Tuesday, June 2, 2009

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்! ஏன்?

கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம், என்.எல்.சி. நிறுவனம், தொழிலாளர் மண்டல ஆணையம் ஆகிய முத்தரப்பு பேச்சுவார்த்தை டெல்லியில் நடந்தது. இதில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ புத்தகம் வழங்குவது, மாதம் ரூ.750 சம்பள உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி 200 பேருக்கு மருத்துவ அடையாள புத்தகமும், சம்பள உயர்வும் வழங்கப்பட்டது. எனினும், பெரும்பாலானோருக்கு இந்த சலுகைகள் வழங்கப்படவில்லை.

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் சுமார் 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக, கடந்த 28ம் தேதி சங்கத்தின் சிறப்புப் பேரவைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் வரும் 4ம் தேதி பேரணியாக புறப்பட்டு கோரிக்கை அடங்கிய மனுவை தலைமை அலுவலகத்தில் கொடுப்பது என்றும், 15ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதுகுறித்து ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்க பொதுசெயலாளர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறப்புப் பேரவைக் கூட்டத்தின் முடிவு படி 4ம் தேதி பேரணியும், 15ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டமும் நடைபெறும்" என்று அறிவித்துள்ளார். நியாம்தானே?

0 பேரு சொன்னாங்க: