Monday, July 21, 2008

காத்திருப்பு

விடிந்த நேரத்தின்
விடியாத அறைக்குள்
தலையணை முகம்புதைத்து
தவித்த நாள் எத்தனையோ!

அடுத்த அறை ஜன்னல்
அடிக்கடி திறந்துப் பார்ப்பேன் - வெளியில்
நீ நிற்பாயோவென்று!

முன்பெல்லாம் விட
நிறைய நேரம் கண்ணாடியில் - என
அம்மா திட்டுகிறாள்!

அப்பா சிரிப்பதன் அர்த்தம்,
சிலநேரம் அன்பாகவும்!
பலநேரம் அவஸ்தையாகவும்!!

எல்லாம் உன்னாலென்று
எனக்கு மட்டுமே தெரியும்!
என்ன நடக்குமோ,
உறுதியில்லை உள்ளத்தில்!

இன்னும் எத்தனை நாட்கள்?
த்பால்காரர் என் வாசல் நிற்க!!

வெளிநாட்டுப் படிப்பென்றால் சும்மாவா?

0 பேரு சொன்னாங்க: