Wednesday, June 3, 2009

முதல் பெண் மக்களவைத் தலைவர் திருமதி.மீரா குமார் - ஓர் அலசல்

பாட்னாவில் கடந்த 1945ஆம் ஆண்டு பிறந்த மீரா குமாருக்கு தற்போது 64 வயதாகிறது. சட்டம் படித்த அவர், ஆங்கில இலக்கியத்தில் முதுநிலைப் பட்டமும் முடித்துள்ளார்.
கடந்த 1973ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார். ஸ்பெயின், இங்கிலாந்து, மொரிஷியஸ் நாடுகளில் இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.
இந்திய வெளியுறவுப் பணி (IFS) ஆற்றி வந்த மீரா குமார் கடந்த 1985ல் தமது வேலையை ராஜினாமா செய்து விட்டு முதல்முறையாக தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி.யானார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னார் தொகுதியில் இருந்து கடந்த 1985ஆம் ஆண்டு முதல்முறையாக மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். 1996, 1998ஆம் ஆண்டுகளில் டெல்லி கரோல்பாக் தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். 1999ஆம் ஆண்டு அதே தொகுதியில் வெற்றிவாய்ப்பை இழந்தார். 2004ஆம் ஆண்டு தமது தந்தை ஜெகஜீவன்ராமின் தொகுதியான சசாராம் தொகுதியில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

இடையில் 2000 முதல் 2002ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியிருந்தார். கடந்த 2004ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் சமூகநீதி மற்றும் அதிகாரமயமாக்கல் துறை கேபினட் அமைச்சராகப் பொறுப்பேற்றார். 5 முறை எம்.பி-யாகவும், கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் சமூக நீதித் துறை அமைச்சராகவும் பணியாற்றிய மீரா குமார், நாட்டின் முதல் பெண் மக்களவைத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ஜெகஜீவன்ராமின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தாயார் பெயர் இந்திராணி தேவி. தந்தை ஜெகஜீவன்ராம் சுதந்திரப் போராட்ட தியாகியும் கூட. மீரா குமாரின் கணவர் மஞ்சுல் குமார், உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. தற்போது மீண்டும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் நீர்வள ஆதாரத்துறை அமைச்சராகப் பதவியேற்று, மே 29ஆம் தேதி அத்துறைக்கான பொறுப்பை ஏற்ற மறுநாளே மக்களவைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் இறுதி செய்யப்பட்டார். இதையடுத்து தமது மத்திய அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்து மக்களவைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார்.

பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் புதிய மக்களவையின் தலைவராக போட்டியின்றி மீரா குமார் தேர்வு செய்யப்பட்டு, இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் பணி சிறக்க வாழ்த்துவோம்.........

0 பேரு சொன்னாங்க: