Monday, June 1, 2009

‌‌பஸ் கட்டணத்தை குறைக்காவிட்டால் பாமக தொடர் போராட்டம்

மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு பஸ் கட்டணம் திடீரென குறைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த பஸ் கட்டண குறைப்பை தொடர்ந்து அமல்படுத்த வலியுறுத்தி பாமக சார்பில் நேற்று தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, பஸ் கட்டண குறைப்பை அமல் படுத்தக்கோரி தொடர் முழக்கங்கள் மற்றும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் ஜி.கே. மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:மக்களவை தேர்தலுக்கு முன்பாக தமிழக அரசு பஸ் கட்டணத்தை திடீரென குறைத்தது. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்ததால் இந்த பஸ் கட்டண குறைப்பு உடனடியாக கைவிடப்பட்டது. அரசுக்கு உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை இருந்தால் இந்த கட்டணக் குறைப்பை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையெனில், இந்த கட்டணக் குறைப்பு தேர்தலுக்காக செய்யப்பட்ட நாடகம் என்பது உறுதியாகிவிடும்.

சென்னையில் இயங்கும் 2,700 பேரூந்துகளில் 500 பேரூந்துகளை தவிர, மற்ற பஸ்களில் விதவிதமான பெயர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. எனவே அனைத்து பேரூந்துகளிலும் ஒரே விதமான கட்டணத்தை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில் பாமக தொடர்ந்து போராட்டம் நடத்தும் என அவர் கூறினார்.

0 பேரு சொன்னாங்க: