Wednesday, July 15, 2009

ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா

இலங்கை, மலேசியா உட்பட பல நாடுகளில் எதிர்வரும் 22ஆம் திகதி சூரிய கிரகணம் ஏற்படும் போது சுனாமி முதலான இயற்கை அனர்த்தங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக எண் கணித மேதை நம்புங்கள் நாராயணன் கணிப்பு வெளியிட்டுள்ளார்.

கிரகணங்களால் ஏற்படக்கூடிய அசம்பாவித சம்பவங்கள் பற்றி எண் கணித ஜோதிடர் நம்புங்கள் நாராயணன் தெரிவிக்கையில்,

கிரகணம் ஆரம்பிக்கும் சமயத்தில் உள்ள நட்சத்திரம் மற்றும் ராசிக்கு ஏற்ப கிரகணத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அமையும். 9 கிரகங்களும், 12 ராசிகளும் சுற்றி வருவதால் பலவித மாற்றங்களை ஒவ்வொருவரின் வாழ்க்கையில் காணலாம். எதிர்வரும் 22ஆம் திகதி முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. டிசம்பர் 31ஆம் திகதி பகுதி சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. அடுத்த ஆண்டு (2010) ஜனவரி மாதம் 15ஆம் திகதி பகுதி சூரிய கிரகணம் ஏற்படுகின்றது. இது காலை 11.25 மணிக்கு ஆரம்பமாகி 3.15 மணிக்கு நிறைவடைகின்றது. இந்த கிரகணம் உத்தராடம் நட்சத்திரத்தில் தனு ராசியில் சம்பவிக்கிறது.

கிரகணங்கள் ஏற்படும் நேரம், நட்சத்திரம், ராசிக்கு ஏற்ப அதன் தாக்கம் 6 மாதத்தில் இருந்து 3 ஆண்டுகள் வரையிலிருக்கும். இம்மாதம் 22ஆம் திகதி முழு சூரிய கிரகணம் காலை 5.29 மணிக்கு ஆரம்பித்து 7.18 மணி வரையில் நீடிக்கும். கிரகணம் பூச நட்சத்திரத்தில் நிகழ்கிறது. இது உகந்த காலமாக அமையவில்லை.

எனவே, பல்வேறு இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். சூரிய கிரகண காலத்தில் சந்திரன் பூமியில் உள்ள கிரகண பாதையில் பூமிக்கு அடியில் இருக்கும் "டெட்டானிக் பிளேட்"டின் ஆகர்ஷன சக்தியினால் பூகம்பம், சுனாமி பேரலை போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய வாய்ப்பு இருக்கும். அரசியல் குழப்பமும் நிகழலாம். மலேசியா, சிங்கப்பூர், மாலைதீவு, அவுஸ்திரேலியா, மொரிஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளிலும் சூரிய கிரகணத்தினால் இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

2 பேரு சொன்னாங்க:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

said...

நிபுணர்கள் நடத்திய ஆய்வில் பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னா அருகில் உள்ள தரிகனா என்ற ஊரே முழுச் சூரிய கிரகணத்தை தெளிவாகவும், துல்லியமாகவும் அவதானிப்பதற்கு மிகப் பொருத்தமான இடம் என்று தெரிய வந்துள்ளது