக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கமிஷன் தனது அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் இந்தியாவில் வகுப்பு மோதலைத் தடுத்து நிறுத்தி மனிதநேயத்தைக் கடைபிடிக்குமாறு இந்தியாவை நிர்பந்திக்குமாறு அதிபர் பராக் ஒபாமாவை அமெரிக்க கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், பெலாரஸ், கியூபா, எகிப்து, இந்தோனேசியா, லாவோஸ், ரஷியக் குடியரசு, சோமாலியா, தாஜிகிஸ்தான், துருக்கி, வெனிசுலா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க கமிஷனின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.

இராக் விவகாரத்தில் எப்படி நடந்துகொண்டோம் என்பதை அமெரிக்கா முதலில் தன்னைத்தானே ஆத்ம பரிசோதனை செய்துகொள்ளட்டும். முன்னாள் அதிபர் புஷ், முஸ்லிம்களுக்கு எதிராக எப்படிச் செயல்பட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆப்கானிஸ்தான் மீதும், இராக் மீதும் அமெரிக்கப் படைகள் எப்படி குண்டுமழை பொழிந்தன? அங்குள்ள சாமானியர்கள் என்ன கதிக்கு ஆளானார்கள் என்பதும், போர்க் கைதிகள் குவான்டமானோ சிறையில் என்ன சித்தரவதைக்குள்ளானார்கள் என்பதும் உலக மக்கள் அறிந்ததே. அமெரிக்காவின் பல பகுதிகளில் இனவெறி தாக்குதல் அதிகரித்து வருவதும், பள்ளிகளில் குழந்தைகள் துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொலை செய்யும் அளவுக்கு அங்கு ஆயுதக் கலாசாரம் தலைதூக்கி வருவதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்த நிலையில் அமைதி, மனித நேயம் குறித்துப் பேசவோ விவாதிக்கவோ அமெரிக்காவுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாகக் கூறிக்கொண்டு பிறநாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது எந்தவகையில் நியாயமானது?

அமெரிக்க கண்காணிப்புப் பட்டியலில் இஸ்ரேலும் பாகிஸ்தானும் இடம்பெறாதது ஏனோ? இரண்டும் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைகள் என்ற காரணத்தினால்தானே?

ஆப்பிரிக்க-அமெரிக்கரான பராக் ஒபாமா, அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது வேண்டுமானால் அமெரிக்காவுக்கு புதுமையாக இருக்கலாம். இந்தியாவில் குடியரசுத் தலைவர் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர். குடியரசு துணைத் தலைவர், பிரதமர் ஆகிய இருவரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். அமெரிக்கச் சமுதாயத்தில் நடைபெறும் இனவெறித் தாக்குதலை இந்தியா சுட்டிக்காட்டினால் என்னவாகும்?

பாகிஸ்தானில்கூட அந்த நாட்டு அரசு சிறுபான்மையினருக்கு பல்வேறு வகைகளில் தொல்லை கொடுத்து வருகிறது. முஸ்லிம்களை தீவிரவாதிகளைப் போல் சித்திரித்து வரும் அமெரிக்கா பாகிஸ்தானை கண்டுகொள்ளாதது ஏன்?

110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பல்வேறு மதத்தினரும், பல்வேறு இனத்தவர்களும் வாழ்கின்றனர். தவறுகள் ஏதேனும் நடந்திருந்தால் அதைச் சட்டவிதிகளுக்கு உட்பட்டு எதிர்கொள்ள நீதித்துறையும் நிர்வாகத்துறையும் இருக்கிறது. மேலும் சம்பவங்களைத் தோலுரித்துக் காட்ட பத்திரிகைகளும் தகவல் சாதனங்களும் உள்ளன.

மதச்சார்பின்மை பற்றியும், மதசகிப்புத்தன்மை பற்றியும் அமெரிக்கா நமக்குக் கற்றுத்தர வேண்டியதில்லை. சகோதரத்துவம், அமைதி ஆகியவற்றை நாம் காலம் காலமாகப் பின்பற்றி வருகிறோம். சரிதானே?

Saturday, August 22, 2009

ஷாருக்கான் என்ன கொக்கா?

ஹிந்தி நடிகர் ஷாருக்கான் அமெரிக்காவிற்குச் சென்றபோது அவரை விமான நிலையத்திலேயே நிறுத்தி வைத்து இரண்டு மணி நேரம் சோதனை போட்டதாகவும் அவருக்கு அதனால் அவமானம் ஏற்பட்டதாகவும் பிரபல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஹிந்து பத்திரிக்கை மூன்று நாட்கள் கலர் படங்களோடு அதுவும் முதல் பக்கத்தில் இச்செய்தியை வெளியிட்டிருந்தது. அமெரிக்காவில் ஒரு இந்தியர் அவமானப்படுத்தபட்டார் என்பதால் மட்டுமல்ல; ஒரு நடிகர் என்பதால் இதற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் போல் தெரிகிறது.

9/11-க்குப் பிறகு அமெரிக்கா முஸ்லீம் தீவிரவாதிகள் தன் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதில் மிகவும் குறியாக இருக்கிறது. அதனால் முஸ்லீம் பெயரான கான் என்னும் பெயர் கொண்டவர்களைத் தீவிரமாகச் சோதனை போடுகிறது. ஷாருக்கான் பெயரிலும் கான் இருப்பதால் அவரையும் சோதனை போட முடிவு செய்தனர் விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள். அதனால் அவரைச் சோதனை போட்டிருக்கிறார்கள். இதில் என்ன தவறு என்று எனக்குப் புரியவில்லை.

ஷாருக்கானைக் கடவுள் போல் நினைத்து வழிபடுவதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தியாவில் இருக்கலாம். அதனால் உலகமெங்கும் அவரை எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று எதிர்பார்ப்பது மடமையல்லவா? அமெரிக்காவில், அதுவும் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பிரிவில் வேலை பார்ப்பவர்கள் ஷாருக்கான் படங்களை விரும்பிப் பார்ப்பார்கள் என்றோ, அவரைப் பார்த்ததுமே அடையாளம் கண்டுகொண்டு அமெரிக்காவிற்குள் அவரை வரும்படி உபசரிப்பார்கள் என்றோ எப்படி எதிர்பார்க்க முடியும்? அவர்கள் அவர்களுடைய கடமையைச் செய்தார்கள் என்பதைத் தவிர அவர்கள் மேல் என்ன தவறு? அவரைக் கைது செய்து வேறு நாட்டிற்கு அனுப்பி சித்திரவதை செய்தார்களா என்ன?

இந்திய தூதரக அதிகாரிகளும் இதைப் பெரிதுபடுத்தியிருக்கிறார்கள். ஒரு சாதாரண இந்தியக் குடிமகனுக்கு இப்படி ஏற்பட்டிருந்தால் தூதரகம் இப்படி நடந்துகொண்டிருக்குமா? ஒரு நடிகருக்கு இப்படி நடந்தது என்பதால் மட்டுமே இப்படி பாய்ந்திருக்கிறது. நடிகர்கள் யாரும் இப்படித் தவறு செய்வதில்லை என்று சிலர் வக்காலத்து வாங்குகிறார்கள். இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு தாதாக்களொடு உறவு இருப்பதாகச் சந்தேகப்பட்டு நம் அரசே அவரைச் சிறையில் அடைத்து வைத்திருந்ததே. நடிகர்கள் என்பதால் மட்டுமே அவர்கள் மற்ற எல்லோரையும் விட நல்லவர்கள் என்று சொல்ல முடியுமா?

அமெரிக்கா தன்னை இப்படி நடத்தியதற்கு இனி அமெரிக்காவிற்கே போவதில்லை என்று ஷாருக்கான் முடிவெடுத்திருக்கிறாராம். குளத்தோடு கோபித்துக்கொண்டு போனவனுக்குத்தான் நஷ்டமே தவிர குளத்திற்கு எந்த நஷ்டமும் இல்லை. அமெரிக்காவிற்கே போவதில்லை என்று ஷாருக்கான் முடிவு செய்தால் அமெரிக்காவிற்கு எந்த நஷ்டமும் இல்லை. வேண்டுமானால் இவரை அமெரிக்காவிற்கு அழைத்து இந்திய சுதந்திர தினத்தில் கலந்துகொள்ள வைத்துவிட வேண்டும் என்று பித்தாய் இருந்தவர்களுக்கு இது நஷ்டமாக அமையலாம். இவர்கள் அமெரிக்கா செய்ததை எதிர்ப்பவர்கள் இனி எந்த அமெரிக்க கம்பெனிகளுக்கும் தாங்கள் வேலை செய்யப் போவதில்லை என்று முடிவு செய்து இந்தியாவிற்குத் திரும்புவார்களா? அமெரிக்க கம்பெனிகளைப் பகிஷ்காரம் செய்வார்களா?

ஆனானப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கலாம் அவர்களையே இப்படிச் சோதனை போட்டபோது அவர் அதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தக் கூட இல்லை. இந்த ஷாருக்கான் அவரை விட எந்த விதத்தில் உயர்ந்தவர்? இந்தியாவில் போல் இவரைப் பார்த்ததும் அமெரிக்காவிலும் எல்லோரும் இவரைத் தரிசிப்பார்கள் என்று ஷாருக்கான் எதிர்பார்த்ததன் எதிரொலிதான் அவருக்கு ஏற்பட்ட கோபம், அதன் விளைவாக விட்ட சவால் எல்லாம். உலகம் முழுவதும் இவரை அறியும் என்பது சுத்த அபத்தம். உலகில் இந்தியர்கள் - குறிப்பாக ஹிந்தியைப் புரிந்துகொள்பவர்கள் மட்டுமே இவரை எங்கும் அடையாளம் கண்டுகொள்வார்கள். இதை ஷாருக்கானும் அவரைக் கடவுளாக நினைக்கும் அவருடைய பக்தர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம். தவறு செய்ததாக யார் மீது சந்தேகம் ஏற்பட்டாலும் அவரைக் கைது செய்யும் உரிமை காவல் துறை அதிகாரிகளுக்கு உண்டு. சமீபத்தில் ஹார்வேர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு சில மணி நேரங்கள் அவர் காவல் துறை அதிகாரி ஒருவரால் விசாரிக்கப்பட்டார். அந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட ஒபாமா, அந்த அதிகாரி முட்டாள்தனமாகச் செயல்பட்டுவிட்டார் என்று கூறிவிட்டார். பின்னால் அவர் தான் அப்படிக் கூறியதன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

9/11-க்குப் பிறகு தீவிரவாதிகளின் தாக்குதல் மறுபடியும் நடந்துவிடுமோ என்று அமெரிக்கா பயந்துகொண்டிருக்கிறது. அமெரிக்க மக்களைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்க அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்கிறது, வெளிநாடுகளிலிருந்து வரும் எல்லோரையும் வரவேற்கும் அமெரிக்கா தீவிரவாதிகள் யாரையும் உள்ளே விடும் தவறைச் செய்யத் தயாராக இல்லை. அந்த முயற்சியில் கொஞ்சம் அதிகமாக நடந்துகொண்டாலும் அதில் தவறில்லை என்றே கூற வேண்டும்.

Friday, August 21, 2009

எங்கே போகிறது இந்திய கிரிக்கெட் அணி?

சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியில் ராகுல் திராவிடைச் சேர்த்திருப்பது முன்னாள் வீரர்களாலும் ஊடகங்களாலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, 2011 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணியை 2007 உலகக் கோப்பை தோல்வியிலிருந்தே தயார் செய்து வருவதாக கூறும் தேர்வு கொள்கைக்கு முரண்பாடாக அமைந்துள்ளது.

அவரது பேட்டிங் திறமை, அணியில் ஒரு வீரராக அவரது பங்களிப்பு ஆகியவற்றில் தன்னை பல்வேறு விதமாக நிரூபித்தவர்தான் திராவிட் என்பதில் ஐயமில்லை. 7-வது பேட்ஸ்மெனையோ, அல்லது கூடுதலாக ஒரு பந்து வீச்சாளரையோ ஒரு நாள் அணியில் சேர்க்கவேண்டிய நிர்பந்தமான காலக் கட்டங்களில் கங்கூலி தலைமியின் கீழ் விக்கெட் கீப்பர் பொறுப்பையும் ஏற்றவர் திராவிட். இந்த பொறுப்பேற்புகளை நாம் ஒரு போதும் மறுக்கப்போவதில்லை.

எனினும் அவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கியபோது 2011 உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு ஒரு பலமான அணியை தயார் செய்து, சிறப்பான அணியை உருவாக்கவே நீக்கம் செய்ததாக அணித் தேர்வுக் குழு கூறியது.

இந்த 2 ஆண்டுகளில் மீண்டும் ஒரு நாள் கிரிக்கெட்டில் இடம்பெற திராவிட் என்ன செய்து விட்டார்? ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் சில அபாரமான இன்னிங்ஸ்களை விளையாடினார். இதையும் நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட், அதுவும் மினி உலகக் கோப்பை என்று வர்ணிக்கப்படும் ஒரு முக்கியமான தொடருக்கு அணியை தேர்வு செய்யும்போது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் காட்டிய திறமையை கணக்கில் எடுத்துக் கொள்வது எப்படி என்று தெரியவில்லை!

ஒரு நாள் போட்டியிலிருந்து தன்னை நீக்கி விட்டதற்கு பாடம் புகட்ட டெஸ்ட் போட்டிகளில் அதிரடி இன்னிங்ஸ்கள் எதையும் விளையாடினாரா? இல்லை. இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இவர் கிரகாம் ஸ்வான், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துகளில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஆஸ்ட்ரேலியாவில் கும்ளே தலைமை இந்திய அணி பயணம் மேற்கொண்டபோது சர்ச்சைக்குரிய அந்த தொடரில் அவர் நாம் வெற்றி பெற்ற பெர்த் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 91 ரன்களை எடுத்தார்.

அதே ஆஸ்ட்ரேலிய அணி மீண்டும் இந்தியா வந்த போதும் திராவிடின் பேட்டிங் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இந்த பேட்டிங் வரலாற்றை வைத்துத்தான் அவரை ஒரு நாள் அணிக்கு தேர்வு செய்வதா வேண்டாமா என்று முடிவு செய்யப்பட்டிருக்கவேண்டும். ஐ.பி.எல். கிரிக்கெட் எவ்வளவுதான் சவாலான ஆட்டமாக இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வீரருக்கு கொடுக்கப்படும் நெருக்கடி, அழுத்தம் கொடுக்கப்பட மாட்டாது என்பதை முன்னணி வீரர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

நியூஸீலாந்திற்கு இந்தியா பயணம் மேற்கொண்ட போது பலமான இந்திய 20- 20 அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வி தழுவியது. ஆனால் இருபதுக்கு 20 தோல்வியை வைத்து ஒரு நாள் கிரிக்கெட்டை நாம் கணிக்க முடியாது என்று பலரும் கூறியது பின்பு இந்தியா நியூஸீலாந்தை 3- 1 என்று வெற்றி பெற்றதன் மூலம் நிரூபணமானது. இப்படியிருக்கையில், இருபதுக்கு 20 போட்டிகளில் அதுவும் உள் நாட்டு 20- 20 தொடரான ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எடுக்கும் ரன்கள் எந்த அளவிற்கு சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் பயனளிக்கும் என்பது தெரியவில்லை.

ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரில் வெற்றி பெற்ற பிறகு, இலங்கையில் இரண்டு ஒரு நாள் தொடர், நியூஸீலாந்து தொடர், இங்கிலாந்திற்கு எதிரான தொடர், சமீபமாக மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடர் என்று திராவிட் இல்லாமல் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதுவும் ஒரு சில போட்டிகளில் சேவாகும் இல்லை, சச்சின் டெண்டுல்கரும் இல்லை. இருப்பினும் தொடரை இந்தியா இழக்கவில்லை. மாறாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வரிந்து கட்டி ரன்களை குவித்த வீரர்களுடன் இருபதுக்கு 20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா தோல்வி தழுவியது. மீண்டும் சேவாக் அணியில் காயம் காரணமாக இடம்பெறமுடியவில்லை.

பின்னால் களமிறங்கி நன்றாக விளையாடக்கூடிய ரோஹித் ஷர்மாவை துவக்க வீரராக களமிறக்கி அவர் சரியாக விளையாடவில்லை என்று கூறி தற்போது அணியிலிருந்து நீக்கியிருப்பது சரியான முடிவாகத் தெரியவில்லை.

அப்படியே அவர் நீக்கப்பட்டிருந்தாலும் அவரது இடத்தில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வரும் வீரத் கோலியைத்தான் தேர்வு செய்திருக்கவேண்டும், கோலி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சில அபாரமான இன்னிக்ஸ்களை விளையாடியதோடு, ஆஸ்ட்ரேலியாவில் சமீபமாக நடைபெற்ற 4 நாடுகளுக்கு இடையிலான எமர்ஜிங் வீரர்கள் ஒரு நாள் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல அவரது பேட்டிங்கே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அவர் பந்து வீச்சிலும் சிக்கனமானவர். அனைத்திற்கும் மேலாக ஸ்லிப், பாயிண்ட், கல்லி மட்டும் அல்லாமல் எந்த இடத்திலும் அவர் மிகச்சிறந்த ஃபீல்டர்.

கோலி ஒரு எதிர்கால இந்திய வீரர். அவருக்கு வாய்ப்பளிக்காமல் 2 ஆண்டுகளில் எந்த வித ஒரு நாள் கிரிக்கெட்டிலும் பங்கு பெறாத திராவிடை எப்படி தேர்வு செய்ய முடியும்?

ராபின் உத்தப்பாவிற்கு கூட ஒரு வாய்ப்பு அளித்துப் பார்த்திருக்கலாம். ஆனால் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தினேஷ் கார்த்திக் மேல் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார். திராவிடிற்கு பதிலாக பத்ரிநாத்தை அணியில் எடுத்திருந்தால் கூட ஒரு நியாயம் இருந்திருக்கும். ஏனெனில் பத்ரிநாத்திற்கு வாய்ப்பே அளிக்காமல், தேர்வு செய்து பல தொடர்களில் ஓய்வறை பார்வையாளராக உட்கார வைக்கப்பட்டுள்ளார். வாய்ப்பு கொடுக்காமலேயே அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன் அடிப்படை என்னவென்றும் புரியவில்லை.

ஐ.பி.எல். கிரிக்கெட் இந்தியாவின் மறைந்திருக்கும் இளம் திறமைகளை கண்டுபிடிக்கத்தான் என்று கூறி கொண்டு மீண்டும் 35 வயதான திராவிடிடம் போய் தஞ்சமடைந்திருப்பது தேர்வுக் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு என்பதோடு, இளம் வீரர்களின் நம்பிக்கையையும் தகர்ப்பதாக உள்ளது. அதே போல் காரணமில்லாமல் நீக்கப்பட்டிருக்கும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிராக்யன் ஓஜா. இவரை எமர்ஜிங் அணியில் தேர்வு செய்யாமல், அமித் மிஷ்ராவை தேர்வு செய்தனர். பிராக்யன் ஓஜா விளையாடிய வரையில் எதிரணியினரின் நடுக்கள வீரர்களை குறி வைத்து விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமையுடையவர் என்பதை நிரூபித்தார். அமித் மிஷ்ராவைக் காட்டிலும் தற்போது அனுபவசாலி ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

ஒரு புறம் இந்திய அணிக்கு நிலைத்தன்மையை ஏற்படுத்த அனுபவம் தேவை. அதாவது திராவிட் தேவை. மறு புறம் அனுபவம் பெற்று சிறப்பாக பங்களிக்க துடிக்கும் பிராக்யன் ஓஜா தேவையில்லை. ஒரு நாள் கிரிக்கெட் விளையாடாத அமித் மிஷ்ரா தேவை. இது போன்ற முரண்பாடுகள் இருக்கிறது என்பதை மட்டும் நாம் பார்த்தால் போதுமானது.

பிரவீண் குமார் மேற்கிந்திய தொடரில் சரியாக வீசவில்லை. ஆனால் அவர் மீண்டும் இடம்பெற்றுள்ளார். மேற்கிந்திய தொடரில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக ரோஹித் ஷர்மா நீக்கப்பட்டுள்ளார். முனாஃப் படேலுக்காக பேசுவதற்கு ஆளில்லை என்பதனால் அவர் அணித் தேர்வில் பரிசீலிக்கப்படக்கூட இல்லை.

எமர்ஜிங் அணியில் சிறப்பாக வீசியதற்காக அமித் மிஷ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். எமர்ஜிங் அணியில் சிறப்பாக விளையாடிய வீரத் கோலி தேர்வு செய்யப்படவில்லை. பத்ரிநாத் தேர்வு செய்யப்படவில்லை. தினேஷ் கார்த்திக் அணியில் எப்படி தொடர்ந்து நீடிக்க முடிகிறது என்பது புதிராகவே உள்ளது. திராவிடை மீண்டும் அணியில் தேர்வு செய்திருப்பது பற்றி அனைவரும் வரவேற்பு கொடுத்துள்ள நிலையில் திராவிடின் ஒட்டு மொத்த ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் பங்களிப்பையும் நாம் ஒரு விமர்சனப் பார்வைக்கு உட்படுத்துவோம். ஏனெனில் திராவிட் அணிக்குள் வரும்போது வினோத் காம்ப்ளி போன்ற அதிரடி பேட்ஸ்மென் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வினோத் காம்ப்ளியின் டெஸ்ட் சராசரி 54 என்பது குறிப்பிடத்தக்கது.

1996ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு எதிராக சிங்கப்பூரில் தன் முதல் ஒரு நாள் போட்டியை விளையாட தொடங்கிய திராவிட் சரியாக 10-வது போட்டியில்தான் பாகிஸ்தானுக்கு எதிராக டொரோன்டோ மைதானத்தில் 90 ரன்களை எடுத்து முதல் அரைசதம் எடுத்தார். அதற்கு அடுத்த அரைசதம் 4 போட்டிகளுக்கு பிறகு தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியாவில் எடுக்கப்படுகிறது. 62 ரன்களை எடுக்கிறார். இந்தியா தோல்வியடைகிறது. 87 பந்துகளில் 62 ரன்களை திராவிட் எடுக்கிறார். இது பிரச்சனையில்லை. ஆனால் அவ்வளவு நேரம் பந்து வீச்சை பார்த்த சிறந்த வீரர் திராவிட் அந்தப் போட்டியை வென்றிருக்கவேண்டும். ஆனால் இல்லை.

அதன் பிறகும் சில அரை சதங்களை எடுக்கிறார். ஆனால் ஒவ்வொரு அரைசதத்திற்கு இடையிலும் குறைந்தது 4 அல்லது 5 போட்டிகள் இடைவெளி. அதாவது சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

மேலும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுப்பதும், அதிக சராசரியை வைப்பதும் பெரிய விஷயமல்ல. ஏனெனில் சொத்தை அணிகள் அதில் நிறைய இடம்பெறுகின்றன. இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை போன்ற பந்து வீச்சு பலமாக உள்ள அணிகளுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட ஒரு தினப் போட்டித் தொடரில் சீரான முறையில் ரன்களை திராவிட் குவித்திருக்கிறாரா என்று பார்த்தால் நமக்கு ஏமாற்றமே விஞ்சும்.

1996, 98, 2000, 2007, ஆகிய ஆண்டுகளில் 35 ரன்கள் சராசரியை பராமரிக்க போராடியுள்ளார் திராவிட். மேலும் அவரது உச்சகாலத்தில் கூட எதிரணியினரின் உத்தி வகுப்பு விவாதங்களில் திராவிடை ஒரு பெரிய அச்சுறுத்தலாக எந்த அணியும் கருதவில்லை. சச்சின், சேவாக், யுவ்ராஜ், ஏன் கயீஃப், தினேஷ் மோங்கியா போன்றோர் கூட எதிரணியினரின் உத்தி வகுப்பு விவாதங்களில் ஒரு அச்சுறுத்தலாக பேசப்பட்டிருப்பார்கள். ஆனால் திராவிட் ஒரு நாளும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்ததில்லை.

மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு போதும் 50 ரன்கள் சராசரியை அவரது உச்சகாலத்தில் கூட திராவிட் வைத்திருந்ததில்லை. தோனி தற்போது ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு நீண்ட நாட்களுக்கு முதலாம் இடத்தில் நீடிக்கிறார் என்றால் அவரது சீரான ரன் குவிப்புதான் காரணம். 50 ரன்கள் சராசரியையும் வைத்திருந்தார் தோனி. இப்போதும் இவரது சராசரி 50 ரன்களுக்கு சற்றே குறைவு.

தற்போது வந்துள்ள கௌதம் கம்பீர், யூசுஃப் பத்தான், சுரேஷ் ரெய்னா போன்றோரைக் கூட எதிரணியினர் தங்கள் வெற்றிக்கு பங்கம் விளைவிக்கும் அச்சுறுத்தலாகவே கருதுவர். ஆனால் உலகின் எந்த ஒரு முன்னணி கிரிக்கெட் அணியின் கேப்டனையும் அழைத்து திராவிட் பற்றி கேட்டால் ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் பேட்டிங் பெரிய அச்சுறுத்தல் இல்லை என்றே கூறுவார்கள். திடீரென அவரை அணியில் தேர்வு செய்து விட்டார்கள் என்பதற்காக அவர் 'லொட்டு' வைத்து நம்மை வெறுப்பேற்றிய காலங்களை நாம் மறக்க முடியாது.

மேலும் இப்போது அணியில் விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ரன்கள் ஓடுவதை ஒரு உத்தியாகவே இந்திய வீரரகள் வளர்த்து வருகின்றனர். திராவிட் இந்த இளம் வீரர்களின் ஓட்டத்திற்கு ஈடு கொடுப்பாரா என்பது சந்தேகமே. இவருடன் ஓட முடியாமல் கம்பீர், ரெய்னா, ஏன் சச்சின் டெண்டுல்கர் போன்றவர்கள் கூட ரன் அவுட் ஆகும் வாய்ப்பு உள்ளது.

சில சமயங்களில் பந்துகளை சாப்பிட்டு எதிர் முனையில் நிற்கும் இளம் வீரர்களுக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் வெறுப்பேற்றும் தருணங்களையும் நாம் மறுக்க முடியாது. இருபதுக்கு 20 க்ரிக்கெட்டில் சில புதிய ஷாட்களை இவர் விளையாடி (அதாவது திராவிடிற்கு அது புதிய ஷாட்) ரன்களை எடுத்தார் என்பதற்காக அதே உத்தியை அவர் வரவிருக்கும் ஒரு நாள் தொடரிலும் கடைபிடிப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஒரு சில அரை சதங்களை வேண்டுமானால் அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியுமே தவிர அது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பாக இருக்குமா என்றெல்லாம் நாம் உடனடியாக கூற முடியாது.

ஆகவே அபிஷேக் நாயர் போன்ற வீரர்களை 11-ற்குள் எடுத்து திராவிடை குறைவாக பயன்படுத்தினால் நல்லது என்றே தோன்றுகிறது. மீண்டும் 3-ஆம் இடம் என்ற முக்கிய நிலையில் அவருக்கு நிரந்தரமாக ஒரு இடம் கொடுப்பது என்பது அணியை பின்னடைவிற்கு இட்டுச்செல்லும் என்பது உறுதி. தோனிக்கு இன்று இருக்கும் முக்கிய சவால் என்னவெனில் சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வதல்ல. திராவிடை எவ்வளவு சிக்கனமாக பயன்படுத்துகிறார் என்பதிலேயே உள்ளது.

Wednesday, August 12, 2009

யாகூ + மைக்ரோசாஃப்ட் = புதிய ஒப்பந்தம் | நோக்கம்?

யாகூ இணையத்தில் நவீன தேடல் தொழில்நுட்பத்துக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் கையேந்தியிருக்கிறது. இதற்காக கடந்த 29-ம் தேதி இரு நிறுவனங்களும் ஒப்பந்தமும் செய்து கொண்டிருக்கின்றன. உண்மையில் தோல்விக்கான யாகூவின் ஒப்புதல்தான் இந்த ஒப்பந்தம். யாகூவிடம் தனித்து வெற்றி பெறுவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை என்பதும் இதன்மூலம் வெளிப்படையாகியிருக்கிறது.

இரு நிறுவனங்களும் ஏதோ மனமுவந்து இந்தக் கூட்டுக்கு ஒப்புக்கொண்டிருக்கின்றன என நினைத்தால் அது தவறு. இந்த நிறுவனங்களுக்கு கைகோர்ப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதுதான் உண்மை.

கடந்த சில ஆண்டுகளாகவே கூகுளின் வளர்ச்சியை எதிர்கொள்ள முடியாத மைக்ரோசாஃப்ட், யாகூவைக் கைப்பற்றுவதில் குறியாக இருந்தது. கடந்த ஆண்டில் 44 பில்லியன் டாலர்களுக்கு ஒட்டுமொத்தமாக யாகூவை விலை பேசியது. இந்த பேரம் படியாமல் போனதால், இப்போது புதிய ஒப்பந்தம் போட்டு யாகூவை வளைத்திருக்கிறது மைக்ரோசாஃப்ட்.

இந்த ஒப்பந்தப்படி, யாகூ இணையதளத்தில் இயங்கிவரும் தேடும் வசதி, மைக்ரோசாஃப்டின் "பிங்' தேடுபொறியின் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும். இதற்குப் பதிலாக மைக்ரோசாஃப்டின் ஆன்லைன் விளம்பரங்களைச் சந்தைப்படுத்தும் பணியை யாகூ மேற்கொள்ளும். இதற்காக 400 பேர் கொண்ட யாகூ ஊழியர் குழுவை மைக்ரோசாஃப்ட் சுவீகரித்துக் கொள்ள இருக்கிறது. யாகூ தேடுபொறி, பிங் உதவியுடன் செயல்பட்டாலும் தேடல் வருவாயில் 88 சதவீதம் யாகூவுக்கே கிடைக்கும் என்கிறது இந்த ஒப்பந்தம்.

10 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்க இந்த ஒப்பந்தத்தின் முதல் நோக்கம், இணையத் தேடல் சந்தையில் 65 சதவீதத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் கூகுளை வீழ்த்துவதுதான் என்பதில் சந்தேகமேயில்லை.

இரண்டாவது நோக்கம், வீழ்ந்து கிடக்கும் யாகூவைச் சுதாரிக்கச் செய்வது. இதற்காக யாகூவுக்கு 4 பில்லியன் டாலர்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கொடுத்து உதவப் போவதாகவும் பேச்சு அடிபட்டது. இதனால், ஒப்பந்தம் கையெழுத்தாவதற்குச் சற்று முன்வரை யாகூவின் பங்குகளின் மதிப்பு சரசரவென உயர்ந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி, நிதியுதவி எதுவும் தரப்படாததால், யாகூ பங்குகள் சரியத் தொடங்கின. அதேநாளில் மைக்ரோசாஃப்ட் பங்குகளின் விலை சற்று உயர்ந்தது. இதிலிருந்தே ஒப்பந்தம் யாருக்குச் சாதகமானது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

யாகூ முதலீட்டாளர்கள் இப்போது தலையில் கையை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக யாகூவை விற்றிருந்தால்கூட, ஒரு பங்குக்கு 33 டாலர்கள் கிடைத்திருக்கும். ஆனால், இன்று அந்த விலையில் பாதிக்கும் கீழே பங்குகளின் மதிப்பு குறைந்து கொண்டிருக்கிறது.

இருந்தாலும், இந்தப் புதிய கூட்டு மூலம் தேடுபொறிச் சந்தையிலும் பங்குகளின் விலையிலும் ஒரு குறிப்பிட்ட இலக்கை (அறிவிக்கப்படவில்லை) ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (இதுவும் அறிவிக்கப்படவில்லை) எட்ட முடியாவிட்டால் உறவை முறித்துக் கொள்ளலாம் என்னும் விதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது யாகூவுக்கு மிகச் சாதகமானது. எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும், சிறிய அளவில் நிதியுதவியை அளிக்க மைக்ரோசாஃப்ட் முன்வந்திருக்கிறது. இப்போதைய நிதிநெருக்கடியைச் சமாளிக்க இந்த நிதி யாகூவுக்கு உதவும்.

இன்னொரு பக்கம், இந்த ஒப்பந்தத்துக்குப் பின்னால் யாகூவை வீழ்த்தும் சதி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அதாவது, யாகூ இணையதளத்தில் பிங் தொழில்நுட்பத்துடன் கூடிய தேடல் வசதி அமைக்கப்பட்டாலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தனது இணையதளங்களில் பிங் தேடும் வசதியைத் தொடர்ந்து இயக்கும். இதுபோக, தனியாக பிங் இணையதளமும் செயல்படும். இவற்றுக்கு எந்தக் கட்டுப்பாடும் ஒப்பந்தத்தில் இல்லை. இதனால், தேடல் சந்தையில் மைக்ரோசாஃப்டின் பங்கு தொடர்ந்து ஸ்திரமாக இருக்கும்.

அதேநேரம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமது தேடல் தொழில்நுட்பத்தை விட பிங் தொழில்நுட்பம் சிறந்தது என யாகூ மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறது. இதனால் பிங் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அந்தப் பரபரப்பு, யாகூ இணையதளத்தில் தேடுவதைவிட பிங் இணையதளத்துக்கே சென்று தேடலாம் என்கிற மனோபாவத்தை இணையத்தைப் பயன்படுத்துவோர் மத்தியில் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. இதனால் பிங் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஆக, பிங் தேடுபொறியைப் புதிதாகப் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர், யாகூவைக் கைவிட்டுவிட்டு வந்தவர்களாக இருப்பார்களேயொழிய, கூகுளிலிருந்து வந்தவர்களாக இருக்கப்போவதில்லை. இதனால், கூகுளை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறாமல் போவதுடன், தனது தேடல் சந்தையையும் யாகூ இழக்க வேண்டியிருக்கும்.

எப்படியோ மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆக்டோபஸ் கரங்களில் யாகூ சிக்கிவிட்டது. தூக்கி விடுவதும் போட்டு உடைப்பதும் கால மாற்றங்களைப் பொறுத்தது.

Tuesday, August 11, 2009

பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது? என்பது பற்றிய சில யோசனைகளை பொது ம‌க்களு‌க்கு மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அதனை ‌பி‌ன்ப‌ற்‌றி ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பரவுவதை தடு‌ப்போ‌ம்.

தினமு‌ம் குறை‌ந்தப‌ட்ச‌ம் ஒரு வேளை சு‌த்தமான ‌நீ‌ரி‌ல் கு‌ளியு‌ங்க‌ள். நோய்க்கிருமி எதிர்ப்பு சக்தி கொண்ட சோப்பை‌க் கொ‌ண்டு அடிக்கடி கைகளை கழுவுங்கள். குழாய் தண்ணீரில் குறைந்த பட்சம் 15 வினாடிகள் கைகளை அலசுங்கள்.

வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று ‌வி‌ட்டு வ‌ந்தது‌ம் கை‌, கா‌ல், முக‌ம், கழு‌த்து‌ப் பகு‌திகளை சு‌த்தமான த‌ண்‌ணீரா‌ல் ந‌ன்கு கழுவு‌ங்க‌ள். இரவில் குறைந்த பட்சம் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு உற‌க்க‌ம் அவ‌சிய‌ம். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு தானிய வகைகள், பசுமையான காய்கறிகள், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுங்கள்.

மது அருந்தினால் உடலில் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி குறையு‌ம். இதனா‌ல் பன்றி காய்ச்சல் போ‌ன்ற நோய்க்கிருமிக‌ள் உடலு‌க்கு‌ள் எ‌ளிதாக ஊடுருவு‌ம் எ‌ன்பதா‌ல் மது அருந்துவதை தவிர்த்து விடுங்கள்.

மிதமான உடற்பயிற்சி உடலில் ஆக்சிஜனின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் என்பதால், தினசரி 30 முதல் 40 நிமிடம் வேகமான நடை‌ப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருங்கள்.

இருமுவதன் மூலமும், தும்முவதன் மூலமும் பன்றி காய்ச்சல் நோய்க்கிருமி ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதால், நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து விலகி இருங்கள். உடல் ரீதியாகவும் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள்.

தேவை இல்லாமல் வெளியில் செல்வதையும், கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதையும் தவிருங்கள். கண்கள், மூக்கு, வாய் மூலம் நோய்க்கிருமிகள் உடலுக்குள் செல்லும் என்பதால் அவ‌ற்றை தொடுவதையும் தவிருங்கள்.உட‌ல் நல‌க் குறைவை‌த் த‌விர வேறு எ‌ந்த‌க் காரண‌த்‌தி‌ற்காகவு‌ம் குழ‌ந்தைகளை மரு‌த்துவமனை‌க்கு அழை‌த்து வரா‌தீ‌ர்க‌ள்.

குழ‌ந்தைகளை வெ‌ளி‌யி‌ல் கொ‌ண்டு செ‌ல்வதை‌த் த‌விரு‌ங்க‌ள். வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு வ‌ந்தது‌ம் குழ‌ந்தைகளை‌த் தூ‌க்கா‌தீ‌ர்‌க‌ள். உடனடியாக உடலை சு‌த்த‌ம் செ‌ய்த ‌பி‌ன்னரே அடு‌த்த வேலையை‌த் துவ‌க்கு‌ங்கள‌். இருமல், காய்ச்சல் இருந்தால் மரு‌த்துவரை சந்தித்து ஆலோசித்து, அவரது யோசனைகளின்படி மருந்து சாப்பிடுங்கள்.

சாதாரண கா‌ய்‌ச்ச‌ல் எ‌ன்று ‌நீ‌ங்களாக எ‌ந்த மரு‌ந்தையு‌ம் வா‌ங்‌கி சா‌ப்‌பிடா‌தீ‌ர்க‌ள். கா‌ய்‌ச்ச‌ல் வ‌ந்தவ‌ரி‌ன் அரு‌கி‌ல் செ‌ல்வதை த‌வி‌ர்‌த்து‌விடு‌ங்க‌ள். குழ‌ந்தைகளையு‌ம் அனு‌ப்ப வே‌ண்டா‌ம்.
வெ‌ளி நாடு ம‌ற்று‌ம் வெ‌ளி மா‌நில‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து வ‌ந்தவ‌ர்களை செ‌ன்று பா‌ர்‌ப்பதை‌த் த‌வி‌ர்‌த்து‌விடு‌ங்க‌ள்.

பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க அவ்வப்போது அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை தெரிந்து கொண்டு, அதன்படி நடந்து கொள்ளுங்கள்.