Sunday, November 29, 2009

நீலகிரி மரணத்தின் "ஓலகிரி" ஆகாமல் மாற வழி

அதீத ஆபத்தையும், இழப்பையும் உண்டாக்கியுள்ள, உண்டாக்கி வரும் நிலச்சரிவுகள் எப்படி ஏற்படுகின்றன? என்ற கேள்விக்கு பல விதமான உணர்ச்சிகரமான விடைகள் மிகுந்த ஆத்திரத் துடன் நமக்குக் கிடைத்தாலும், விஞ்ஞானப் பூர்வமான, உணர்வுப் பூர்வமான விடை என்ன? என்பதையும் நாம் அவசியம் பார்க்க வேண்டும்.

பொதுவாக எந்த மலைப் பிரதேசத்திலும், மலைப்பகுதியின் பரந்த மையப் பகுதிகளில் சரிவு நிகழ்வதே கிடையாது. அதே சமயம் மலையின் சரிவுப் பகுதிகளில் தான் இது அதிகம் நிகழ்கிறது. இதற் கான காரணங்கள் தான் என்னென்ன?முதலாவதாக மலைகளில் மட்டுமே இந்தச் சரிவுகள் நிகழ்வதிலிருந்து நமக்கு ஒரு உண்மை புலப்படும். அதாவது பாறைகளால் உருவாகியுள்ள மலைப் பகுதிகளின் மேல், குறிப்பிட்ட உயரத்தில், ஒரு அடி முதல் 20, 40 அடிகள் வரை என்று மண் மேவியுள்ளது. இது பல நூறு வருடங்களாக இறுகிப் படிந்துள்ளது.இந்நிலையில் மழைக் காலம் துவங்கி மழை விட்டு விட்டோ, தொடர்ந்தோ பெய் யும் போது மழை நீர் உட் புகுந்து, உட்புகுந்து மண் பகுதியை ஆக்கிரமிக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு தான் மிக முக்கிய நிகழ்வு.இந்த மழைநீர் சிறிது ஆழம் சென்ற பிறகு தொடர் மழை இல்லை என்றால் மீண்டும் அந்த மண் பகுதி காய்ந்து இயல்பு நிலைக்கு வந்துவிடும்.பிறகு சிறிது காலம் கழித்து மழை என்றாலும் கவலை இல்லை.

அப்படி இல்லாமல் தொடர் மழை அதுவும் கனமழை அதுவும், வெயிலே காணாத நிலை என்றால் நிச்சயம் நிலச்சரிவுக்குக் கொண் டாட்டம் தான். எப்படி?15 முதல் 20 அடி உயரத்திலான மண்பகுதிக்குள் மழை நீர் அந்த இடத்தின் மூலமோ பக்கத்து இடங்களின் மூலமோ அடைந்து இந்த அளவு மண் முழுவதுமே ஈரமாக்கப்படும் போது முற்றிலும் இதன் அடிப்பகுதியில் தாங்கும் பாறையின் தொடர்பை இழந்து விடுகிறது. உடனடியாக மரம், செடி, வீடுகளுடன் சரிவை அடைகிறது. இது தவிர்க்க இயலாத ஒன்று.காரணம் மரம், செடி, வளர்க்கும் போதோ, வீடுகள் கட்டும் போதோ அந்த இடத்தின் மண் ஆதிக்க உயரம் என்ன என்பதை யாரும் அறிய முற்படுவதே இல்லை.அவசரம், மேலும் அறியாமை, குருட்டு நம்பிக்கை இதற்கான காரணங்கள். ஆக மழை தொடர்ந்து தாக்கும் போது ஈரமான முழுப் பகுதியும் பாறைகளுடனான தொடர்பை இழந்துவிடுகிறது. சரிகிறது.

நிலைமை இப்படி இருக்க, தற்போதைய சரிவுகளின் தீவிரத்திற்கான மற்ற காரணங் களோ மிக மிக பயமூட்டுவதும், சிந்திக்க வைப்பதுமானது. அது என்ன?அதுதான் 2004க்குப் பிறகான, அதாவது சுனாமி தாக்குதலுக்குப் பிறகான புவிநிலை. அப்போது கடலுக்கடியில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப் பும் அதனால் வெளியான 1400 கி.மீ., நீள 200 கி.மீ., அகல 5000 அடி உயர தீவு வடிவான லாவா, கேம்மா, வெளிப்பட் டால் உருவான கடலடித் தீவின் போது தென் ஆசியப் பகுதி முழுவதும் ஏற்பட்ட நிலத்தடி அதிர்வு மறுக்க முடியாத மாபெரும் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது என்பது உண்மையே.கடந்த பல மாதங்கள் முன், கூட இதே நீலகிரி பகுதியில் வெப்ப வாயும், புகையும், சத்தமும் கூடிய வெடிப்பு ஏற்பட்டு பலமுறை கிலி உண்டாக்கியது நினைவுக்கு வரலாம்.

இதே போல் பல இடங்களிலும் கூட, இன்றைய தேதி வரையிலும் கூடத் தொடரும் நிலநடுக்கம் என்ற செயலால் பூமியின் மேற்பரப்பு முழுவதுமே நடுக்கத்துக்கும் சிறு சிறு அசைவுக்கும் ஆட்பட்டே வருகிறது என்பதே உண்மை. இவ்வகை நடுக்கம் என்பது பாறை மீது படிந்திருக்கும் மண்பகுதியை தளர்த்தவும், மழை நீர் உட்புக எளிமைப் படுத்தவும் உதவுகிறது என்பதும் பேருண்மை.

ஆக இவற்றுடன் மலைப் பகுதிகளில் முக்கியமாக பாறைகளுக்கு வெடி வைத் தல், மழை நேரங்களில் அதிக பாரத்துடனான வாகன ஓட்டம், கட்டுமானப் பொருட் களுடனான சவாரி என்பவையும் சரிவுக்கு சலாம் போடுகின்றன.அதிர்வால் ஏற்பட்ட பாறைச் சரிவை நீக்க மீண்டும் வெடிகளையே வெடிக்கின்றனர் என்பது வேடிக்கை தான்.இந்நிலையில் மழைச் சரிவுகளில் மரங்கள் வளர்ப்பது என்பது நல்லது என்ற கூற்றை விட உயரம் குறைந்த பயிர் களை வளர்ப்பதே சாலச்சிறந் தது.ஏனென்றால் மழைக்காலங் களில் மிகவும் ஆபத்தைச் சந்திக்கப் போகும் சரிவுப் பகுதிகளில் மழை நீருடன் கனமான மரங்களும் சேரும்போது மண்பகுதி அடியோடு, மிகுந்த, பாதிப்போடு, வேகத் தோடு சரியும் என்பதுடன் இதன் விழும் தொலைவும் கூடும் என்பதே நிஜம். அங்கும் புதியசரிவை கனமான பெரிய மரங்கள் உண்டாக்கும்.

தீர்வுகள் தான் என்ன?மலைப்பகுதிகளின் சரிவுப் பகுதிகளில் மழைநீர் நிற்கும் நேரத்தையும் மிகவும் குறைப்பது. அதற்கான சரியான வடிகால் பகுதிகளை அமைப்பது. இதன் மூலம் குறுகிய அளவிலான ஆழத்தை நீர் அடையும் போதே, நிலம் காக்கப்படும்.குறிப்பாக மழைப்பாதைகளின் மேற்புறங்களில் கசிவுநீர் செங்குத்தாக விழாமல் பக்கவாட்டுப்பகுதிகளில் கடத்தி விழ வைப்பது.எந்த வகையிலும் மழைநீரை அதிகம் உட்புறம் எடுத்துச் செல்லும் படியான வகையிலும், ஈரத்தை நிறுத்தி வைக்கும் வகையிலும் இல்லாமல் இருக்க மரம், தாவரம் சாலைச் சரிவுகளில் வளர்ப்பதை தடுப்பது. பாறை மீது மண் இல்லாத நிலை ஏற்படும் வரை சரிவும் நீடிக்கும். அதிக பாரம் ஏற்றிய வாகனங்களை அனுமதிக்கக் கூடாது. கட்டுப்பாடு தேவை ரயில் பாதையை தடை செய்து விஞ்ச் அமைப்பது. தனித்த பாறைகளை அகற்றுவது. சாலைகளை அதிக கனத்துடன் அமைக்காதிருப்பது. மினி பஸ் விடுவது.

மழை சீசன்களில் வாகனத்தைக் குறைப்பது. இடிதாங்கிகளை அமைப்பது, 50 சதுர கி.மீ., கட்டடப்பகுதி என்றால் பெரும்பாலான பகுதி கட்டட அடியில் ஈரத்தை தொடர்ந்து காத்து வருவது ஆபத்தை உண்டாக்கிறது. இதன் மூலம் அதிக வெயிலில் மண் இறுகி மீண்டும் கூடுதல் பலம் பெறும் வாய்ப்பு தடையாகிறது. அடைமழையின் போது மண்ணின் தளர்வு நிலை தடுக்கப்பட வேண்டும். எனவே கட்டுமானத்துக்குத் தடை அவசியம். மலைப்பகுதிகளில் வெடி வெடிப்பதை தடுப்பதன் மூலம் காய்ந்த மண் பகுதியின் இறுக்கம் பாதுகாக்கப்படும். இல்லையேல் தளர்ந்து விடும்.இப்பகுதிகளில் கட்டடம் கட்டும் முன்பாக கட்டடத் திற்கான மொத்தப்பரப்பின் அடித்தளத்திற்காக மண் ஆழத்தையுமே பார்ப்பது என்பது இயலாத காரியம் எனவே சாய்வுப் பகுதிகளை கட்டடம் கட்டும் பகுதியாக அனுமதிக்காமல் இருப்பது.

டன் பாறையை உடைத்தும், அடித்தளமிடல் வேண்டும். தொடர்ந்து வந்த பாதிப்புகளால் சுற்றுலா பயணிகளின் வரவு மிக குறையும் போது பேராசையால் முதலீடு செய்த பல நிறுவனங்களுக்கு தொடர்ந்து நட்டமும், ஈ ஓட்டும் நிலையும் தான் ஏற்படும்.முதலீடு விரையமாகும். பெரிய கட்டடங்களின் முதலீட்டுக்கும், பாதுகாப்புக்கும் உறுதியே கூற முடியாது.உறுதியான கட்டடங்களுக்கும், மரங்களுக்கும், மேலிருந்து சரியும் கட்டடம் மற்றும் மரங்கள் இழப்பை ஏற்படுத்துகின்றன.ஓட்டல் பிற தங்குமிட கழிவு நீர் வடிகாலை கசியாத குழாய் மூலம் தூரத்தில் வெளியேற்றுவது அவசியம்.இனி, சிந்தித்து செயல்படுவதின் மூலமே நீலகிரி, "மரணத்தின் ஓலகிரி" ஆகாமல் தடுக்கப்படும்.

5 பேரு சொன்னாங்க:

said...

இன்றைய காலத்திற்கு தேவையான மிக நல்ல பதிவு.

said...

Good one, thanks for sharing.

said...

நன்றி சுந்தர், சங்கேமுழங்கு.

said...

நிலச்சரிவுகளைத் தடுக்கும் வழிமுறைகள் பலவற்றை அறியக் கூடியதான நல்லபதிவு.

said...

நன்றி மாதேவி.