Thursday, December 17, 2009

பெற்​றோர்​கள் சற்று சிந்​திப்​பார்​களா?

தங்​கள் குழந்​தை​க​ளைப் பள்​ளி​க​ளில் சேர்ப்​ப​தோடு தங்​க​ளது கடமை முடிந்​து​ விட்​டது எனக் கரு​தா​மல் தங்​கள் பிள்​ளை​க​ளின் செயல்​பா​டு​க​ளைப் பெற்​றோர்​கள் கண்​கா​ணித்து வர​வேண்​டி​யது இன்​றைய காலத்​தின் கட்​டா​ய​மாக மாறி வரு​கி​றது.​

​ ​ தொடக்க நிலை​யைக் காட்​டி​லும் உயர் மற்​றும் மேல்​நிலை வகுப்​பு​க​ளில் பயி​லும் மாண​வர்​க​ளைக் கண்​டிப்​பா​கப் பெற்​றோர்​கள் கவ​னத்​து​டன் கையாள வேண்​டும்.​ ஏனெ​னில் வளர்​இ​ளம் பரு​வத்​தில் உள்ள இவர்​க​ளின் ஒவ்​வொரு செய​லுமே அவர்​க​ளுக்​குச் சரி​யா​கப் படும் என்​ப​தால் இந்​தப் பரு​வத்​தில் அவர்​கள் மீது கண்​டிப்​பாக ஒரு கண் வைக்க வேண்​டும் என்​பதை யாரா​லும் மறுக்க முடி​யாது.​

​ ​ முன்​பெல்​லாம் பள்​ளி​க​ளில் ஆசி​ரி​யர்​க​ளைப் பார்த்​தால் மாண​வர்​க​ளுக்​குப் பயம் கலந்த மரி​யாதை வரு​வது இயல்​பாக இருந்​தது.​ அன்​றைய கால​கட்​டத்​தில் மாண​வர்​க​ளாக இருந்​த​வர்​கள் தற்​பொ​ழுது உயர்ந்த நிலைக்கு வந்த பின்​னர் தங்​க​ளின் இந்த உய​ரிய நிலைக்​குக் கார​ணம் ஆசி​ரி​யர்​கள்​தான் என்​பதை உணர்ந்து அவர்​க​ளுக்கு பல்​வேறு உத​வி​க​ளைச் செய்து வரு​வ​தை​யும்,​​ வீடு கட்​டிக் கொடுத்​துக் கொண்​டா​டி​ய​தை​யும் இன்​றைய ஒவ்​வோர் ஆசி​ரி​ய​ரும் ஆச்​ச​ரி​யத்​து​டன் பார்க்​கின்​ற​னர்.​

​ ​ ​ இன்றோ பெரும்​பா​லான மாண​வர்​கள் பள்​ளி​க​ளில்​கூட ஆசி​ரி​யர்​களை மதிப்​ப​தில்லை என்று ஆசி​ரி​யர் வட்​டா​ரங்​கள் வருத்​தத்​து​டன் தெரி​விக்​கின்​றன.​ கார​ணம் சினி​மா​வி​லும்,​​ தொலைக்​காட்சி நாட​கங்​க​ளி​லும் காமெடி நடி​கரை ஆசி​ரி​ய​ரா​கவோ,​​ பேரா​சி​ரி​ய​ரா​கவோ காட்டி,​​ அவர்​க​ளைக் கொண்டு ஆசி​ரி​யர்​களை எவ்​வ​ளவு மோச​மா​கச் சித்​தி​ரிக்க வேண்​டுமோ அந்த அள​வுக்கு மோச​மா​கக் காட்​டு​கின்​ற​னர்.​

​ ​ இக்​காட்​சி​க​ளைப் பார்த்​து​விட்டு மறு​நாள் பள்​ளிக்கு வரும் மாண​வ​னுக்​குத் தாமும் அதே​போல் செய்​தால் என்ன என்று எண்​ணத் தோன்​று​கி​றது.​ ​ விளைவு...​ மதிக்​கத்​தக்​க​வர் அல்ல ஆசி​ரி​யர் என்ற எண்​ணம்​தான் அவ​னுள் வளர்​கி​றது.​

இது சாதா​ர​ணம்.​ இப்​படி உள்​ளூர் ஊட​கங்​க​ளும்,​​ வெளி​நாட்டு ஊட​கங்​க​ளும் போட்டி போட்​டுக் காட்​டும் காட்​சி​கள் மாண​வ​னின் மன​தில் நஞ்சை விதைக்​கின்​றன.​ ​ ஊட​கங்​கள் வரு​வ​தற்கு முந்​தைய கால​கட்​டத்​தில் ஒரே பள்​ளி​யில் பயி​லும் மாணவ,​​ மாண​வி​கள் ஒரு​வ​ருக்​கொ​ரு​வர் பேசு​வ​தைத் தாங்​க​ளா​கவே தவிர்த்து வந்​த​னர்.​ ஆனால் இன்றோ ஊட​கங்​கள் எப்​ப​டிச் சந்​திக்​க​லாம்..​ அதற்​கான வழி​மு​றை​கள் என்ன...​ மாட்​டிக் கொண்​டால் தப்​பிப்​ப​தற்​கான வழி​கள் என்ன என்று அத்​த​னை​யும் பட்​டி​யல் போட்​டுக் ​ காண்​பிக்​கின்​றன.​ இப்​ப​டிப் பழத்தை உரித்து வாயிலே கொடுத்​தால் பாவம் அவர்​கள் என்ன செய்​வார்​கள்.​

​ ​ இப்​படி ஊடக வெளிச்​சத்​தில் கரைந்து பள்​ளி​க​ளில் வைத்தே மது அருந்​திய மாண​வர்​க​ளை​யும்,​​ ​ இன மோதல்​க​ளில் ஈடு​பட்ட மாண​வர்​க​ளை​யும்,​​ ​ பெண் ஆசி​ரி​யை​க​ளைக் கேலி செய்த மாண​வர்​க​ளை​யும்,​​ சக மாண​வி​க​ளைக் கிண்​டல் செய்த மாண​வர்​க​ளை​யும்,​​ ​ தேவை​யற்ற புகைப்​ப​டம் எடுத்த மாண​வர்​க​ளை​யும்,​​ படிக்​கா​மல் சுற்​றித்​தி​ரி​யும் மாண​வர்​க​ளை​யும் ஆசி​ரி​யர்​கள் தண்​டிக்க முடி​யாத நிலையே இன்று நில​வு​கி​றது.​

​ ​ அத​னை​யும் மீறித் தண்​டனை கொடுத்​தால் கல்​வித்​துறை அதி​கா​ரி​க​ளின் விசா​ர​ணைக்கு அந்த ஆசி​ரி​யர் உள்​பட வேண்​டும்.​ ​ இத​னைக்​கூட பொறுத்​துக் கொள்​ள​லாம்.​ ஆனால் தண்​டனை கொடுக்​கப்​பட்ட மாண​வர்​க​ளின் பெற்​றோர்​கள்,​​ ஏதோ,​​ இவ​ரா​வது தங்​க​ளது மகன் மீது பற்​றுக் கொண்டு தீய வழி​யில் செல்​லா​மல் திருத்​தி​னாரே என்று மகிழ்ச்சி கொள்​வ​தில்லை.​ மாறாக என் மகனை நீங்​கள் ​(நீ)​ எவ்​வாறு கண்​டிக்​க​லாம் என ஆசி​ரி​யர்​களை நோக்கி அம்​பினை எய்​வ​து​தான் ஆசி​ரி​யர்​க​ளால் ஏற்​றுக் கொள்ள முடி​யா​மல் இருப்​ப​தாக ஆசி​ரி​யர்​கள் தெரி​விக்​கின்​ற​னர்.​

​ ​ எனவே நடக்​கும் நிகழ்​வு​களை அமை​தி​யாக இருந்து கொண்டு வேடிக்கை பார்ப்​பதை தவிர ஆசி​ரி​யர்​க​ளுக்கு வேறு ஒன்​றும் செய்ய முடி​ய​வில்லை.​

நல்ல மதிப்​பெண் எடுக்க வேண்​டும் என்​ப​தற்​குக்​கூட மாண​வர்​களை ஆசி​ரி​யர்​கள் கண்​டிக்க முடி​ய​வில்லை.​ கார​ணம் இன்​றைய மாண​வர்​கள் எளி​தில் உணர்ச்​சி​வ​சப்​ப​டக்​கூ​டி​ய​வர்​க​ளாக இருக்​கின்​ற​னர்.

​ இவ்​வி​ஷ​யத்​தில் மாண​வர்​களை விட மாண​வி​க​ளைக் கண்​டிப்​ப​தில் ஆசி​ரி​யர்​க​ளுக்​குப் பெரும் அவ​தி​யுள்​ளது.​ இப்​ப​டிப் பள்​ளி​க​ளில் மனம் போன போக்​கில் நடந்து வரும் மாண​வர்​க​ளைக் கண்​டிப்​ப​தில் ஆசி​ரி​யர்​க​ளுக்கு இருக்​கும் நடை​மு​றைச் ​ சிக்​கல்​களை நாளி​தழ்​கள் மற்​றும் செய்தி ஊட​கங்​க​ளின் ​ மூலம் நன்கு தெரிந்து கொள்​ளும் மாண​வர்​கள்,​​ அதைத் தங்​க​ளுக்​குச் சாத​க​மாக்கி முடிந்​த​வரை தப்​பித்து வரு​கின்​ற​னர்.​

​ ​ மெட்​ரிக் பள்​ளி​க​ளில் ஏரா​ள​மான பணம் கொடுத்​துத் தங்​க​ளது பிள்​ளை​க​ளைச் சேர்க்​கும் பெற்​றோர்​கள்,​​ தொடர்ந்து பள்​ளி​க​ளின் ஆசி​ரி​யர்​க​ளோடு தொடர்​பு​கொண்டு விசா​ரித்து வரு​வ​தால் அங்கு மாண​வர்​கள் செய்​யும் தவறு குறைக்​கப்​ப​டு​கி​றது.​

ஆனால்,​​ அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​க​ளில் தங்​க​ளது பிள்​ளை​க​ளைச் சேர்க்​கும் பெற்​றோர்​க​ளில் பலர் சேர்க்க வரு​வ​தோடு தமது கடமை முடிந்​து​விட்​ட​தா​கக் கருதி பின்​னர் மாற்​றுச்​சான்​றி​தழ் வாங்​கு​வ​தற்​குத்​தான் வரு​கின்​ற​னர்.​

​ தங்​க​ளது மகன் அல்​லது மகள் பள்​ளிக்கு ஒழுங்​கா​கச் செல்​கி​றார்​களா?​ இல்​லையா?​ என்​பது கூட பல பெற்​றோர்​க​ளுக்​குத் தெரி​வ​தில்லை.​ இன்​னும் சொல்​லப்​போ​னால் சில​ருக்​குத் தங்​கள் பிள்​ளை​கள் எந்த வகுப்​பில் படிக்​கி​றார்​கள் என்​ப​து​கூ​டத் தெரி​வ​தில்லை என்​ப​து​தான் உச்​ச​கட்ட வேதனை.​

​ ​ இன்​றைய கால​நிலை மாற்​ற​மும்,​​ ஊட​கங்​க​ளின் போக்​கும் எந்த அள​வுக்கு மாண​வர்​க​ளின் நல​னைப் பாதித்து வரு​கின்​றன என்​பதைப் பெற்​றோர்​கள் உணர்ந்து,​​ அவர்​க​ளைத் தொடர்ந்து கண்​கா​ணிக்க வேண்​டும்.​ தொடர்ந்து பள்​ளி​க​ளின் ஆசி​ரி​யர்​கள்,​​ சக மாண​வர்​க​ளின் பெற்​றோர்​க​ளு​டன் தொடர்​பு​கொண்டு தனது பிள்​ளை​யின் நிலை என்ன என்​பதை அறிந்து கொள்ள முற்​பட வேண்​டும்.​

​ ​ எழுத்​த​றி​வித்​த​வனை இறை​வ​னா​கக்​கூட கருத வேண்​டாம்.​ மனி​த​னா​கக் கரு​தித் தங்​க​ளது பிள்​ளை​க​ளின் எதிர்​கால ​ வாழ்க்​கைக்​கா​கத்​தான் ஆசி​ரி​யர் செயல்​ப​டு​கி​றார் என்ற எண்​ணத்​து​டன் ஒவ்​வொரு பெற்​றோ​ரும் செயல்​பட்​டால் எதிர்​கால இந்​தி​யா​வின் நம்​பிக்கை நட்​சத்​தி​ர​மாக ஒவ்​வொ​ரு​வ​ரின் மக​னும்,​​ மக​ளும் உயர்​வார்​கள்.​ பெற்​றோர்​கள் சற்று சிந்​திப்​பார்​களா?

1 பேரு சொன்னாங்க:

said...

//இன்றோ ஊட​கங்​கள் எப்​ப​டிச் சந்​திக்​க​லாம்..​ அதற்​கான வழி​மு​றை​கள் என்ன...​ மாட்​டிக் கொண்​டால் தப்​பிப்​ப​தற்​கான வழி​கள் என்ன என்று அத்​த​னை​யும் பட்​டி​யல் போட்​டுக் ​ காண்​பிக்​கின்​றன//

:-((