Thursday, August 27, 2009

நடிகர் விஜய் ராஜ்யசபா எம்.பி ஆகிறார்!

வெகு விரைவில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார் நடிகர் விஜய். இவருக்கு ராஜ்யசபாவில் எம்.பி பதவியும், அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவியும் வழங்கப்பட இருப்பதாக இன்றய இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. வரும் 2011 தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் விஜய் முக்கிய பாத்திரம் வகிப்பார் என்றும், ராகுல்காந்தியின் தமிழக சட்டசபை ஆட்சியை பிடிக்கும் கனவை நிறைவேற்ற பாடுபடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. திமுக ஆதரவாளராக இருந்த விஜய்யின் தந்தை சந்திரசேகர் இப்போது அரசியலில் புதிய அடி வைக்க இந்த வியூகத்தை பயன்படுத்தியுள்ளார். ஏற்கெனவே ஸ்டாலின் மகனின் திரைப்படத்தில் நடிப்பதற்கான சம்பள விவகாரத்தில் கருணாநிதி குடும்பத்திற்கும், விஜய் குடும்பத்திற்கும் முறுகல் ஏற்பட்டதாக செய்திகள் பரவியிருந்தன. இந்த நிலையில் விஜய் எடுத்துவைத்துள்ள அடி அவரைப் பொறுத்தவரை இலாபகரமானதாகவே இருக்கும். மு.கருணாநிதி குடும்பத்திற்கு மதிப்புக் கொடுக்க வேண்டிய நிலை அவருக்கு இல்லை.

ஏற்கெனவே அவர் நடித்த கடைசி மூன்று படங்களும் பலத்த அடி வாங்கியுள்ளன. தற்போது வரும் சிறிய பட்ஜட் படங்கள் பெரிய நடிகர் படங்களின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. கந்தசாமி படத்தை ஒரு கோடி பத்து இலட்சத்திற்கு வாங்கிய முதலீட்டாளர் தற்போது 40 இலட்சம் நஷ்டம் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் பல கோடிகளை இலகுவாகப் புரட்டும் அரசியல் தளத்திற்குள் விஜய் நுழைவது புத்தி சாதுர்யமானது என்று கருதப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் செல்லாக்காசாக இருக்கும் காங்கிரசை விஜய்யுடன் ரஜனி, அஜித் இணைந்து சென்றாலும் வெற்றிபெற வைப்பது கடினமாகவே இருக்கும். இருப்பினும் பேரம் படியாவிட்டால் விஜய் பல்டியடிக்கவும் இடமுண்டு.