Friday, June 5, 2009

காது குளிரக் கேட்பேன் - காதல் இல்லையென்று!

விடிந்த நேரத்தின்
விடியாத அறைக்குள்
சிரித்த முகம் நினைவில்...

அடுத்த அறை ஜன்னல்
அடிக்கடி திறந்துப் பார்ப்பேன் - வெளியில்
நீ இருப்பாயோயென்று!

முன்பெல்லாம் விட
நிறைய நேரம் கண்ணாடியில் - என
அம்மா திட்டுகிறாள்!

அப்பா சிரிப்பதன் அர்த்தம்,
சிலநேரம் அன்பாகவும்!
பலநேரம் அவஸ்தையாகவும்!!

உன்னால் மட்டுமே முடியுமென்று
எங்கள் இருவருக்குமேத் தெரியும்
நாங்கள் சொல்லி யார்தான்
நம்பிவிட போகிறார்கள்?

இன்னும் எத்தனை நாட்கள்?
அச்சேறும் நீ - வீதியில்
அரங்கேறும் நாள்தான்

என்னைப் பற்றிய கிசுகிசுக்கள்
‘எனக்கு முன்னமே தெரியும்
அவர்கள் நண்பர்கள் தானென்று'
காது குளிரக் கேட்பேன் - என்
நண்பனின் மணவோலையே!

0 பேரு சொன்னாங்க: