Friday, August 28, 2009

ஜாமீனில் எடுக்காத அண்ணனை அடித்து கொலை செய்த தம்பி

திருட்டு வழக்கில் சிறையிலிருந்த போது, ஜாமீனில் எடுக்காத அண்ணனை அடித்து கொலை செய்த தம்பி, கிராம நிர்வாக அலுவலரிடம் சரணந்து தற்போது மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடலூர் மஞ்சக்குப்பம் நோதாஜி ரோட்டைச்சேர்ந்தவர் ஏழுமலை(57). இவரது மகன்கள் கோவிந்தசாமி(24), சம்பத்(22). இருவரும் புதுச்சேரி காட்டுக்குப்பத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.ஆட்டோ திருடிய வழக்கில் கடந்த 30ம் தேதி சம்பத் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபோது, அண்ணன் கோவிந்தசாமி ஒருமுறை கூட பார்க்கவில்லை. ஜாமீனில் எடுக்கவும் முயற்சிக்கவில்லை. தான் பதுங்கியிருந்த இடத்தை போலீசிற்கு காட்டிக் கொடுத்தது கோவிந்தசாமி தான் என்பது தெரியவந்ததால், சம்பத் ஆத்திரமடைந்தார்.

இந்நிலையில், நண்பர்களின் உதவியால் கடந்த 22ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த சம்பத் வீட்டிற்கு சென்று கோவிந்தசாமியிடம் தகராறு செய்தார். "நீ எனக்கு தம்பியே இல்லை' என கோவிந்தசாமி கூறியுள்ளார். ஆத்திரமடைந்த சம்பத் நேற்று முன்தினம் கன்னியக்கோவிலுக்கு சென்று குடித்துவிட்டு நள்ளிரவு வீட்டிற்கு வந்தார். கதவு பூட்டியிருந்ததால் பின் பக்கமாக சுவர் ஏறி குதித்து, வீட்டிற்குள் சென்று, தூங்கிக் கொண்டிருந்த கோவிந்தசாமியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தார்.

புதுநகர் போலீசார் தேடி வந்த நிலையில், மஞ்சக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் தினகரன் முன் நேற்று காலை சரணடைந்தார். புதுநகர் போலீசில் சம்பத் ஒப்படைக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

0 பேரு சொன்னாங்க: