Thursday, September 10, 2009

பள்ளியில் மின்கசிவு புரளி - 5 மாணவிகள் பலி!

டில்லியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மின்சார கசிவு ஏற்பட்டதாக வந்த புரளியையடுத்து பள்ளியிலிருந்து வெளியேறிய மாணவ மாணவிகள், நெரிசலில் சிக்கி 5 மாணவிகள் பலியாயினர். 30 பேர் படுகாயமுற்றனர். மாணவிகள் இறந்த சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசாருக்கும், பெற்றோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மின்சாரக்கசிவு ஏற்பட்டதாக தகவல் : டில்லியில் பெய்த பலத்த மழையால் நகர் முழுவதும் மேக மூட்டங்கள் காணப்பட்டது. கஜூரிகாஸ் என்ற பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வழக்கம் போல் அவரவர் பாடங்களை கவனித்து கொண்டிருந்தனர். சில வகுப்புகளில் தேர்வு துவங்கிய நிலையில் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர் . இந்நி‌லையில் பள்ளியை சூழ்ந்து இருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்திருப்பதாகவும், இது பள்ளி கட்டடத்தில் பாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்றும் வதந்தி பரவியது.

30 பேர் காயம் : 5 பேர் கவலைக்கிடம் : இதனையடுத்து மாணவ, மாணவிகள் அனைவரும் பள்ளியை ‌விட்டு வெளியேறுமாறு பள்ளி நிர்வாகம் அறிவித்தது. அப்போது ஏற்பட்ட நெரிசிலில் சிக்கி 5 மாணவர்கள் பலியாயினர். படுகாயமுற்ற 30 மாணவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்கள் 14 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். அவர்களில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

போலீசார் மீது கல்வீச்சு : பள்ளியில் மாணவிகள் இறந்த செய்தி நகர் முழுவதும் பரவியது. இதனை கேள்விப்பட்ட பெற்றோர்கள் அவசர, அவசரமாக பள்ளி முன் வந்து குவிந்தனர். தங்களது குழந்தைகளை அழைத்து கொண்டு புறப்பட்டனர். கூடி நின்ற பெற்றோர்கள் எதிர்ப்பு கோஷங்கள‌ை எழுப்பினர். இதனையடுத்து போலீசாருக்கும், பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாருக்கும், பெற்றோர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் மீது கல் வீசப்பட்டது. பின்னர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். குழந்தைகள‌ை இழந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகம் முன்பு கதறி அழுதபடி நின்றனர். பள்ளி வளாகம் மற்றும் ஆஸ்பத்திரிகளில் பெரும் சோகம் உருவாகியுள்ளது.

முதல்வர் ஷீலா தீட்ஷித் விரைந்தார் : டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் சம்பவ இடத்தை பார்வையிட்டு, ஆஸ்பத்திரி சென்று காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய முதல்வர், நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக தலா ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும் என்றார். சம்பவம் குறித்து உயர் மட்ட குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2 பேரு சொன்னாங்க:

said...

படிக்கவே வருத்தமாக இருக்கிறது....

said...

:(